88) Sūrat Al-Ghāshiyah

Printed format

88) سُورَة الْغَاشِيَه

Hal 'Atāka Ĥadīthu Al-Ghāshiyahi 88-1 சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
Wujūhun Yawma'idhin Khāshi`ahun 88-2 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். وُجُوه ٌ ٌ يَوْمَئِذٍ خَاشِعَة ٌ
`Āmilatun Nāşibahun 88-3 அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். عَامِلَة ٌ نَاصِبَة ٌ
Taşlá Nārāan Ĥāmiyahan 88-4 கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். تَصْلَى نَاراً حَامِيَة ً
Tusqá Min `Aynin 'Āniyahin 88-5 கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். تُسْقَى مِنْ عَيْن ٍ آنِيَة ٍ
Laysa Lahum Ţa`āmun 'Illā Min Đarī`in 88-6 அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. لَيْسَ لَهُمْ طَعَام ٌ إِلاَّ مِنْ ضَرِيع ٍ
Lā Yusminu Wa Lā Yughnī Min Jū`in 88-7 அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. لاَ يُسْمِنُ وَلاَ يُغْنِي مِنْ جُوع ٍ
Wujūhun Yawma'idhin Nā`imahun 88-8 அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். وُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ نَاعِمَة ٌ
Lisa`yihā Rāđiyahun 88-9 தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும். لِسَعْيِهَا رَاضِيَة ٌ
Fī Jannatin `Āliyahin 88-10 உன்னதமான சுவர்க்கச் சோலையில்- فِي جَنَّةٍ عَالِيَة ٍ
Lā Tasma`u Fīhā Lāghiyahan 88-11 அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை. لاَ تَسْمَعُ فِيهَا لاَغِيَة ً
Fīhā `Aynunriyahun 88-12 அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு. فِيهَا عَيْن ٌ جَارِيَة ٌ
Fīhā Sururun Marfū`ahun 88-13 அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு. فِيهَا سُرُر ٌ مَرْفُوعَة ٌ
Wa 'Akwābun Mawđū`ahun 88-14 (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும். وَأَكْوَاب ٌ مَوْضُوعَة ٌ
Wa Namāriqu Maşfūfahun 88-15 மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்- وَنَمَارِقُ مَصْفُوفَة ٌ
Wa Zarābīyu Mabthūthahun 88-16 விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு. وَزَرَابِيُّ مَبْثُوثَة ٌ
'Afalā Yanžurūna 'Ilá Al-'Ibili Kayfa Khuliqat 88-17 (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- أَفَلاَ يَنْظُرُونَ إِلَى الإِبِلِ كَيْفَ خُلِقَتْ
Wa 'Ilá As-Samā'i Kayfa Rufi`at 88-18 மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ
Wa 'Ilá Al-Jibāli Kayfa Nuşibat 88-19 இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
Wa 'Ilá Al-'Arđi Kayfa Suţiĥat 88-20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) وَإِلَى الأَرْضِ كَيْفَ سُطِحَتْ
Fadhakkir 'Innamā 'Anta Mudhakkirun 88-21 ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّر ٌ
Lasta `Alayhim Bimusayţirin 88-22 அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِر ٍ
'Illā Man Tawallá Wa Kafara 88-23 ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ- إِلاَّ مَنْ تَوَلَّى وَكَفَرَ
Fayu`adhdhibuhu Allāhu Al-`Adhāba Al-'Akbara 88-24 அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான். فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الأَكْبَرَ
'Inna 'Ilaynā 'Īābahum 88-25 நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ
Thumma 'Inna `Alaynā Ĥisābahum 88-26 பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது. ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
Next Sūrah