Wa Aţ-Ţūri  | 52-1 தூர் (மலை) மீது சத்தியமாக! | وَالطُّورِ |
Wa Kitābin Masţūrin  | 52-2
ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது
சத்தியமாக! | وَكِتَاب ٍ مَسْطُور ٍ |
Fī Raqqin Manshūrin  |
52-3 விரித்து வைக்கப்பட்ட, | فِي رَقّ ٍ مَنْشُور ٍ |
Wa Al-Bayti Al-Ma`mūri  | 52-4 பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக! | وَالْبَيْتِ الْمَعْمُورِ |
Wa As-Saqfi Al-Marfū`i  | 52-5 உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக! | وَالسَّقْفِ الْمَرْفُوعِ |
Wa Al-Baĥri Al-Masjūri  | 52-6 பொங்கும் கடலின் மீது சத்தியமாக! | وَالْبَحْرِ الْمَسْجُورِ |
'Inna `Adhāba Rabbika Lawāqi`un  | 52-7 நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். | إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِع ٌ |
Mā Lahu Min Dāfi`in  | 52-8 அதனைத் தடுப்பவர் எவருமில்லை. | مَا لَه ُُ مِنْ دَافِع ٍ |
Yawma Tamūru As-Samā'u Mawrāan  | 52-9 வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில், | يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرا ً |
Wa Tasīru Al-Jibālu Sayrāan  | 52-10 இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது, | وَتَسِيرُ الْجِبَالُ سَيْرا ً |
Fawaylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 52-11 (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான். | فَوَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
Al-Ladhīna Hum Fī Khawđin Yal`abūna  | 52-12 எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ, | الَّذِينَ هُمْ فِي خَوْض ٍ يَلْعَبُونَ |
Yawma Yuda``ūna 'Ilá Nāri Jahannama Da``āan  | 52-13 அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர். | يَوْمَ يُدَعُّونَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعّا ً |
Hadhihi An-Nāru Allatī Kuntum Bihā Tukadhdhibūna  | 52-14 அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான். | هَذِهِ النَّارُ الَّتِي كُنتُمْ بِهَا تُكَذِّبُونَ |
'Afasiĥrun Hādhā 'Am 'Antum Lā Tubşirūna  | 52-15 "இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா? | أَفَسِحْرٌ هَذَا أَمْ أَنْتُمْ لاَ تُبْصِرُونَ |
Aşlawhā Fāşbirū 'Aw Lā Taşbirū Sawā'un `Alaykum 'Innamā Tujzawna Mā Kuntum Ta`malūna  | 52-16 "நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்." | اصْلَوْهَا فَاصْبِرُوا أَوْ لاَ تَصْبِرُوا سَوَاءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ |
'Inna Al-Muttaqīna Fī Jannātin Wa Na`īmin  | 52-17 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். | إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّات ٍ وَنَعِيم ٍ |
Fākihīna Bimā 'Ātāhum Rabbuhum Wa Waqāhum Rabbuhum `Adhāba Al-Jaĥīmi  | 52-18 அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். | فَاكِهِينَ بِمَا آتَاهُمْ رَبُّهُمْ وَوَقَاهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيمِ |
Kulū Wa Ashrabū Hanī'āan Bimā Kuntum Ta`malūna  | 52-19 (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்." | كُلُوا وَاشْرَبُوا هَنِيئا ً بِمَا كُنتُمْ تَعْمَلُونَ |
Muttaki'īna `Alá Sururin Maşfūfatin Wa Zawwajnāhum Biĥūrin `Īnin  | 52-20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம். | مُتَّكِئِينَ عَلَى سُرُر ٍ مَصْفُوفَة ٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِين ٍ |
Wa Al-Ladhīna 'Āmanū Wa Attaba`at/hum Dhurrīyatuhum Bi'īmānin 'Alĥaqnā Bihim Dhurrīyatahum Wa Mā 'Alatnāhum Min `Amalihim Min Shay'in Kullu Amri'in Bimā Kasaba Rahīnun  | 52-21 எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். | وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْء ٍ كُلُّ امْرِئ ٍ بِمَا كَسَبَ رَهِين ٌ |
Wa 'Amdadnāhum Bifākihatin Wa Laĥmin Mimmā Yashtahūna  | 52-22 இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம். | وَأَمْدَدْنَاهُمْ بِفَاكِهَة ٍ وَلَحْم ٍ مِمَّا يَشْتَهُونَ |
Yatanāza`ūna Fīhā Ka'sāan Lā Laghwun Fīhā Wa Lā Ta'thīmun  | 52-23 (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை. | يَتَنَازَعُونَ فِيهَا كَأْسا ً لاَ لَغْو ٌ فِيهَا وَلاَ تَأْثِيم ٌ |
Wa Yaţūfu `Alayhim Ghilmānun Lahum Ka'annahum Lu'ulu'uun Maknūnun  | 52-24 அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்). | وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَان ٌ لَهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤ ٌ مَكْنُون ٌ |
Wa 'Aqbala Ba`đuhum `Alá Ba`đin Yatasā'alūna  | 52-25 அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள். | وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْض ٍ يَتَسَاءَلُونَ |
Qālū 'Innā Kunnā Qablu Fī 'Ahlinā Mushfiqīna  | 52-26 "இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம். | قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِنَا مُشْفِقِينَ |
Famanna Allāhu `Alaynā Wa Waqānā `Adhāba As-Samūmi  | 52-27 "ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான். | فَمَنَّ اللَّهُ عَلَيْنَا وَوَقَانَا عَذَابَ السَّمُومِ |
'Innā Kunnā Min Qablu Nad`ūhu 'Innahu Huwa Al-Barru Ar-Raĥīmu  | 52-28 "நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்." | إِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوهُ~ُ إِنَّه ُُ هُوَ الْبَرُّ الرَّحِيمُ |
Fadhakkir Famā 'Anta Bini`mati Rabbika Bikāhinin Wa Lā Majnūnin  | 52-29 எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர். | فَذَكِّرْ فَمَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِكَاهِن ٍ وَلاَ مَجْنُون ٍ |
'Am Yaqūlūna Shā`irun Natarabbaşu Bihi Rayba Al-Manūni  | 52-30 அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா? | أَمْ يَقُولُونَ شَاعِر ٌ نَتَرَبَّصُ بِه ِِ رَيْبَ الْمَنُونِ |
Qul Tarabbaşū Fa'innī Ma`akum Mina Al-Mutarabbişīna  | 52-31 "நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறும். | قُلْ تَرَبَّصُوا فَإِنِّي مَعَكُمْ مِنَ الْمُتَرَبِّصِينَ |
'Am Ta'muruhum 'Aĥlāmuhum Bihadhā 'Am Hum Qawmun Ţāghūna  | 52-32 அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா? | أَمْ تَأْمُرُهُمْ أَحْلاَمُهُمْ بِهَذَا أَمْ هُمْ قَوْم ٌ طَاغُونَ |
'Am Yaqūlūna Taqawwalahu Bal Lā Yu'uminūna  | 52-33 அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். | أَمْ يَقُولُونَ تَقَوَّلَه ُُ بَل لاَ يُؤْمِنُونَ |
Falya'tū Biĥadīthin Mithlihi 'In Kānū Şādiqīna  | 52-34 ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். | فَلْيَأْتُوا بِحَدِيث ٍ مِثْلِهِ~ِ إِنْ كَانُوا صَادِقِينَ |
'Am Khuliqū Min Ghayri Shay'in 'Am Humu Al-Khāliqūna  | 52-35 அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? | أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ |
'Am Khalaqū As-Samāwāti Wa Al-'Arđa Bal Lā Yūqinūna  | 52-36 அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். | أَمْ خَلَقُوا السَّمَاوَاتِ وَالأَرْضَ بَل لاَ يُوقِنُونَ |
'Am `Indahum Khazā'inu Rabbika 'Am Humu Al-Musayţirūna  | 52-37 அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா? | أَمْ عِنْدَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمُ الْمُسَيْطِرُونَ |
'Am Lahum Sullamun Yastami`ūna Fīhi Falya'ti Mustami`uhum Bisulţānin Mubīnin  | 52-38 அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும். | أَمْ لَهُمْ سُلَّم ٌ يَسْتَمِعُونَ فِيه ِِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَان ٍ مُبِين ٍ |
'Am Lahu Al-Banātu Wa Lakumu Al-Banūna  | 52-39 அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா? | أَمْ لَهُ الْبَنَاتُ وَلَكُمُ الْبَنُونَ |
'Am Tas'aluhum 'Ajrāan Fahum Min Maghramin Muthqalūna  | 52-40 அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா, | أَمْ تَسْأَلُهُمْ أَجْرا ً فَهُمْ مِنْ مَغْرَم ٍ مُثْقَلُونَ |
'Am `Indahumu Al-Ghaybu Fahum Yaktubūna  | 52-41 அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா, | أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ |
'Am Yurīdūna Kaydāan Fa-Al-Ladhīna Kafarū Humu Al-Makīdūna  | 52-42 அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள். | أَمْ يُرِيدُونَ كَيْدا ً فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ |
'Am Lahum 'Ilahun Ghayru Allāhi Subĥāna Allāhi `Ammā Yushrikūna  | 52-43 அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். | أَمْ لَهُمْ إِلَه ٌٌ غَيْرُ اللَّهِ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ |
Wa 'In Yaraw Kisfāan Mina As-Samā'i Sāqiţāan Yaqūlū Saĥābun Markūmun  | 52-44 வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். | وَإِنْ يَرَوْا كِسْفا ً مِنَ السَّمَاءِ سَاقِطا ً يَقُولُوا سَحَاب ٌ مَرْكُوم ٌ |
Fadharhum Ĥattá Yulāqū Yawmahumu Al-Ladhī Fīhi Yuş`aqūna  | 52-45 ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக. | فَذَرْهُمْ حَتَّى يُلاَقُوا يَوْمَهُمُ الَّذِي فِيه ِِ يُصْعَقُونَ |
Yawma Lā Yughnī `Anhum Kayduhum Shay'āan Wa Lā Hum Yunşarūna  | 52-46 அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். | يَوْمَ لاَ يُغْنِي عَنْهُمْ كَيْدُهُمْ شَيْئا ً وَلاَ هُمْ يُنصَرُونَ |
Wa 'Inna Lilladhīna Žalamū `Adhābāan Dūna Dhālika Wa Lakinna 'Aktharahum Lā Ya`lamūna  | 52-47 அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். | وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا عَذَابا ً دُونَ ذَلِكَ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لاَ يَعْلَمُونَ |
Wa Aşbir Liĥukmi Rabbika Fa'innaka Bi'a`yuninā Wa Sabbiĥ Biĥamdi Rabbika Ĥīna Taqūmu  | 52-48 எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக, | وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ |
Wa Mina Al-Layli Fasabbiĥhu Wa 'Idbāra An-Nujūmi  | 52-49 இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! | وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ |