Hal 'Atāka Ĥadīthu Al-Ghāshiyahi  | 88-1 சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? | هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ |
Wujūhun Yawma'idhin Khāshi`ahun  | 88-2 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். | وُجُوه ٌ ٌ يَوْمَئِذٍ خَاشِعَة ٌ |
`Āmilatun Nāşibahun  | 88-3 அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். | عَامِلَة ٌ نَاصِبَة ٌ |
Taşlá Nārāan Ĥāmiyahan  | 88-4 கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். | تَصْلَى نَاراً حَامِيَة ً |
Tusqá Min `Aynin 'Āniyahin  | 88-5 கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். | تُسْقَى مِنْ عَيْن ٍ آنِيَة ٍ |
Laysa Lahum Ţa`āmun 'Illā Min Đarī`in  | 88-6 அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. | لَيْسَ لَهُمْ طَعَام ٌ إِلاَّ مِنْ ضَرِيع ٍ |
Lā Yusminu Wa Lā Yughnī Min Jū`in  | 88-7 அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. | لاَ يُسْمِنُ وَلاَ يُغْنِي مِنْ جُوع ٍ |
Wujūhun Yawma'idhin Nā`imahun  | 88-8 அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். | وُجُوه ٌ ٌ يَوْمَئِذ ٍ نَاعِمَة ٌ |
Lisa`yihā Rāđiyahun  | 88-9 தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும். | لِسَعْيِهَا رَاضِيَة ٌ |
Fī Jannatin `Āliyahin  | 88-10 உன்னதமான சுவர்க்கச் சோலையில்- | فِي جَنَّةٍ عَالِيَة ٍ |
Lā Tasma`u Fīhā Lāghiyahan  | 88-11 அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை. | لاَ تَسْمَعُ فِيهَا لاَغِيَة ً |
Fīhā `Aynun Jāriyahun  | 88-12 அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு. | فِيهَا عَيْن ٌ جَارِيَة ٌ |
Fīhā Sururun Marfū`ahun  | 88-13 அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு. | فِيهَا سُرُر ٌ مَرْفُوعَة ٌ |
Wa 'Akwābun Mawđū`ahun  | 88-14 (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும். | وَأَكْوَاب ٌ مَوْضُوعَة ٌ |
Wa Namāriqu Maşfūfahun  | 88-15 மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்- | وَنَمَارِقُ مَصْفُوفَة ٌ |
Wa Zarābīyu Mabthūthahun  | 88-16 விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு. | وَزَرَابِيُّ مَبْثُوثَة ٌ |
'Afalā Yanžurūna 'Ilá Al-'Ibili Kayfa Khuliqat  | 88-17 (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- | أَفَلاَ يَنْظُرُونَ إِلَى الإِبِلِ كَيْفَ خُلِقَتْ |
Wa 'Ilá As-Samā'i Kayfa Rufi`at  | 88-18 மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், | وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ |
Wa 'Ilá Al-Jibāli Kayfa Nuşibat  | 88-19 இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், | وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ |
Wa 'Ilá Al-'Arđi Kayfa Suţiĥat  | 88-20 இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) | وَإِلَى الأَرْضِ كَيْفَ سُطِحَتْ |
Fadhakkir 'Innamā 'Anta Mudhakkirun  | 88-21 ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். | فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّر ٌ |
Lasta `Alayhim Bimusayţirin  | 88-22 அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். | لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِر ٍ |
'Illā Man Tawallá Wa Kafara  | 88-23 ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ- | إِلاَّ مَنْ تَوَلَّى وَكَفَرَ |
Fayu`adhdhibuhu Allāhu Al-`Adhāba Al-'Akbara  | 88-24 அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான். | فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الأَكْبَرَ |
'Inna 'Ilaynā 'Īābahum  | 88-25 நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. | إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ |
Thumma 'Inna `Alaynā Ĥisābahum  | 88-26 பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது. | ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ |