'Idhā Ash-Shamsu Kūwirat  | 81-1 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது | إِذَا الشَّمْسُ كُوِّرَتْ |
Wa 'Idhā An-Nujūmu Ankadarat  | 81-2 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- | وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ |
Wa 'Idhā Al-Jibālu Suyyirat  | 81-3 மலைகள் பெயர்க்கப்படும் போது- | وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ |
Wa 'Idhā Al-`Ishāru `Uţţilat  | 81-4 சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது- | وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ |
Wa 'Idhā Al-Wuĥūshu Ĥushirat  | 81-5 காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது- | وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ |
Wa 'Idhā Al-Biĥāru Sujjirat  | 81-6 கடல்கள் தீ மூட்டப்படும்போது- | وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ |
Wa 'Idhā An-Nufūsu Zūwijat  | 81-7 உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது- | وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ |
Wa 'Idhā Al-Maw'ūdatu Su'ilat  | 81-8 உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- | وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ |
Bi'ayyi Dhanbin Qutilat  | 81-9 "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று- | بِأَيِّ ذَنْب ٍ قُتِلَتْ |
Wa 'Idhā Aş-Şuĥufu Nushirat  | 81-10 பட்டோலைகள் விரிக்கப்படும் போது- | وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ |
Wa 'Idhā As-Samā'u Kushiţat  | 81-11 வானம் அகற்றப்படும் போது- | وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ |
Wa 'Idhā Al-Jaĥīmu Su``irat  | 81-12 நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது- | وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ |
Wa 'Idhā Al-Jannatu 'Uzlifat  | 81-13 சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது- | وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ |
`Alimat Nafsun Mā 'Aĥđarat  | 81-14 ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும். | عَلِمَتْ نَفْس ٌ مَا أَحْضَرَتْ |
Falā 'Uqsimu Bil-Khunnasi  | 81-15 எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக- | فَلاَ أُقْسِمُ بِالْخُنَّسِ |
Al-Jawāri Al-Kunnasi  | 81-16 முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்), | الْجَوَارِ الْكُنَّسِ |
Wa Al-Layli 'Idhā `As`asa  | 81-17 பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், | وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ |
Wa Aş-Şubĥi 'Idhā Tanaffasa  | 81-18 மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. | وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ |
'Innahu Laqawlu Rasūlin Karīmin  | 81-19 நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். | إِنَّه ُُ لَقَوْلُ رَسُول ٍ كَرِيم ٍ |
Dhī Qūwatin `Inda Dhī Al-`Arshi Makīnin  | 81-20 (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். | ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِين ٍ |
Muţā`in Thamma 'Amīnin  | 81-21 (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். | مُطَاع ٍ ثَمَّ أَمِين ٍ |
Wa Mā Şāĥibukum Bimajnūnin  | 81-22 மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். | وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُون ٍ |
Wa Laqad Ra'āhu Bil-'Ufuqi Al-Mubīni  | 81-23 அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். | وَلَقَدْ رَآهُ بِالأُفُقِ الْمُبِينِ |
Wa Mā Huwa `Alá Al-Ghaybi Biđanīnin  | 81-24 மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். | وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِين ٍ |
Wa Mā Huwa Biqawli Shayţānin Rajīmin  | 81-25 அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. | وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَان ٍ رَجِيم ٍ |
Fa'ayna Tadh/habūna  | 81-26 எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்? | فَأَيْنَ تَذْهَبُونَ |
'In Huwa 'Illā Dhikrun Lil`ālamīna  | 81-27 இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். | إِنْ هُوَ إِلاَّ ذِكْر ٌ لِلْعَالَمِينَ |
Liman Shā'a Minkum 'An Yastaqīma  | 81-28 உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). | لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ |
Wa Mā Tashā'ūna 'Illā 'An Yashā'a Allāhu Rabbu Al-`Ālamīna  | 81-29 ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். | وَمَا تَشَاءُونَ إِلاَّ أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ |