Ar-Raĥmānu  | 55-1 அளவற்ற அருளாளன், | الرَّحمَانُ |
`Allama Al-Qur'āna  | 55-2 இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். | عَلَّمَ الْقُرْآنَ |
Khalaqa Al-'Insāna  | 55-3 அவனே மனிதனைப் படைத்தான். | خَلَقَ الإِنسَانَ |
`Allamahu Al-Bayāna  | 55-4 அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். | عَلَّمَهُ الْبَيَانَ |
Ash-Shamsu Wa Al-Qamaru Biĥusbānin  | 55-5 சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. | الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَان ٍ |
Wa An-Najmu Wa Ash-Shajaru Yasjudāni  | 55-6 (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. | وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ |
Wa As-Samā'a Rafa`ahā Wa Wađa`a Al-Mīzāna  | 55-7 மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். | وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ |
'Allā Taţghaw Fī Al-Mīzāni  | 55-8 நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. | أَلاَّ تَطْغَوْا فِي الْمِيزَانِ |
Wa 'Aqīmū Al-Wazna Bil-Qisţi Wa Lā Tukhsirū Al-Mīzāna  | 55-9 ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். | وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلاَ تُخْسِرُوا الْمِيزَانَ |
Wa Al-'Arđa Wađa`ahā Lil'anāmi  | 55-10 இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். | وَالأَرْضَ وَضَعَهَا لِلأَنَامِ |
Fīhā Fākihatun Wa An-Nakhlu Dhātu Al-'Akmāmi  | 55-11 அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்- | فِيهَا فَاكِهَة ٌ وَالنَّخْلُ ذَاتُ الأَكْمَامِ |
Wa Al-Ĥabbu Dhū Al-`Aşfi Wa Ar-Rayĥānu  | 55-12 தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன. | وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-13 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Khalaqa Al-'Insāna Min Şalşālin Kālfakhkhāri  | 55-14 சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். | خَلَقَ الإِنسَانَ مِنْ صَلْصَال ٍ كَالْفَخَّارِ |
Wa Khalaqa Al-Jānna Min Mārijin Min Nārin  | 55-15 நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். | وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِج ٍ مِنْ نَار ٍ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-16 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Rabbu Al-Mashriqayni Wa Rabbu Al-Maghribayni  | 55-17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. | رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-18 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Maraja Al-Baĥrayni Yaltaqiyāni  | 55-19 அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். | مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ |
Baynahumā Barzakhun Lā Yabghiyāni  | 55-20 (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. | بَيْنَهُمَا بَرْزَخ ٌ لاَ يَبْغِيَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-21 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Yakhruju Minhumā Al-Lu'ulu'uu Wa Al-Marjānu  | 55-22 அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன. | يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-23 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Wa Lahu Al-Jawāri Al-Munsha'ātu Fī Al-Baĥri Kāl'a`lāmi  | 55-24 அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன. | وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالأَعْلاَمِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-25 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Kullu Man `Alayhā Fānin  | 55-26 (பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே - | كُلُّ مَنْ عَلَيْهَا فَان ٍ |
Wa Yabqá Wajhu Rabbika Dhū Al-Jalāli Wa Al-'Ikrāmi  | 55-27 மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். | وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلاَلِ وَالإِكْرَامِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-28 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Yas'aluhu Man Fī As-Samāwāti Wa Al-'Arđi Kulla Yawmin Huwa Fī Sha'nin  | 55-29 வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான். | يَسْأَلُه ُُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْن ٍ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-30 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Sanafrughu Lakum 'Ayyuhā Ath-Thaqalāni  | 55-31 இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம். | سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلاَنِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-32 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Yā Ma`shara Al-Jinni Wa Al-'Insi 'Ini Astaţa`tum 'An Tanfudhū Min 'Aqţāri As-Samāwāti Wa Al-'Arđi Fānfudhū Lā Tanfudhūna 'Illā Bisulţānin  | 55-33 "மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. | يَامَعْشَرَ الْجِنِّ وَالإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَنْ تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالأَرْضِ فَانفُذُوا لاَ تَنفُذُونَ إِلاَّ بِسُلْطَان ٍ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-34 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Yursalu `Alaykumā Shuwāžun Min Nārin Wa Nuĥāsun Falā Tantaşirāni  | 55-35 (மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். | يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظ ٌ مِنْ نَار ٍ وَنُحَاس ٌ فَلاَ تَنتَصِرَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-36 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fa'idhā Anshaqqati As-Samā'u Fakānat Wardatan Kālddihāni  | 55-37 எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். | فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَة ً كَالدِّهَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-38 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fayawma'idhin Lā Yus'alu `An Dhanbihi 'Insun Wa Lā Jānnun  | 55-39 எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. | فَيَوْمَئِذ ٍ لاَ يُسْأَلُ عَنْ ذَنْبِهِ~ِ إِنس ٌ وَلاَ جَانّ ٌ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-40 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Yu`rafu Al-Mujrimūna Bisīmāhum Fayu'ukhadhu Bin-Nawāşī Wa Al-'Aqdāmi  | 55-41 குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் | يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالأَقْدَامِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-42 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Hadhihi Jahannamu Allatī Yukadhdhibu Bihā Al-Mujrimūna  | 55-43 அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). | هَذِه ِِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ |
Yaţūfūna Baynahā Wa Bayna Ĥamīmin 'Ānin  | 55-44 அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். | يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيم ٍ آن ٍ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-45 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Wa Liman Khāfa Maqāma Rabbihi Jannatāni  | 55-46 தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. | وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّه ِِ جَنَّتَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-47 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Dhawātā 'Afnānin  | 55-48 அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை. | ذَوَاتَا أَفْنَان ٍ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-49 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fīhimā `Aynāni Tajriyāni  | 55-50 அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும். | فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-51 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fīhimā Min Kulli Fākihatin Zawjāni  | 55-52 அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு. | فِيهِمَا مِنْ كُلِّ فَاكِهَة ٍ زَوْجَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-53 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Muttaki'īna `Alá Furushin Baţā'inuhā Min 'Istabraqin Wa Janá Al-Jannatayni Dānin  | 55-54 அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும். | مُتَّكِئِينَ عَلَى فُرُش ٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَق ٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَان ٍ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-55 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fīhinna Qāşirātu Aţ-Ţarfi Lam Yaţmithhunna 'Insun Qablahum Wa Lā Jānnun  | 55-56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. | فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْس ٌ قَبْلَهُمْ وَلاَ جَانّ ٌ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-57 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Ka'annahunna Al-Yāqūtu Wa Al-Marjānu  | 55-58 அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். | كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-59 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Hal Jazā'u Al-'Iĥsāni 'Illā Al-'Iĥsānu  | 55-60 நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? | هَلْ جَزَاءُ الإِحْسَانِ إِلاَّ الإِحْسَانُ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-61 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Wa Min Dūnihimā Jannatāni  | 55-62 மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன. | وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-63 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Mud/hāmmatāni  | 55-64 அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை. | مُدْهَامَّتَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-65 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fīhimā `Aynāni Nađđākhatāni  | 55-66 அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும். | فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-67 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fīhimā Fākihatun Wa Nakhlun Wa Rummānun  | 55-68 அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு. | فِيهِمَا فَاكِهَة ٌ وَنَخْل ٌ وَرُمَّان ٌ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-69 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Fīhinna Khayrātun Ĥisānun  | 55-70 அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். | فِيهِنَّ خَيْرَاتٌ حِسَان ٌ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-71 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Ĥūrun Maqşūrātun Fī Al-Khiyāmi  | 55-72 ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். | حُور ٌ مَقْصُورَات ٌ فِي الْخِيَامِ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-73 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Lam Yaţmithhunna 'Insun Qablahum Wa Lā Jānnun  | 55-74 அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. | لَمْ يَطْمِثْهُنَّ إِنس ٌ قَبْلَهُمْ وَلاَ جَانّ ٌ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-75 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Muttaki'īna `Alá Rafrafin Khuđrin Wa `Abqarīyin Ĥisānin  | 55-76 (அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். | مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْر ٍ وَعَبْقَرِيٍّ حِسَان ٍ |
Fabi'ayyi 'Ālā'i Rabbikumā Tukadhdhibāni  | 55-77 ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? | فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ |
Tabāraka Asmu Rabbika Dhī Al-Jalāli Wa Al-'Ikrāmi  | 55-78 மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. | تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلاَلِ وَالإِكْرَامِ |