Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

2) Sūrat Al-Baqarah

Printed format

2) سُورَة البَقَرَه

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
'Alif-Lām-Mīm 2-1 அலிஃப், லாம், மீ;ம். أَلِف-لَام-مِيم
Dhālika Al-Kitābu Lā Rayba ۛ Fīhi ۛ Hudan Lilmuttaqīna 2-2 இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். ذَلِكَ ‌الْكِت‍‍َ‍ابُ لاَ‌ ‌‍رَيْ‍‍بَ ۛ ف‍‍ِ‍ي‍‍هِ ۛ هُ‍‍د‌ى‌ ً‌ لِلْمُتَّ‍‍قِ‍‍ينَ
Al-Ladhīna Yu'uminūna Bil-Ghaybi Wa Yuqīmūna Aş-Şalāata Wa Mimmā Razaqnāhum Yunfiqūna 2-3 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். الَّذ‍ِ‍ي‍‍نَ يُؤْمِن‍‍ُ‍ونَ بِ‍الْ‍‍غَ‍‍يْ‍‍بِ ‌وَيُ‍‍قِ‍‍يم‍‍ُ‍ونَ ‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَمِ‍‍مَّ‍‍ا‌ ‌‍رَ‌زَ‍قْ‍‍نَاهُمْ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ
Wa Al-Ladhīna Yu'uminūna Bimā 'Unzila 'Ilayka Wa Mā 'Unzila Min Qablika Wa Bil-'Ākhirati Humqinūna 2-4 (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُؤْمِن‍‍ُ‍ونَ بِمَ‍‍ا‌ ‌أُ‌نْ‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍كَ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌نْ‍‍زِلَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكَ ‌وَبِالآ‍‍خِ‍رَةِ هُمْ يُوقِ‍‍نُونَ
'Ūlā'ika `Alá Hudan Min Rabbihim ۖ Wa 'Ūlā'ika Humu Al-Mufliĥūna 2-5 இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ عَلَى‌ هُ‍‍د‌ى‌ ً‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ۖ ‌وَ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْمُفْلِحُونَ
'Inna Al-Ladhīna Kafarū Sawā'un `Alayhim 'A 'Andhartahum 'Am Lam Tundhirhum Lā Yu'uminūna 2-6 நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ سَو‍َ‍‌ا‌ءٌ‌ عَلَيْهِمْ ‌أَ‌ ‌أَ‌ن‍‍ذَ‌رْتَهُمْ ‌أَمْ لَمْ تُ‍‌‍ن‍‍ذِ‌ر‍ْ‍هُمْ لاَ‌ يُؤْمِنُونَ
Khatama Allāhu `Alá Qulūbihim Wa `Alá Sam`ihim ۖ Wa `Alá 'Abşārihim Ghishāwatun ۖ Wa Lahum `Adhābun `Ažīmun 2-7 அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. خَ‍‍تَمَ ‌اللَّ‍‍هُ عَلَى‌ قُ‍‍لُوبِهِمْ ‌وَعَلَى‌ سَمْعِهِمْ ۖ ‌وَعَلَ‍‍ى‌ ‌أَبْ‍‍‍‍صَ‍‍ا‌رِهِمْ غِ‍‍شَا‌وَةٌۖ ‌وَلَهُمْ عَذ‍َ‍‌ابٌ عَ‍‍ظِ‍‍يمٌ
Wa Mina An-Nāsi Man Yaqūlu 'Āmannā Billāhi Wa Bil-Yawmi Al-'Ākhiri Wa Mā Hum Bimu'uminīna 2-8 இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். وَمِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ مَ‍‌‍نْ يَ‍‍قُ‍‍ولُ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ بِ‍اللَّ‍‍هِ ‌وَبِالْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ‌وَمَا‌ هُمْ بِمُؤْمِنِينَ
Yukhādi`ūna Allāha Wa Al-Ladhīna 'Āmanū Wa Mā Yakhda`ūna 'Illā 'Anfusahum Wa Mā Yash`urūna 2-9 (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. يُ‍خَ‍‍ا‌دِع‍‍ُ‍ونَ ‌اللَّ‍‍هَ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَمَا‌ يَ‍‍خْ‍‍دَع‍‍ُ‍ونَ ‌إِلاّ‌ ‌أَ‌ن‍‍فُسَهُمْ ‌وَمَا‌ يَشْعُرُ‌ونَ
Qulūbihim Marađun Fazādahumu Allāhu Marađāan ۖ Wa Lahum `Adhābun 'Alīmun Bimā Kānū Yakdhibūna 2-10 அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. فِي قُ‍‍لُوبِهِمْ مَ‍رَض‌‍ٌ‌ فَزَ‌ا‌دَهُمُ ‌اللَّ‍‍هُ مَ‍رَض‍‍ا‌ ًۖ ‌وَلَهُمْ عَذ‍َ‍‌ابٌ ‌أَل‍‍ِ‍ي‍‍م‌‍ٌ‌ بِمَا‌ كَانُو‌ا‌ يَكْذِبُونَ
Wa 'Idhā Qīla Lahum Lā Tufsidū Fī Al-'Arđi Qālū 'Innamā Naĥnu Muşliĥūna 2-11 "பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள். وَ‌إِ‌ذَ‌ا‌ قِ‍‍ي‍‍لَ لَهُمْ لاَ‌ تُفْسِدُ‌و‌ا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍مَا‌ نَحْنُ مُ‍‍صْ‍‍لِحُونَ
'Alā 'Innahum Humu Al-Mufsidūna Wa Lakin Lā Yash`urūna 2-12 நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. أَلاَ‌ ‌إِنَّ‍‍هُمْ هُمُ ‌الْمُفْسِد‍ُ‍‌ونَ ‌وَلَكِ‍‌‍نْ لاَ‌ يَشْعُرُ‌ونَ
Wa 'Idhā Qīla Lahum 'Āminū Kamā 'Āmana An-Nāsu Qālū 'Anu'uminu Kamā 'Āmana As-Sufahā'u ۗ 'Alā 'Innahum Humu As-Sufahā'u Wa Lakin Lā Ya`lamūna 2-13 (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. وَ‌إِ‌ذَ‌ا‌ قِ‍‍ي‍‍لَ لَهُمْ ‌آمِنُو‌ا‌ كَمَ‍‍ا‌ ‌آمَنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌أَنُؤْمِنُ كَمَ‍‍ا‌ ‌آمَنَ ‌ال‍‍سُّفَه‍‍َ‍ا‌ءُ‌ ۗ ‌أَلاَ‌ ‌إِنَّ‍‍هُمْ هُمُ ‌ال‍‍سُّفَه‍‍َ‍ا‌ءُ‌ ‌وَلَكِ‍‌‍نْ لاَ‌ يَعْلَمُونَ
Wa 'Idhā Laqū Al-Ladhīna 'Āmanū Qālū 'Āmannā Wa 'Idhā Khalaw 'Ilá Shayāţīnihim Qālū 'Innā Ma`akum 'Innamā Naĥnu Mustahzi'ūna 2-14 இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள். وَ‌إِ‌ذَ‌ا‌ لَ‍‍قُ‍‍و‌ا‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌اقَ‍‍الُ‍‍و‌ا‌ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ خَ‍‍لَوْ‌ا‌ ‌إِلَى‌ شَيَاطِ‍‍ينِهِمْ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍ا‌ مَعَكُمْ ‌إِنَّ‍‍مَا‌ نَحْنُ مُسْتَهْزِئ‍‍ُ‍‍ونَ
Al-Lahu Yastahzi'u Bihim Wa YamudduhumŢughyānihim Ya`mahūna 2-15 அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ ‌وَيَمُدُّهُمْ فِي طُ‍‍غْ‍‍يَانِهِمْ يَعْمَهُونَ
'Ūlā'ika Al-Ladhīna Ashtaraw Ađ-Đalālata Bil-Hudá Famā Rabiĥat Tijāratuhum Wa Mā Kānū Muhtadīna 2-16 இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اشْتَ‍رَ‌وُ‌ا‌ ‌ال‍‍ضَّ‍‍لاَلَةَ بِ‍الْهُدَ‌ى‌ فَمَا‌ ‌‍رَبِحَتْ تِجَا‌‍رَتُهُمْ ‌وَمَا‌ كَانُو‌ا‌ مُهْتَدِينَ
Mathaluhum Kamathali Al-Ladhī Astawqada Nāan Falammā 'Ađā'at Mā Ĥawlahu Dhahaba Allāhu Binūrihim Wa TarakahumŽulumātin Lā Yubşirūna 2-17 இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். مَثَلُهُمْ كَمَثَلِ ‌الَّذِي ‌اسْتَوْ‍قَ‍‍دَ‌ نَا‌ر‌ا‌‌ ً‌ فَلَ‍‍مَّ‍‍ا‌ ‌أَ‍ضَ‍‍ا‌ءَتْ مَا‌ حَوْلَ‍‍هُ ‌ذَهَبَ ‌اللَّ‍‍هُ بِنُو‌رِهِمْ ‌وَتَ‍رَكَهُمْ فِي ظُ‍‍لُم‍‍َ‍ات‍ٍ‌ لاَ‌ يُ‍‍بْ‍‍‍‍صِ‍‍رُ‌ونَ
Şummun Bukmun `Umyun Fahum Lā Yarji`ūna 2-18 (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். صُ‍‍مّ‌‍‌‍ٌ‌ بُكْمٌ عُمْي‌‍ٌ‌ فَهُمْ لاَ‌ يَرْجِعُونَ
'Aw Kaşayyibin Mina As-Samā'i Fīhi Žulumātun Wa Ra`dun Wa Barqun Yaj`alūna 'Aşābi`ahum Fīdhānihim Mina Aş-Şawā`iqi Ĥadhara Al-Mawti Wa ۚ Allāhu Muĥīţun Bil-Kāfirīna 2-19 அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான். أَ‌وْ‌ كَ‍‍صَ‍‍يِّبٍ‌ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ ف‍‍ِ‍ي‍‍هِ ظُ‍‍لُم‍‍َ‍اتٌ‌ ‌وَ‌‍رَعْد‌ٌ‌ ‌وَبَرْ‍قٌ‌ يَ‍‍جْ‍‍عَل‍‍ُ‍ونَ ‌أَ‍صَ‍‍ابِعَهُمْ فِ‍‍ي ‌آ‌ذَ‌انِهِمْ مِنَ ‌ال‍‍صَّ‍‍وَ‌اعِ‍‍قِ حَذَ‌‍رَ‌الْمَ‍‍وْتِ ۚ ‌وَ‌اللَّهُ مُح‍‍ِ‍ي‍‍ط‍‍‌‍ٌ‌ بِ‍الْكَافِ‍‍رِينَ
Yakādu Al-Barqu Yakhţafu 'Abşārahum ۖ Kullamā 'Ađā'a Lahum Mashaw Fīhi Wa 'Idhā 'Ažlama `Alayhim Qāmū ۚ Wa Law Shā'a Allāhu Ladhahaba Bisam`ihim Wa 'Abşārihim ۚ 'Inna Allāha `Alá Kulli Shay'in Qadīrun 2-20 அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். يَك‍‍َ‍ا‌دُ‌ ‌الْبَرْ‍قُ يَ‍‍خْ‍‍طَ‍‍فُ ‌أَبْ‍‍‍‍صَ‍‍ا‌‍رَهُمْ ۖ كُلَّمَ‍‍ا‌ ‌أَ‍ضَ‍‍ا‌ءَ‌ لَهُمْ مَشَوْ‌ا‌ ف‍‍ِ‍ي‍‍هِ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ ‌أَ‍ظْ‍‍لَمَ عَلَيْهِمْ قَ‍‍امُو‌اۚ ‌وَلَوْ‌ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ لَذَهَبَ بِسَمْعِهِمْ ‌وَ‌أَبْ‍‍‍‍صَ‍‍ا‌رِهِمْ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Yā 'Ayyuhā An-Nāsu A`budū Rabbakumu Al-Ladhī Khalaqakum Wa Al-Ladhīna Min Qablikum La`allakum Tattaqūna 2-21 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ ‌اعْبُدُ‌و‌ا‌ ‌‍رَبَّكُمُ ‌الَّذِي خَ‍‍لَ‍‍قَ‍‍كُمْ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكُمْ لَعَلَّكُمْ تَتَّ‍‍قُ‍‍ونَ
Al-Ladhī Ja`ala Lakumu Al-'Arđa Firāshāan Wa As-Samā'a Binā'an Wa 'Anzala Mina As-Samā'i Mā'an Fa'akhraja Bihi Mina Ath-Thamarāti Rizqāan Lakum ۖ Falā Taj`alū Lillāh 'Andādāan Wa 'Antum Ta`lamūna 2-22 அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். الَّذِي جَعَلَ لَكُمُ ‌الأَ‌رْ‍ضَ فِ‍رَ‌اشا‌ ً‌ ‌وَ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءَ‌ بِن‍‍َ‍ا‌ء‌ ً‌ ‌وَ‌أَ‌نْ‍‍زَلَ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ م‍‍َ‍ا‌ء‌‌ ً‌ فَأَ‍خْ‍رَجَ بِ‍‍هِ مِنَ ‌ال‍‍ثَّمَ‍رَ‍‌اتِ ‌رِ‌زْ‍ق‍‍ا‌ ً‌ لَكُمْ ۖ فَلاَ‌ تَ‍‍جْ‍‍عَلُو‌الِلَّهِ ‌أَ‌ن‍‍دَ‌ا‌د‌ا‌ ً‌ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ تَعْلَمُونَ
Wa 'In KuntumRaybin Mimmā Nazzalnā `Alá `Abdinā Fa'tū Bisūratin Min Mithlihi Wa AdShuhadā'akum Min Dūni Allāhi 'In Kuntum Şādiqīna 2-23 இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். وَ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ فِي ‌‍رَيْ‍‍بٍ‌ مِ‍‍مَّ‍‍ا‌ نَزَّلْنَا‌ عَلَى‌ عَ‍‍بْ‍‍دِنَا‌ فَأْتُو‌ا‌ بِسُو‌‍رَةٍ‌ مِ‍‌‍نْ مِثْلِ‍‍هِ ‌وَ‌ا‌دْعُو‌ا‌ شُهَد‍َ‍‌ا‌ءَكُمْ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌اللَّ‍‍هِ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ صَ‍‍ا‌دِقِ‍‍ينَ
Fa'in Lam Taf`alū Wa Lan Taf`alū Fa Attaqū An-Nāra Allatī Waqūduhā An-Nāsu Wa Al-Ĥijāratu ۖ 'U`iddat Lilkāfirīna 2-24 (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. فَإِ‌نْ لَمْ تَفْعَلُو‌ا‌ ‌وَلَ‍‌‍نْ تَفْعَلُو‌ا‌ فَاتَّ‍‍قُ‍‍و‌ا‌ال‍‍نّ‍‍َ‍ا‌‍رَ‌الَّتِي ‌وَ‍قُ‍‍و‌دُهَا‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ ‌وَ‌الْحِجَا‌‍رَةُ ۖ ‌أُعِدَّتْ لِلْكَافِ‍‍رِينَ
Wa Bashshiri Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti 'Anna Lahum Jannātin Tajrī Min Taĥtihā Al-'Anhāru ۖ Kullamā Ruziqū Minhā Min Thamaratin Rizqāan ۙ Qālū Hādhā Al-Ladhī Ruziqnā Min Qablu ۖ Wa 'Utū Bihi Mutashābihāan ۖ Wa Lahum Fīhā 'Azwājun Muţahharatun ۖ Wa Hum Fīhā Khālidūna 2-25 (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். وَبَشِّرِ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ ‌أَنَّ لَهُمْ جَ‍‍نّ‍‍َ‍ات‌‍ٍ‌ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ ۖ كُلَّمَا‌ ‌رُ‌زِقُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ مِ‍‌‍نْ ثَمَ‍رَة‍ٍ‌رِ‌زْ‍ق‍‍ا‌‌ ًۙ قَ‍‍الُو‌ا‌ هَذَ‌ا‌ ‌الَّذِي ‌رُ‌زِ‍قْ‍‍نَا‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ ۖ ‌وَ‌أُتُو‌ا‌ بِ‍‍هِ مُتَشَابِها‌ ًۖ ‌وَلَهُمْ فِيهَ‍‍ا‌ ‌أَ‌زْ‌و‍َ‍‌اجٌ‌ مُ‍‍طَ‍‍هَّ‍رَةٌۖ ‌وَهُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
'Inna Allāha Lā Yastaĥyī 'An Yađriba Mathalāan Mā Ba`ūđatan Famā Fawqahā ۚ Fa'ammā Al-Ladhīna 'Āmanū Faya`lamūna 'Annahu Al-Ĥaqqu Min Rabbihim ۖ Wa 'Ammā Al-Ladhīna Kafarū Fayaqūlūna Mādhā 'Arāda Allāhu Bihadhā Mathalāan ۘ Yuđillu Bihi Kathīrāan Wa Yahdī Bihi Kathīrāan ۚ Wa Mā Yuđillu Bihi~ 'Illā Al-Fāsiqīna 2-26 நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. إِنَّ ‌اللَّ‍‍هَ لاَ‌ يَسْتَحْيِ‍‍ي ‌أَ‌نْ يَ‍‍ضْ‍‍رِبَ مَثَلا‌ ً‌ مَا‌ بَعُوضَ‍‍ة‌ ً‌ فَمَا‌ فَوْ‍قَ‍‍هَا‌ ۚ فَأَمَّ‍‍ا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ فَيَعْلَم‍‍ُ‍ونَ ‌أَنَّ‍‍هُ ‌الْحَ‍‍قُّ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ۖ ‌وَ‌أَمَّ‍‍ا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ فَيَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ مَا‌ذَ‌ا‌ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ ‌اللَّ‍‍هُ بِهَذَ‌ا‌ مَثَلا‌ ًۘ يُ‍‍ضِ‍‍لُّ بِ‍‍هِ كَثِي‍‍ر‌ا‌ ً‌ ‌وَيَهْدِي بِ‍‍هِ كَثِي‍‍ر‌ا‌ ًۚ ‌وَمَا‌ يُ‍‍ضِ‍‍لُّ بِهِ ‌إِلاَّ‌ ‌الْفَاسِ‍‍قِ‍‍ينَ
Al-Ladhīna Yanqūna `Ahda Allāhi Min Ba`di Mīthāqihi Wa Yaqţa`ūna Mā 'Amara Allāhu Bihi~ 'Anşala Wa Yufsidūna Fī Al-'Arđi ۚ 'Ūlā'ika Humu Al-Khāsirūna 2-27 இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள். الَّذ‍ِ‍ي‍‍نَ يَ‍‌‍ن‍‍قُ‍‍ضُ‍‍ونَ عَهْدَ‌ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ بَعْدِ‌ مِيثَاقِ‍‍هِ ‌وَيَ‍‍قْ‍‍‍‍طَ‍‍ع‍‍ُ‍ونَ مَ‍‍ا‌ ‌أَمَ‍رَ‌اللَّ‍‍هُ بِهِ ‌أَ‌نْ يُوصَ‍‍لَ ‌وَيُفْسِد‍ُ‍‌ونَ فِي ‌الأَ‌رْ‍ضِ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْ‍‍خَ‍‍اسِرُ‌ونَ
Kayfa Takfurūna Billāhi Wa Kuntum 'Amwātāan Fa'aĥyākum ۖ Thumma Yumītukum Thumma Yuĥyīkum Thumma 'Ilayhi Turja`ūna 2-28 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். كَ‍‍يْ‍‍فَ تَكْفُر‍ُ‍‌ونَ بِ‍اللَّ‍‍هِ ‌وَكُ‍‌‍ن‍‍تُمْ ‌أَمْوَ‌اتا‌‌ ً‌ فَأَحْيَاكُمْ ۖ ثُ‍‍مَّ يُمِيتُكُمْ ثُ‍‍مَّ يُحْيِيكُمْ ثُ‍‍مَّ ‌إِلَ‍‍يْ‍‍هِ تُرْجَعُونَ
Huwa Al-Ladhī Khalaqa Lakum Mā Fī Al-'Arđi Jamī`āan Thumma Astawá 'Ilá As-Samā'i Fasawwāhunna Sab`a Samāwātin ۚ Wa Huwa Bikulli Shay'in `Alīmun 2-29 அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். هُوَ‌ ‌الَّذِي خَ‍‍لَ‍‍قَ لَكُمْ مَا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ جَمِيعا‌‌ ً‌ ثُ‍‍مَّ ‌اسْتَوَ‌ى‌ ‌إِلَى‌ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ فَسَوَّ‌اهُ‍‍نَّ سَ‍‍بْ‍‍عَ سَمَا‌و‍َ‍‌اتٍۚ ‌وَهُوَ‌ بِكُلِّ شَ‍‍يْءٍ‌ عَلِيمٌ
Wa 'Idh Qāla Rabbuka Lilmalā'ikati 'Innī Jā`ilun Al-'Arđi Khalīfatan ۖ Qālū 'Ataj`alu Fīhā Man Yufsidu Fīhā Wa Yasfiku Ad-Dimā'a Wa Naĥnu Nusabbiĥu Biĥamdika Wa Nuqaddisu Laka ۖ Qāla 'Innī 'A`lamu Mā Lā Ta`lamūna 2-30 (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ ‌‍رَبُّكَ لِلْمَلاَئِكَةِ ‌إِنِّ‍‍ي جَاعِل‌‍ٌ‌ فِي ‌الأَ‌رْ‍ضِ خَ‍‍لِيفَة‌ ًۖ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌أَتَ‍‍جْ‍‍عَلُ فِيهَا‌ مَ‍‌‍نْ يُفْسِدُ‌ فِيهَا‌ ‌وَيَسْفِكُ ‌ال‍‍دِّم‍‍َ‍ا‌ءَ‌ ‌وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ ‌وَنُ‍‍قَ‍‍دِّسُ لَكَ ۖ قَ‍‍الَ ‌إِنِّ‍‍ي‍ ‌أَعْلَمُ مَا‌ لاَ‌ تَعْلَمُونَ
Wa `Allama 'Ādama Al-'Asmā'a Kullahā Thumma `Arađahum `Alá Al-Malā'ikati Faqāla 'Anbi'ūnī Bi'asmā'i Hā'uulā' 'In Kuntum Şādiqīna 2-31 இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான். وَعَلَّمَ ‌آ‌دَمَ ‌الأَسْم‍‍َ‍ا‌ءَ‌ كُلَّهَا‌ ثُ‍‍مَّ عَ‍رَضَ‍‍هُمْ عَلَى‌ ‌الْمَلاَئِكَةِ فَ‍‍قَ‍‍الَ ‌أَ‌نْ‍‍بِئ‍‍ُ‍‍ونِي بِأَسْم‍‍َ‍ا‌ءِ‌ ه‍‍َ‍ا‌ؤُلاَ‌ء‌ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ صَ‍‍ا‌دِقِ‍‍ينَ
Qālū Subĥānaka Lā `Ilma Lanā 'Illā Mā `Allamtanā ۖ 'Innaka 'Anta Al-`Alīmu Al-Ĥakīmu 2-32 அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். قَ‍‍الُو‌ا‌ سُ‍‍بْ‍‍حَانَكَ لاَ‌ عِلْمَ لَنَ‍‍ا‌ ‌إِلاَّ‌ مَا‌ عَلَّمْتَنَ‍‍اۖ ‌إِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ ‌الْعَل‍‍ِ‍ي‍‍مُ ‌الْحَكِيمُ
Qāla Yā 'Ādamu 'Anbi'hum Bi'asmā'ihim ۖ Falammā 'Anba'ahum Bi'asmā'ihim Qāla 'Alam 'Aqul Lakum 'Innī 'A`lamu Ghayba As-Samāwāti Wa Al-'Arđi Wa 'A`lamu Mā Tubdūna Wa Mā Kuntum Taktumūna 2-33 "ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான். قَ‍‍الَ يَ‍‍ا‌ ‌آ‌دَمُ ‌أَ‌نْ‍‍بِئْهُمْ بِأَسْم‍‍َ‍ائِهِمْ ۖ فَلَ‍‍مَّ‍‍ا‌ ‌أَ‌نْ‍‍بَأَهُمْ بِأَسْم‍‍َ‍ائِهِمْ قَ‍‍الَ ‌أَلَمْ ‌أَ‍قُ‍‍لْ لَكُمْ ‌إِنِّ‍‍ي ‌أَعْلَمُ غَ‍‍يْ‍‍بَ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَ‌أَعْلَمُ مَا‌ تُ‍‍بْ‍‍د‍ُ‍‌ونَ ‌وَمَا‌ كُ‍‌‍ن‍‍تُمْ تَكْتُمُونَ
Wa 'Idh Qulnā Lilmalā'ikati Asjudū Li'dama Fasajadū 'Illā 'Iblīsa 'Abá Wa Astakbara Wa Kāna Mina Al-Kāfirīna 2-34 பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். وَ‌إِ‌ذْ‌ قُ‍‍لْنَا‌ لِلْمَلاَئِكَةِ ‌اسْجُدُ‌و‌ا‌ لِأ‌دَمَ فَسَجَدُ‌و‌ا‌ ‌إِلاَّ‌ ‌إِبْ‍‍ل‍‍ِ‍ي‍‍سَ ‌أَبَى‌ ‌وَ‌اسْتَكْبَ‍رَ‌ ‌وَك‍‍َ‍انَ مِنَ ‌الْكَافِ‍‍رِينَ
Wa Qulnā Yā 'Ādamu Askun 'Anta Wa Zawjuka Al-Jannata Wa Kulā Minhā Raghadāan Ĥaythu Shi'tumā Wa Lā Taqrabā Hadhihi Ash-Shajarata Fatakūnā Mina Až-Žālimīna 2-35 மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம். وَ‍قُ‍‍لْنَا‌ يَ‍‍ا‌ ‌آ‌دَمُ ‌اسْكُ‍‌‍نْ ‌أَ‌نْ‍‍تَ ‌وَ‌زَ‌وْجُكَ ‌الْجَ‍‍نَّ‍‍ةَ ‌وَكُلاَ‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ ‌‍رَغَ‍‍د‌اً‌ حَ‍‍يْ‍‍ثُ شِئْتُمَا‌ ‌وَلاَ‌ تَ‍‍قْ‍‍‍رَبَا‌ هَذِهِ ‌ال‍‍شَّجَ‍رَةَ فَتَكُونَا‌ مِنَ ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
Fa'azallahumā Ash-Shayţānu `Anhā Fa'akhrajahumā Mimmā Kānā Fīhi ۖ Wa Qulnā Ahbiţū Ba`đukum Liba`đin `Adūwun ۖ Wa Lakum Al-'Arđi Mustaqarrun Wa Matā`un 'Ilá Ĥīnin 2-36 இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம். فَأَ‌زَلَّهُمَا‌ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انُ عَ‍‌‍نْ‍‍هَا‌ فَأَ‍خْ‍رَجَهُمَا‌ مِ‍‍مَّ‍‍ا‌ كَانَا‌ ف‍‍ِ‍ي‍‍هِ ۖ ‌وَ‍قُ‍‍لْنَا‌ ‌اهْبِ‍‍طُ‍‍و‌ا‌ بَعْ‍‍ضُ‍‍كُمْ لِبَعْ‍‍ضٍ عَدُ‌وّ‌ٌۖ ‌وَلَكُمْ فِي ‌الأَ‌رْ‍ضِ مُسْتَ‍‍قَ‍‍رّ‌ٌ‌ ‌وَمَت‍‍َ‍اع‌‍ٌ‌ ‌إِلَى‌ حِينٍ
Fatalaqqá 'Ādamu Min Rabbihi Kalimātin Fatāba `Alayhi ۚ 'Innahu Huwa At-Tawwābu Ar-Raĥīmu 2-37 பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். فَتَلَ‍‍قَّ‍‍ى‌ ‌آ‌دَمُ مِ‍‌‍نْ ‌‍رَبِّ‍‍هِ كَلِم‍‍َ‍ات‌‍ٍ‌ فَت‍‍َ‍ابَ عَلَ‍‍يْ‍‍هِ ۚ ‌إِنَّ‍‍هُ هُوَ‌ ‌ال‍‍تَّوّ‍َ‍‌ابُ ‌ال‍رَّحِيمُ
Qulnā Ahbiţū Minhā Jamī`āan ۖ Fa'immā Ya'tiyannakum Minnī Hudan Faman Tabi`a Hudāya Falā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 2-38 (பின்பு, நாம் சொன்னோம்; "நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." قُ‍‍لْنَا‌ ‌اهْبِ‍‍طُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ جَمِيعا‌‌ ًۖ فَإِمَّ‍‍ا‌ يَأْتِيَ‍‍نَّ‍‍كُمْ مِ‍‍نِّ‍‍ي هُ‍‍د‌ى‌‌ ً‌ فَمَ‍‌‍نْ تَبِعَ هُد‍َ‍‌ايَ فَلاَ‌ خَ‍‍وْفٌ عَلَيْهِمْ ‌وَلاَ‌ هُمْ يَحْزَنُونَ
Wa Al-Ladhīna Kafarū Wa Kadhdhabū Bi'āyātinā 'Ūlā'ika 'Aşĥābu An-Nāri ۖ Hum Fīhā Khālidūna 2-39 அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌وَكَذَّبُو‌ا‌ بِآيَاتِنَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
Yā Banī 'Isrā'īla Adhkurū Ni`matiya Allatī 'An`amtu `Alaykum Wa 'Awfū Bi`ahdī 'Ūfi Bi`ahdikum Wa 'Īyāya Fārhabūni 2-40 இஸ்ராயீலின் சந்ததியனரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக. يَا‌ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ ‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَتِيَ ‌الَّتِ‍‍ي ‌أَ‌نْ‍‍عَمْتُ عَلَيْكُمْ ‌وَ‌أَ‌وْفُو‌ا‌ بِعَهْدِي ‌أ‍ُ‍‌وفِ بِعَهْدِكُمْ ‌وَ‌إِيّ‍‍َ‍ايَ فَا‌رْهَبُونِ
Wa 'Āminū Bimā 'Anzaltu Muşaddiqāan Limā Ma`akum Wa Lā Takūnū 'Awwala Kāfirin Bihi ۖ Wa Lā Tashtarū Bi'āyātī Thamanāan Qalīlāan Wa 'Īyāya Fa Attaqūni 2-41 இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. وَ‌آمِنُو‌ا‌ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلْتُ مُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍‍ا‌ ً‌ لِمَا‌ مَعَكُمْ ‌وَلاَ‌ تَكُونُ‍‍و‌ا‌ ‌أَ‌وَّلَ كَافِ‍‍ر‌ٍ‌ بِ‍‍هِ ۖ ‌وَلاَ‌ تَشْتَرُ‌و‌ا‌ بِآيَاتِي ثَمَنا‌‌ ًقَ‍‍لِيلا‌ ً‌ ‌وَ‌إِيّ‍‍َ‍ايَ فَاتَّ‍‍قُ‍‍ونِ
Wa Lā Talbisū Al-Ĥaqqa Bil-Bāţili Wa Taktumū Al-Ĥaqqa Wa 'Antum Ta`lamūna 2-42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். وَلاَ‌ تَلْبِسُو‌ا‌الْحَ‍‍قَّ بِ‍الْبَاطِ‍‍لِ ‌وَتَكْتُمُو‌ا‌الْحَ‍‍قَّ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ تَعْلَمُونَ
Wa 'Aqīmū Aş-Şalāata Wa 'Ātū Az-Zakāata Wa Arka`ū Ma`a Ar-ki`īna 2-43 தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். وَ‌أَ‍قِ‍‍يمُو‌ا‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آتُو‌ا‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ‌وَ‌ا‌رْكَعُو‌ا‌ مَعَ ‌ال‍رَّ‌اكِعِينَ
'Ata'murūna An-Nāsa Bil-Birri Wa Tansawna 'Anfusakum Wa 'Antum Tatlūna Al-Kitāba ۚ 'Afalā Ta`qilūna 2-44 நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? أَتَأْمُر‍ُ‍‌ونَ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ بِ‍الْبِ‍‍ر‍ّ‍ِ‌ ‌وَتَ‍‌‍ن‍‍سَ‍‍وْنَ ‌أَ‌ن‍‍فُسَكُمْ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ تَتْل‍‍ُ‍ونَ ‌الْكِت‍‍َ‍ابَ ۚ ‌أَفَلاَ‌ تَعْ‍‍قِ‍‍لُونَ
Wa Asta`īnū Biş-Şabri Wa Aş-Şalāati ۚ Wa 'Innahā Lakabīratun 'Illā `Alá Al-Khāshi`īna 2-45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். وَ‌اسْتَعِينُو‌ا‌ بِ‍ال‍‍صَّ‍‍بْ‍‍ر‍ِ‍‌ ‌وَ‌ال‍‍صَّ‍‍لاَةِ ۚ ‌وَ‌إِنَّ‍‍هَا‌ لَكَبِي‍رَة‌‍ٌ‌ ‌إِلاَّ‌ عَلَى‌ ‌الْ‍‍خَ‍‍اشِعِينَ
Al-Ladhīna Yažunnūna 'Annahum Mulāqū Rabbihim Wa 'Annahum 'Ilayhi ji`ūna 2-46 (உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், "திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்;. الَّذ‍ِ‍ي‍‍نَ يَ‍‍ظُ‍‍نّ‍‍ُ‍ونَ ‌أَنَّ‍‍هُمْ مُلاَ‍قُ‍‍و‌ ‌‍رَبِّهِمْ ‌وَ‌أَنَّ‍‍هُمْ ‌إِلَ‍‍يْ‍‍هِ ‌‍رَ‌اجِعُونَ
Yā Banī 'Isrā'īla Adhkurū Ni`matiya Allatī 'An`amtu `Alaykum Wa 'Annī Fađđaltukum `Alá Al-`Ālamīna 2-47 இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். يَا‌ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ ‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَتِيَ ‌الَّتِ‍‍ي ‌أَ‌نْ‍‍عَمْتُ عَلَيْكُمْ ‌وَ‌أَنِّ‍‍ي فَ‍‍ضَّ‍‍لْتُكُمْ عَلَى‌ ‌الْعَالَمِينَ
Wa Attaqū Yawmāan Lā Tajzī Nafsun `An Nafsin Shay'āan Wa Lā Yuqbalu Minhā Shafā`atun Wa Lā Yu'ukhadhu Minhā `Adlun Wa Lā Hum Yunşarūna 2-48 இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌ يَوْما‌ ً‌ لاَ‌ تَ‍‍جْ‍‍زِي نَفْسٌ عَ‍‌‍نْ نَفْس‌‍ٍ‌ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَلاَ‌ يُ‍‍قْ‍‍بَلُ مِ‍‌‍نْ‍‍هَا‌ شَفَاعَةٌ‌ ‌وَلاَ‌ يُؤْ‍‍خَ‍‍ذُ‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ عَ‍‍دْلٌ‌ ‌وَلاَ‌ هُمْ يُ‍‌‍ن‍‍صَ‍‍رُ‌ونَ
Wa 'Idh Najjaynākum Min 'Āli Fir`awna Yasūmūnakum Sū'a Al-`Adhābi Yudhabbiĥūna 'Abnā'akum Wa Yastaĥyūna Nisā'akum ۚ Wa Fī Dhālikum Balā'un Min Rabbikum `Ažīmun 2-49 உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்) அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது. وَ‌إِ‌ذْ‌ نَجَّيْنَاكُمْ مِ‍‌‍نْ ‌آلِ فِ‍‍رْعَ‍‍وْنَ يَسُومُونَكُمْ س‍‍ُ‍و‌ءَ‌ ‌الْعَذ‍َ‍‌ابِ يُذَبِّح‍‍ُ‍ونَ ‌أَبْ‍‍ن‍‍َ‍ا‌ءَكُمْ ‌وَيَسْتَحْي‍‍ُ‍ونَ نِس‍‍َ‍ا‌ءَكُمْ ۚ ‌وَفِي ‌ذَلِكُمْ بَلاَ‌ء‌ٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكُمْ عَ‍‍ظِ‍‍يمٌ
Wa 'Idh Faraqnā Bikumu Al-Baĥra Fa'anjaynākum Wa 'Aghraqnā 'Āla Fir`awna Wa 'Antum Tanžurūna 2-50 மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்). وَ‌إِ‌ذْ‌ فَ‍رَ‍قْ‍‍نَا‌ بِكُمُ ‌الْبَحْ‍رَ‌ فَأَ‌نْ‍‍جَيْنَاكُمْ ‌وَ‌أَ‍‍غْ‍رَ‍قْ‍‍نَ‍‍ا‌ ‌آلَ فِ‍‍رْعَ‍‍وْنَ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ تَ‍‌‍ن‍‍ظُ‍‍رُ‌ونَ
Wa 'Idh Wā`adnā Mūsá 'Arba`īna Laylatan Thumma Attakhadhtumu Al-`Ijla Min Ba`dihi Wa 'Antum Žālimūna 2-51 மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். وَ‌إِ‌ذْ‌ ‌وَ‌اعَ‍‍دْنَا‌ مُوسَ‍‍ى‌ ‌أَ‌رْبَع‍‍ِ‍ي‍‍نَ لَيْلَة‌ ً‌ ثُ‍‍مَّ ‌اتَّ‍‍خَ‍‍ذْتُمُ ‌الْعِ‍‍جْ‍‍لَ مِ‍‌‍نْ بَعْدِهِ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ ظَ‍‍الِمُونَ
Thumma `Afawnā `Ankum Min Ba`di Dhālika La`allakum Tashkurūna 2-52 இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம். ثُ‍‍مَّ عَفَوْنَا‌ عَ‍‌‍نْ‍‍كُمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ ‌ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ
Wa 'Idh 'Ātaynā Mūsá Al-Kitāba Wa Al-Furqāna La`allakum Tahtadūna 2-53 இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்). وَ‌إِ‌ذْ‌ ‌آتَيْنَا‌ مُوسَى‌ ‌الْكِت‍‍َ‍ابَ ‌وَ‌الْفُرْ‍قَ‍‍انَ لَعَلَّكُمْ تَهْتَدُ‌ونَ
Wa 'Idh Qāla Mūsá LiqawmihiQawmi 'Innakum Žalamtum 'Anfusakum Biāttikhādhikumu Al-`Ijla Fatūbū 'Ilá Bāri'ikumqtulū 'Anfusakum Dhālikum Khayrun Lakum `Inda Bāri'ikum Fatāba `Alaykum ۚ 'Innahu Huwa At-Tawwābu Ar-Raĥīmu 2-54 மூஸா தம் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்" எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான். وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ مُوسَى‌ لِ‍‍قَ‍‍وْمِ‍‍هِ يَا‌ قَ‍‍وْمِ ‌إِنَّ‍‍كُمْ ظَ‍‍لَمْتُمْ ‌أَ‌ن‍‍فُسَكُمْ بِ‍‍اتِّ‍‍خَ‍‍ا‌ذِكُمُ ‌الْعِ‍‍جْ‍‍لَ فَتُوبُ‍‍و‌ا‌ ‌إِلَى‌ بَا‌رِئِكُمْ فَا‍قْ‍‍تُلُ‍‍و‌ا‌ ‌أَ‌ن‍‍فُسَكُمْ ‌ذَلِكُمْ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَكُمْ عِ‍‌‍نْ‍‍دَ‌ بَا‌رِئِكُمْ فَت‍‍َ‍ابَ عَلَيْكُمْ ۚ ‌إِنَّ‍‍هُ هُوَ‌ ‌ال‍‍تَّوّ‍َ‍‌ابُ ‌ال‍رَّحِيمُ
Wa 'Idh Qultum Yā Mūsá Lan Nu'umina Laka Ĥattá Nará Allāha Jahratan Fa'akhadhatkumu Aş-Şā`iqatu Wa 'Antum Tanžurūna 2-55 இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. وَ‌إِ‌ذْ‌ قُ‍‍لْتُمْ يَا‌ مُوسَى‌ لَ‍‌‍نْ نُؤْمِنَ لَكَ حَتَّى‌ نَ‍رَ‌ى‌ ‌اللَّ‍‍هَ جَهْ‍رَة‌ ً‌ فَأَ‍خَ‍‍ذَتْكُمُ ‌ال‍‍صَّ‍‍اعِ‍‍قَ‍‍ةُ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ تَ‍‌‍ن‍‍ظُ‍‍رُ‌ونَ
Thumma Ba`athnākum Min Ba`di Mawtikum La`allakum Tashkurūna 2-56 நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். ثُ‍‍مَّ بَعَثْنَاكُمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ
Wa Žallalnā `Alaykumu Al-Ghamāma Wa 'Anzalnā `Alaykumu Al-Manna Wa As-Salwá ۖ Kulū Min Ţayyibāti Mā Razaqnākum ۖ Wa Mā Žalamūnā Wa Lakin Kānū 'Anfusahum Yažlimūna 2-57 இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் "மன்னு, ஸல்வா" (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, "நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்" (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை, மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். وَ‍ظَ‍‍لَّلْنَا‌ عَلَيْكُمُ ‌الْ‍‍غَ‍‍م‍‍َ‍امَ ‌وَ‌أَ‌ن‍‍زَلْنَا‌ عَلَيْكُمُ ‌الْمَ‍‍نَّ ‌وَ‌ال‍‍سَّلْوَ‌ى‌ ۖ كُلُو‌ا‌ مِ‍‌‍نْ طَ‍‍يِّب‍‍َ‍اتِ مَا‌ ‌‍رَ‌زَ‍قْ‍‍نَاكُمْ ۖ ‌وَمَا‌ ظَ‍‍لَمُونَا‌ ‌وَلَكِ‍‌‍نْ كَانُ‍‍و‌ا‌ ‌أَ‌ن‍‍فُسَهُمْ يَ‍‍ظْ‍‍لِمُونَ
Wa 'Idh Qulnā Adkhulū Hadhihi Al-Qaryata Fakulū Minhā Ĥaythu Shi'tum Raghadāan Wa Adkhulū Al-Bāba Sujjadāan Wa Qūlū Ĥiţţatun Naghfir Lakum Khaţāyākum ۚ Wa Sanazīdu Al-Muĥsinīna 2-58 இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். وَ‌إِ‌ذْ‌ قُ‍‍لْنَا‌ ‌ا‌دْ‍‍خُ‍‍لُو‌ا‌ هَذِهِ ‌الْ‍‍قَ‍‍رْيَةَ فَكُلُو‌ا‌ مِ‍‌‍نْ‍‍هَا‌ حَ‍‍يْ‍‍ثُ شِئْتُمْ ‌‍رَغَ‍‍د‌ا‌ ً‌ ‌وَ‌ا‌دْ‍‍خُ‍‍لُو‌ا‌الْب‍‍َ‍ابَ سُجَّد‌ا‌ ً‌ ‌وَ‍قُ‍‍ولُو‌ا‌ حِ‍‍طَّ‍‍ةٌ‌ نَ‍‍غْ‍‍فِ‍‍رْ‌ لَكُمْ خَ‍‍طَ‍‍ايَاكُمْ ۚ ‌وَسَنَز‍ِ‍ي‍‍دُ‌ ‌الْمُحْسِنِينَ
Fabaddala Al-Ladhīna Žalamū Qawlāan Ghayra Al-Ladhī Qīla Lahum Fa'anzalnā `Alá Al-Ladhīna Žalamū Rijzāan Mina As-Samā'i Bimā Kānū Yafsuqūna 2-59 ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். فَبَدَّلَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ظَ‍‍لَمُو‌اقَ‍‍وْلاً‌ غَ‍‍يْ‍رَ‌الَّذِي قِ‍‍ي‍‍لَ لَهُمْ فَأَ‌ن‍‍زَلْنَا‌ عَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ظَ‍‍لَمُو‌ا‌رِجْ‍‍ز‌ا‌ ً‌ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ بِمَا‌ كَانُو‌ا‌ يَفْسُ‍‍قُ‍‍ونَ
Wa 'Idh Astasqá Mūsá Liqawmihi Faqulnā Ađrib Bi`aşāka Al-Ĥajara ۖnfajarat Minhu Athnatā `Ashrata `Aynāan ۖ Qad `Alima Kullu 'Unāsin Mashrabahum ۖ Kulū Wa Ashrabū Min Rizqi Allāhi Wa Lā Ta`thaw Fī Al-'Arđi Mufsidīna 2-60 மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, "உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள். وَ‌إِ‌ذْ‌ ‌اسْتَسْ‍‍قَ‍‍ى‌ مُوسَى‌ لِ‍‍قَ‍‍وْمِ‍‍هِ فَ‍‍قُ‍‍لْنَا‌ ‌اضْ‍‍رِبْ بِعَ‍‍صَ‍‍اكَ ‌الْحَجَ‍رَۖ فَا‌ن‍‍فَجَ‍رَتْ مِ‍‌‍نْ‍‍هُ ‌اثْنَتَا‌ عَشْ‍رَةَ عَيْنا‌‌ ًۖ قَ‍‍دْ‌ عَلِمَ كُلُّ ‌أُن‍‍َ‍اسٍ‌ مَشْ‍رَبَهُمْ ۖ كُلُو‌ا‌ ‌وَ‌اشْ‍رَبُو‌ا‌ مِ‍‌‍نْ ‌رِ‌زْ‍قِ ‌اللَّ‍‍هِ ‌وَلاَ‌ تَعْثَوْ‌ا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ مُفْسِدِينَ
Wa 'Idhi Qultum Yā Mūsá Lan Naşbira `Alá Ţa`āmin Wāĥidind`u Lanā Rabbaka Yukhrij Lanā Mimmā Tunbitu Al-'Arđu Min Baqlihā Wa Qiththā'ihā Wa Fūmihā Wa `Adasihā Wa Başalihā ۖ Qāla 'Atastabdilūna Al-Ladhī Huwa 'Adná Bial-Ladhī Huwa Khayrun ۚ Ahbiţū Mişan Fa'inna Lakum Mā Sa'altum ۗ Wa Đuribat `Alayhimu Adh-Dhillatu Wa Al-Maskanatu Wa Bā'ū Bighađabin Mina Allāhi ۗ Dhālika Bi'annahum Kānū Yakfurūna Bi'āyāti Allāhi Wa Yaqtulūna An-Nabīyīna Bighayri Al-Ĥaqqi ۗ Dhālika Bimā `Aşaw Wa Kānū Ya`tadūna 2-61 இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது. وَ‌إِ‌ذِ‌ قُ‍‍لْتُمْ يَا‌ مُوسَى‌ لَ‍‌‍نْ نَ‍‍صْ‍‍بِ‍‍ر‍َ‍‌ عَلَى‌ طَ‍‍ع‍‍َ‍امٍ‌ ‌وَ‌احِد‌‌ٍ‌ فَا‌دْعُ لَنَا‌ ‌‍رَبَّكَ يُ‍‍خْ‍‍رِجْ لَنَا‌ مِ‍‍مَّ‍‍ا‌ تُ‍‌‍نْ‍‍بِتُ ‌الأَ‌رْ‍ضُ مِ‍‌‍نْ بَ‍‍قْ‍‍لِهَا‌ ‌وَ‍قِ‍‍ثّ‍‍َ‍ائِهَا‌ ‌وَفُومِهَا‌ ‌وَعَدَسِهَا‌ ‌وَبَ‍‍صَ‍‍لِهَا‌ ۖ قَ‍‍الَ ‌أَتَسْتَ‍‍بْ‍‍دِل‍‍ُ‍ونَ ‌الَّذِي هُوَ‌ ‌أَ‌دْنَى‌ بِ‍الَّذِي هُوَ‌ خَ‍‍يْ‍‍ر‌‌ٌۚ ‌اهْبِ‍‍طُ‍‍و‌ا‌ مِ‍‍صْ‍‍ر‌ا‌‌ ً‌ فَإِنَّ لَكُمْ مَا‌ سَأَلْتُمْ ۗ ‌وَ‍ضُ‍‍رِبَتْ عَلَيْهِمُ ‌ال‍‍ذِّلَّةُ ‌وَ‌الْمَسْكَنَةُ ‌وَب‍‍َ‍ا‌ء‍ُ‍‌و‌ا‌ بِ‍‍غَ‍‍ضَ‍‍بٍ‌ مِنَ ‌اللَّ‍‍هِ ۗ ‌ذَلِكَ بِأَنَّ‍‍هُمْ كَانُو‌ا‌ يَكْفُر‍ُ‍‌ونَ بِآي‍‍َ‍اتِ ‌اللَّ‍‍هِ ‌وَيَ‍‍قْ‍‍تُل‍‍ُ‍ونَ ‌ال‍‍نَّ‍‍بِيّ‍‍ِ‍ي‍‍نَ بِ‍‍غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ ‌الْحَ‍‍قِّ ۗ ‌ذَلِكَ بِمَا‌ عَ‍‍صَ‍‍وْ‌ا‌ ‌وَكَانُو‌ا‌ يَعْتَدُ‌ونَ
'Inna Al-Ladhīna 'Āmanū Wa Al-Ladhīna Hādū Wa An-Naşārá Wa Aş-Şābi'īna Man 'Āmana Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri Wa `Amila Şāliĥāan Falahum 'Ajruhum `Inda Rabbihim Wa Lā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 2-62 ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ هَا‌دُ‌و‌ا‌ ‌وَ‌ال‍‍نَّ‍‍‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ ‌وَ‌ال‍‍صَّ‍‍ابِئ‍‍ِ‍ي‍‍نَ مَ‍‌‍نْ ‌آمَنَ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ‌وَعَمِلَ صَ‍‍الِحا‌‌ ً‌ فَلَهُمْ ‌أَجْ‍‍رُهُمْ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌‍رَبِّهِمْ ‌وَلاَ‌ خَ‍‍وْفٌ عَلَيْهِمْ ‌وَلاَ‌ هُمْ يَحْزَنُونَ
Wa 'Idh 'Akhadhnā Mīthāqakum Wa Rafa`nā Fawqakumu Aţ-Ţūra Khudhū Mā 'Ātaynākum Biqūwatin Wa Adhkurū Mā Fīhi La`allakum Tattaqūna 2-63 இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்). وَ‌إِ‌ذْ‌ ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِيثَاقَ‍‍كُمْ ‌وَ‌‍رَفَعْنَا‌ فَوْ‍قَ‍‍كُمُ ‌ال‍‍طُّ‍‍و‌‍رَخُ‍‍ذُ‌و‌ا‌ مَ‍‍ا‌ ‌آتَيْنَاكُمْ بِ‍‍قُ‍‍وَّةٍ‌ ‌وَ‌ا‌ذْكُرُ‌و‌ا‌ مَا‌ ف‍‍ِ‍ي‍‍هِ لَعَلَّكُمْ تَتَّ‍‍قُ‍‍ونَ
Thumma Tawallaytum Min Ba`di Dhālika ۖ Falawlā Fađlu Allāhi `Alaykum Wa Raĥmatuhu Lakuntum Mina Al-Khāsirīna 2-64 அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள். ثُ‍‍مَّ تَوَلَّيْتُمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ ‌ذَلِكَ ۖ فَلَوْلاَ‌ فَ‍‍ضْ‍‍لُ ‌اللَّ‍‍هِ عَلَيْكُمْ ‌وَ‌‍رَحْمَتُ‍‍هُ لَكُ‍‌‍ن‍‍تُمْ مِنَ ‌الْ‍‍خَ‍‍اسِ‍‍رِينَ
Wa Laqad `Alimtumu Al-Ladhīna A`tadaw Minkum As-Sabti Faqulnā Lahum Kūnū Qiradatan Khāsi'īna 2-65 உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம். وَلَ‍قَ‍‍دْ‌ عَلِمْتُمُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اعْتَدَ‌وْ‌ا‌ مِ‍‌‍نْ‍‍كُمْ فِي ‌ال‍‍سَّ‍‍بْ‍‍تِ فَ‍‍قُ‍‍لْنَا‌ لَهُمْ كُونُو‌اقِ‍رَ‌دَةً خَ‍‍اسِئ‍‍ِ‍‍ينَ
Faja`alnāhā Nakālāan Limā Bayna Yadayhā Wa Mā Khalfahā Wa Maw`ižatan Lilmuttaqīna 2-66 இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். فَجَعَلْنَاهَا‌ نَكَالا‌ ً‌ لِمَا‌ بَ‍‍يْ‍‍نَ يَدَيْهَا‌ ‌وَمَا‌ خَ‍‍لْفَهَا‌ ‌وَمَوْعِ‍‍ظَ‍‍ة ً‌ لِلْمُتَّ‍‍قِ‍‍ينَ
Wa 'Idh Qāla Mūsá Liqawmihi~ 'Inna Allāha Ya'murukum 'An Tadhbaĥū Baqaratan ۖ Qālū 'Atattakhidhunā Huzūan ۖ Qāla 'A`ūdhu Billāhi~ 'An 'Akūna Mina Al-Jāhilīn 2-67 இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார். وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ مُوسَى‌ لِ‍‍قَ‍‍وْمِهِ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ يَأْمُرُكُمْ ‌أَ‌نْ تَذْبَحُو‌ا‌ بَ‍‍قَ‍رَة‌ ًۖ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌أَتَتَّ‍‍خِ‍‍ذُنَا‌ هُز‍ُ‍‌و‌ا‌‌ ًۖ قَ‍‍الَ ‌أَع‍‍ُ‍و‌ذُ‌ بِ‍اللَّ‍‍هِ ‌أَ‌نْ ‌أَك‍‍ُ‍ونَ مِنَ ‌الْجَاهِلِين
Qālū Ad`u Lanā Rabbaka Yubayyin Lanā Mā Hiya ۚ Qāla 'Innahu Yaqūlu 'Innahā Baqaratun Lā Fāriđun Wa Lā Bikrun `Awānun Bayna Dhālika ۖ Fāf`alū Mā Tu'umarūna 2-68 "அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!" என்றார்கள். "அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக" (மூஸா) கூறினார். قَ‍‍الُو‌ا‌ا‌دْعُ لَنَا‌ ‌‍رَبَّكَ يُبَيِّ‍‌‍نْ لَنَا‌ مَا‌ هِيَ ۚ قَ‍‍الَ ‌إِنَّ‍‍هُ يَ‍‍قُ‍‍ولُ ‌إِنَّ‍‍هَا‌ بَ‍‍قَ‍رَة ٌ‌ لاَ‌ فَا‌رِ‍‍ضٌ‌ ‌وَلاَ‌ بِكْرٌ‌ عَو‍َ‍‌ان‌‍ٌ‌ بَ‍‍يْ‍‍نَ ‌ذَلِكَ ۖ فَافْعَلُو‌ا‌ مَا‌ تُؤْمَرُ‌ونَ
Qālū Ad`u Lanā Rabbaka Yubayyin Lanā Mā Lawnuhā ۚ Qāla 'Innahu Yaqūlu 'Innahā Baqaratun Şafrā'u Fāqi`un Lawnuhā Tasurru An-Nāžirīna 2-69 "அதன் நிறம் யாது!" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; "திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்" என்று மூஸா கூறினார். قَ‍‍الُو‌ا‌ا‌دْعُ لَنَا‌ ‌‍رَبَّكَ يُبَيِّ‍‌‍نْ لَنَا‌ مَا‌ لَوْنُهَا‌ ۚ قَ‍‍الَ ‌إِنَّ‍‍هُ يَ‍‍قُ‍‍ولُ ‌إِنَّ‍‍هَا‌ بَ‍‍قَ‍رَة‌‍ٌصَ‍‍فْر‍َ‍‌ا‌ءُ‌ فَاقِ‍‍ع ٌ‌ لَوْنُهَا‌ تَسُرُّ‌ ‌ال‍‍نَّ‍‍اظِ‍‍رِينَ
Qālū Ad`u Lanā Rabbaka Yubayyin Lanā Mā Hiya 'Inna Al-Baqara Tashābaha `Alaynā Wa 'Innā 'In Shā'a Allāhu Lamuhtadūna 2-70 "உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்" என்று அவர்கள் கூறினார்கள். قَ‍‍الُو‌ا‌ا‌دْعُ لَنَا‌ ‌‍رَبَّكَ يُبَيِّ‍‌‍نْ لَنَا‌ مَا‌ هِيَ ‌إِنَّ ‌الْبَ‍‍قَ‍رَ‌ تَشَابَهَ عَلَيْنَا‌ ‌وَ‌إِنَّ‍‍ا‌ ‌إِ‌نْ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ لَمُهْتَدُ‌ونَ
Qāla 'Innahu Yaqūlu 'Innahā BaqaratunDhalūlun Tuthīru Al-'Arđa Wa Lā Tasqī Al-Ĥartha MusallamatunShiyata Fīhā ۚ Qālū Al-'Āna Ji'ta Bil-Ĥaqqi ۚ Fadhabaĥūhā Wa Mā Kādū Yaf`alūna 2-71 அவர்(மூஸா)"நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். "இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்" என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள். قَ‍‍الَ ‌إِنَّ‍‍هُ يَ‍‍قُ‍‍ولُ ‌إِنَّ‍‍هَا‌ بَ‍‍قَ‍رَة ٌ‌ لاَ‌ ‌ذَل‍‍ُ‍ول‌‍ٌ‌ تُث‍‍ِ‍ي‍‍رُ‌ ‌الأَ‌رْ‍ضَ ‌وَلاَ‌ تَسْ‍‍قِ‍‍ي ‌الْحَرْثَ مُسَلَّمَة ٌ‌ لاَ‌ شِيَةَ فِيهَا‌ ۚ قَ‍‍الُو‌ا‌الآنَ جِئْتَ بِ‍الْحَ‍‍قِّ ۚ فَذَبَحُوهَا‌ ‌وَمَا‌ كَا‌دُ‌و‌ا‌ يَفْعَلُونَ
Wa 'Idh Qataltum Nafsāan Fa Addāra'tum Fīhā Wa ۖ Allāhu Mukhrijun Mā Kuntum Taktumūna 2-72 "நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்). وَ‌إِ‌ذْ‌ قَ‍‍تَلْتُمْ نَفْسا‌‌ ً‌ فَا‌دَّ‌ا‌‍رَ‌أْتُمْ فِيهَا‌ ۖ ‌وَ‌اللَّهُ مُ‍‍خْ‍‍رِجٌ‌ مَا‌ كُ‍‌‍ن‍‍تُمْ تَكْتُمُونَ
Faqulnā Ađribūhu Biba`đihā ۚ Kadhālika Yuĥyī Al-Lahu Al-Mawtá Wa Yurīkum 'Āyātihi La`allakum Ta`qilūna 2-73 "(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். فَ‍قُ‍‍لْنَا‌ ‌اضْ‍‍رِب‍‍ُ‍وهُ بِبَعْ‍‍ضِ‍‍هَا‌ ۚ كَذَلِكَ يُحْيِي ‌اللَّهُ ‌الْمَوْتَى‌ ‌وَيُ‍‍رِيكُمْ ‌آيَاتِ‍‍هِ لَعَلَّكُمْ تَعْ‍‍قِ‍‍لُونَ
Thumma Qasat Qulūbukum Min Ba`di Dhālika Fahiya Kālĥijārati 'Aw 'Ashaddu Qaswatan ۚ Wa 'Inna Mina Al-Ĥijārati Lamā Yatafajjaru Minhu Al-'Anhāru ۚ Wa 'Inna Minhā Lamā Yashshaqqaqu Fayakhruju Minhu Al-Mā'u ۚ Wa 'Inna Minhā Lamā Yahbiţu Min Khashyati Allāhi ۗ Wa Mā Al-Lahu Bighāfilin `Ammā Ta`malūna 2-74 இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை. ثُ‍‍مَّ قَ‍‍سَتْ قُ‍‍لُوبُكُمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ ‌ذَلِكَ فَهِيَ كَالْحِجَا‌‍رَةِ ‌أَ‌وْ‌ ‌أَشَدُّ‌ قَ‍‍سْوَة ًۚ ‌وَ‌إِنَّ مِنَ ‌الْحِجَا‌‍رَةِ لَمَا‌ يَتَفَجَّرُ‌ مِ‍‌‍نْ‍‍هُ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ ۚ ‌وَ‌إِنَّ مِ‍‌‍نْ‍‍هَا‌ لَمَا‌ يَشَّ‍‍قَّ‍‍قُ فَيَ‍‍خْ‍‍رُجُ مِ‍‌‍نْ‍‍هُ ‌الْم‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَ‌إِنَّ مِ‍‌‍نْ‍‍هَا‌ لَمَا‌ يَهْبِ‍‍طُ مِ‍‌‍نْ خَ‍‍شْيَةِ ‌اللَّ‍‍هِ ۗ ‌وَمَا‌ ‌اللَّهُ بِ‍‍غَ‍‍افِلٍ عَ‍‍مَّ‍‍ا‌ تَعْمَلُونَ
'Afataţma`ūna 'An Yu'uminū Lakum Wa Qad Kāna Farīqun Minhum Yasma`ūna Kalāma Allāhi Thumma Yuĥarrifūnahu Min Ba`di Mā `Aqalūhu Wa Hum Ya`lamūna 2-75 (முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள். أَفَتَ‍‍طْ‍‍مَع‍‍ُ‍ونَ ‌أَ‌نْ يُؤْمِنُو‌ا‌ لَكُمْ ‌وَ‍قَ‍‍دْ‌ ك‍‍َ‍انَ فَ‍‍ر‍ِ‍ي‍‍قٌ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ يَسْمَع‍‍ُ‍ونَ كَلاَمَ ‌اللَّ‍‍هِ ثُ‍‍مَّ يُحَرِّفُونَ‍‍هُ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ عَ‍‍قَ‍‍ل‍‍ُ‍وهُ ‌وَهُمْ يَعْلَمُونَ
Wa 'Idhā Laqū Al-Ladhīna 'Āmanū Qālū 'Āmannā Wa 'Idhā Khalā Ba`đuhum 'Ilá Ba`đin Qālū 'Atuĥaddithūnahum Bimā Fataĥa Allāhu `Alaykum Liyuĥājjūkum Bihi `Inda Rabbikum ۚ 'Afalā Ta`qilūna 2-76 மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, "நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, "உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர். وَ‌إِ‌ذَ‌ا‌ لَ‍‍قُ‍‍و‌ا‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌اقَ‍‍الُ‍‍و‌ا‌ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ خَ‍‍لاَ‌ بَعْ‍‍ضُ‍‍هُمْ ‌إِلَى‌ بَعْ‍‍ضٍقَ‍‍الُ‍‍و‌ا‌ ‌أَتُحَدِّثُونَهُمْ بِمَا‌ فَتَحَ ‌اللَّ‍‍هُ عَلَيْكُمْ لِيُح‍‍َ‍اجُّوكُمْ بِ‍‍هِ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌‍رَبِّكُمْ ۚ ‌أَفَلاَ‌ تَعْ‍‍قِ‍‍لُونَ
'Awalā Ya`lamūna 'Anna Allāha Ya`lamu Mā Yusirrūna Wa Mā Yu`linūna 2-77 அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? أَ‌وَلاَ‌ يَعْلَم‍‍ُ‍ونَ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ يَعْلَمُ مَا‌ يُسِ‍‍ر‍ّ‍‍ُ‍‌ونَ ‌وَمَا‌ يُعْلِنُونَ
Wa Minhum 'Ummīyūna Lā Ya`lamūna Al-Kitāba 'Illā 'Amānīya Wa 'In Hum 'Illā Yažunnūna 2-78 மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. وَمِ‍‌‍نْ‍‍هُمْ ‌أُمِّ‍‍يّ‍‍ُ‍ونَ لاَ‌ يَعْلَم‍‍ُ‍ونَ ‌الْكِت‍‍َ‍ابَ ‌إِلاَّ‌ ‌أَمَانِيَّ ‌وَ‌إِ‌نْ هُمْ ‌إِلاَّ‌ يَ‍‍ظُ‍‍نُّ‍‍ونَ
Fawaylun Lilladhīna Yaktubūna Al-Kitāba Bi'aydīhim Thumma Yaqūlūna Hādhā Min `Indi Allāhi Liyashtarū Bihi Thamanāan Qalīlāan ۖ Fawaylun Lahum Mimmā Katabat 'Aydīhim Wa Waylun Lahum Mimmā Yaksibūna 2-79 ற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! فَوَيْ‍‍ل ٌ‌ لِلَّذ‍ِ‍ي‍‍نَ يَكْتُب‍‍ُ‍ونَ ‌الْكِت‍‍َ‍ابَ بِأَيْدِيهِمْ ثُ‍‍مَّ يَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ هَذَ‌ا‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِ‌ ‌اللَّ‍‍هِ لِيَشْتَرُ‌و‌ا‌ بِ‍‍هِ ثَمَنا‌‌ ًقَ‍‍لِيلا‌‌ ًۖ فَوَيْ‍‍ل ٌ‌ لَهُمْ مِ‍‍مَّ‍‍ا‌ كَتَبَتْ ‌أَيْدِيهِمْ ‌وَ‌وَيْ‍‍ل ٌ‌ لَهُمْ مِ‍‍مَّ‍‍ا‌ يَكْسِبُونَ
Wa Qālū Lan Tamassanā An-Nāru 'Illā 'Ayyāmāan Ma`dūdatan ۚ Qul 'Āttakhadhtum `Inda Allāhi `Ahdāan Falan Yukhlifa Allāhu `Ahdahu~ ۖ 'Am Taqūlūna `Alá Allāhi Mā Lā Ta`lamūna 2-80 "ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?" என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும். وَ‍قَ‍‍الُو‌ا‌ لَ‍‌‍نْ تَمَسَّنَا‌ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌رُ‌ ‌إِلاَّ‌ ‌أَيَّاما‌ ً‌ مَعْدُ‌و‌دَة‌ ًۚ قُ‍‍لْ ‌أ‍َ‍‌اتَّ‍‍خَ‍‍ذْتُمْ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ عَهْد‌ا‌‌ ً‌ فَلَ‍‌‍نْ يُ‍‍خْ‍‍لِفَ ‌اللَّ‍‍هُ عَهْدَهُ~ُ ۖ ‌أَمْ تَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ عَلَى‌ ‌اللَّ‍‍هِ مَا‌ لاَ‌ تَعْلَمُونَ
Balá Man Kasaba Sayyi'atan Wa 'Aĥāţat Bihi Khaţī'atuhu Fa'ūlā'ika 'Aşĥābu An-Nāri ۖ Hum Fīhā Khālidūna 2-81 அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள். بَلَى‌ مَ‍‌‍نْ كَسَبَ سَيِّئَة ً‌ ‌وَ‌أَحَاطَ‍‍تْ بِ‍‍هِ خَ‍‍ط‍‍ِ‍ي‍‍ئَتُ‍‍هُ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
Wa Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti 'Ūlā'ika 'Aşĥābu Al-Jannati ۖ Hum Fīhā Khālidūna 2-82 எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌الْجَ‍‍نَّ‍‍ةِ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
Wa 'Idh 'Akhadhnā Mīthāqa Banī 'Isrā'īla Lā Ta`budūna 'Illā Al-Laha Wa Bil-Wālidayni 'Iĥsānāan Wa Dhī Al-Qurbá Wa Al-Yatāmá Wa Al-Masākīni Wa Qūlū Lilnnāsi Ĥusnāan Wa 'Aqīmū Aş-Şalāata Wa 'Ātū Az-Zakāata Thumma Tawallaytum 'Illā Qalīlāan Minkum Wa 'Antum Mu`rūna 2-83 இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். وَ‌إِ‌ذْ‌ ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِيث‍‍َ‍اقَ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ لاَ‌ تَعْبُد‍ُ‍‌ونَ ‌إِلاَّ‌ ‌اللَّ‍‍هَ ‌وَبِالْوَ‌الِدَيْ‍‍نِ ‌إِحْسَانا‌ ً‌ ‌وَ‌ذِي ‌الْ‍‍قُ‍‍رْبَى‌ ‌وَ‌الْيَتَامَى‌ ‌وَ‌الْمَسَاك‍‍ِ‍ي‍‍نِ ‌وَ‍قُ‍‍ولُو‌ا‌ لِل‍‍نّ‍‍َ‍اسِ حُسْنا‌ ً‌ ‌وَ‌أَ‍قِ‍‍يمُو‌ا‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آتُو‌ا‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ثُ‍‍مَّ تَوَلَّيْتُمْ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ مُعْ‍‍رِ‍‍ضُ‍‍ونَ
Wa 'Idh 'Akhadhnā Mīthāqakum Lā Tasfikūna Dimā'akum Wa Lā Tukhrijūna 'Anfusakum Min Diyārikum Thumma 'Aqrartum Wa 'Antum Tash/hadūna 2-84 இன்னும் (நினைவு கூறுங்கள்;) "உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்" என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள்; (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள். وَ‌إِ‌ذْ‌ ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِيثَاقَ‍‍كُمْ لاَ‌ تَسْفِك‍‍ُ‍ونَ ‌دِم‍‍َ‍ا‌ءَكُمْ ‌وَلاَ‌ تُ‍‍خْ‍‍رِج‍‍ُ‍ونَ ‌أَ‌ن‍‍فُسَكُمْ مِ‍‌‍نْ ‌دِيَا‌رِكُمْ ثُ‍‍مَّ ‌أَ‍قْ‍‍‍رَ‌رْتُمْ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ تَشْهَدُ‌ونَ
Thumma 'Antum Hā'uulā' Taqtulūna 'Anfusakum Wa Tukhrijūna Farīqāan Minkum Min Diyārihim Tažāharūna `Alayhim Bil-'Ithmi Wa Al-`Udwāni Wa 'In Ya'tūkum 'Usārá Tufādūhum Wa Huwa Muĥarramun `Alaykum 'Ikhjuhum ۚ 'A Fatu'uminūna Biba`đi Al-Kitābi Wa Takfurūna ۚ Biba`đin Famā Jazā'u Man Yaf`alu Dhālika Minkum 'Illā Khizyun Al-Ĥayāati ۖ Ad-Dunyā Wa Yawma Al-Qiyāmati Yuraddūna 'Ilá 'Ashaddi ۗ Al-`Adhābi Wa Mā Al-Lahu Bighāfilin `Ammā Ta`malūna 2-85 (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. ثُ‍‍مَّ ‌أَ‌نْ‍‍تُمْ ه‍‍َ‍ا‌ؤُلاَ‌ء‌ تَ‍‍قْ‍‍تُل‍‍ُ‍ونَ ‌أَ‌ن‍‍فُسَكُمْ ‌وَتُ‍‍خْ‍‍رِج‍‍ُ‍ونَ فَ‍‍رِي‍‍ق‍‍ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍كُمْ مِ‍‌‍نْ ‌دِيَا‌رِهِمْ تَ‍‍ظَ‍‍اهَر‍ُ‍‌ونَ عَلَيْهِمْ بِ‍الإِثْمِ ‌وَ‌الْعُ‍‍دْ‌و‍َ‍‌انِ ‌وَ‌إِ‌نْ يَأْتُوكُمْ ‌أُسَا‌‍رَ‌ى‌ تُفَا‌دُ‌وهُمْ ‌وَهُوَ‌ مُحَ‍رَّمٌ عَلَيْكُمْ ‌إِخْ‍رَ‌اجُهُمْ ۚ ‌أَ‌ فَتُؤْمِن‍‍ُ‍ونَ بِبَعْ‍‍ضِ ‌الْكِت‍‍َ‍ابِ ‌وَتَكْفُر‍ُ‍‌ونَ ۚ بِبَعْ‍‍ضٍ‌ فَمَا‌ جَز‍َ‍‌ا‌ءُ‌ مَ‍‌‍نْ يَفْعَلُ ‌ذَلِكَ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌إِلاَّ‌ خِ‍‍زْي‌‍ٌ‌ فِي ‌الْحَي‍‍َ‍اةِ ۖ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَيَ‍‍وْمَ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ يُ‍رَ‌دّ‍ُ‍‌ونَ ‌إِلَ‍‍ى‌ ‌أَشَدِّ‌ ۗ ‌الْعَذ‍َ‍‌ابِ ‌وَمَا‌ ‌اللَّهُ بِ‍‍غَ‍‍افِلٍ عَ‍‍مَّ‍‍ا‌ تَعْمَلُونَ
'Ūlā'ika Al-Ladhīna Ashtaraw Al-Ĥayāata Ad-Dunyā Bil-'Ākhirati ۖ Falā Yukhaffafu `Anhumu Al-`Adhābu Wa Lā Hum Yunşarūna 2-86 மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமாள) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اشْتَ‍رَ‌وُ‌ا‌ ‌الْحَي‍‍َ‍اةَ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ بِ‍الآ‍‍خِ‍رَةِ ۖ فَلاَ‌ يُ‍‍خَ‍‍فَّفُ عَ‍‌‍نْ‍‍هُمُ ‌الْعَذ‍َ‍‌ابُ ‌وَلاَ‌ هُمْ يُ‍‌‍ن‍‍صَ‍‍رُ‌ونَ
Wa Laqad 'Ātaynā Mūsá Al-Kitāba Wa Qaffaynā Min Ba`dihi Bir-Rusuli ۖ Wa 'Ātaynā `Īsá Abna Maryama Al-Bayyināti Wa 'Ayyadnāhu Birūĥi Al-Qudusi ۗ 'Afakullamā Jā'akum Rasūlun Bimā Lā Tahwá 'Anfusukum Astakbartum Fafarīqāan Kadhdhabtum Wa Farīqāan Taqtulūn 2-87 மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை(நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். وَلَ‍قَ‍‍دْ‌ ‌آتَيْنَا‌ مُوسَى‌ ‌الْكِت‍‍َ‍ابَ ‌وَ‍قَ‍‍فَّيْنَا‌ مِ‍‌‍نْ بَعْدِهِ بِ‍ال‍‍رُّسُلِ ۖ ‌وَ‌آتَيْنَا‌ عِيسَى‌ ‌ابْ‍‍نَ مَرْيَمَ ‌الْبَيِّن‍‍َ‍اتِ ‌وَ‌أَيَّ‍‍دْن‍‍َ‍اهُ بِر‍ُ‍‌وحِ ‌الْ‍‍قُ‍‍دُسِ ۗ ‌أَفَكُلَّمَا‌ ج‍‍َ‍ا‌ءَكُمْ ‌‍رَس‍‍ُ‍ول‌‍ٌ‌ بِمَا‌ لاَ‌ تَهْوَ‌ى‌ ‌أَ‌ن‍‍فُسُكُمْ ‌اسْتَكْبَرْتُمْ فَفَ‍‍رِي‍‍ق‍‍ا‌‌ ً‌ كَذَّبْ‍‍تُمْ ‌وَفَ‍‍رِي‍‍ق‍‍ا‌‌ ً‌ تَ‍‍قْ‍‍تُلُون
Wa Qālū Qulūbunā Ghulfun ۚ Bal La`anahumu Allāhu Bikufrihim Faqalīlāan Mā Yu'uminūna 2-88 இன்னும், அவர்கள் (யூதர்கள்) "எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள். وَ‍قَ‍‍الُو‌اقُ‍‍لُوبُنَا‌ غُ‍‍لْف‌‍ٌۚ بَلْ لَعَنَهُمُ ‌اللَّ‍‍هُ بِكُفْ‍‍رِهِمْ فَ‍‍قَ‍‍لِيلا‌ ً‌ مَا‌ يُؤْمِنُونَ
Wa Lammā Jā'ahum Kitābun Min `Indi Allāhi Muşaddiqun Limā Ma`ahum Wa Kānū Min Qablu Yastaftiĥūna `Alá Al-Ladhīna Kafarū Falammā Jā'ahum Mā `Arafū Kafarū Bihi ۚ Fala`natu Allāhi `Alá Al-Kāfirīna 2-89 அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது! وَلَ‍‍مَّ‍‍ا‌ ج‍‍َ‍ا‌ءَهُمْ كِت‍‍َ‍ابٌ‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِ‌ ‌اللَّ‍‍هِ مُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍ ٌ‌ لِمَا‌ مَعَهُمْ ‌وَكَانُو‌ا‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ يَسْتَفْتِح‍‍ُ‍ونَ عَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ فَلَ‍‍مَّ‍‍ا‌ ج‍‍َ‍ا‌ءَهُمْ مَا‌ عَ‍رَفُو‌ا‌ كَفَرُ‌و‌ا‌ بِ‍‍هِ ۚ فَلَعْنَةُ ‌اللَّ‍‍هِ عَلَى‌ ‌الْكَافِ‍‍رِينَ
Bi'sa Mā Ashtaraw Bihi~ 'Anfusahum 'An Yakfurū Bimā 'Anzala Allāhu Baghyāan 'An Yunazzila Allāhu Min Fađlih `Alá Man Yashā'u Min ۖ `Ibādihi Fabā'ū Bighađabin `Alá ۚ Ghađabin Wa Lilkāfirīna `Adhābun Muhīnun 2-90 தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு. بِئْسَ مَا‌ ‌اشْتَ‍رَ‌وْ‌ا‌ بِهِ ‌أَ‌ن‍‍فُسَهُمْ ‌أَ‌نْ يَكْفُرُ‌و‌ا‌ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ بَ‍‍غْ‍‍ياً‌ ‌أَ‌نْ يُنَزِّلَ ‌اللَّ‍‍هُ مِ‍‌‍نْ فَ‍‍ضْ‍‍لِه عَلَى‌ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ مِ‍‌‍نْ ۖ عِبَا‌دِهِ فَب‍‍َ‍ا‌ء‍ُ‍‌و‌ا‌ بِ‍‍غَ‍‍ضَ‍‍بٍ عَلَى‌ ۚ غَ‍‍ضَ‍‍بٍ‌ ‌وَلِلْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ عَذ‍َ‍‌ابٌ‌ مُهِينٌ
Wa 'Idhā Qīla Lahum 'Āminū Bimā 'Anzala Allāhu Qālū Nu'uminu Bimā 'Unzila `Alaynā Wa Yakfurūna Bimā Warā'ahu Wa Huwa Al-Ĥaqqu Muşaddiqāan Limā Ma`ahum ۗ Qul Falima Taqtulūna 'Anbiyā'a Allāhi Min Qablu 'In Kuntum Mu'uminīna 2-91 "அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக. وَ‌إِ‌ذَ‌ا‌ قِ‍‍ي‍‍لَ لَهُمْ ‌آمِنُو‌ا‌ بِمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ قَ‍‍الُو‌ا‌ نُؤْمِنُ بِمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ عَلَيْنَا‌ ‌وَيَكْفُر‍ُ‍‌ونَ بِمَا‌ ‌وَ‌ر‍َ‍‌ا‌ءَهُ ‌وَهُوَ‌ ‌الْحَ‍‍قُّ مُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍‍ا‌ ً‌ لِمَا‌ مَعَهُمْ ۗ قُ‍‍لْ فَلِمَ تَ‍‍قْ‍‍تُل‍‍ُ‍ونَ ‌أَ‌نْ‍‍بِي‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مُؤْمِنِينَ
Wa Laqad Jā'akum Mūsá Bil-Bayyināti Thumma Attakhadhtumu Al-`Ijla Min Ba`dihi Wa 'Antum Žālimūna 2-92 நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். وَلَ‍قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَكُمْ مُوسَى‌ بِ‍الْبَيِّن‍‍َ‍اتِ ثُ‍‍مَّ ‌اتَّ‍‍خَ‍‍ذْتُمُ ‌الْعِ‍‍جْ‍‍لَ مِ‍‌‍نْ بَعْدِهِ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ ظَ‍‍الِمُونَ
Wa 'Idh 'Akhadhnā Mīthāqakum Wa Rafa`nā Fawqakumu Aţ-Ţūra Khudhū Mā 'Ātaynākum Biqūwatin Wa Asma`ū ۖ Qālū Sami`nā Wa `Aşaynā Wa 'Ushribū Fī Qulūbihimu Al-`Ijla Bikufrihim ۚ Qul Bi'samā Ya'murukum Bihi~ 'Īmānukum 'In Kuntum Mu'uminīna 2-93 தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும். وَ‌إِ‌ذْ‌ ‌أَ‍خَ‍‍ذْنَا‌ مِيثَاقَ‍‍كُمْ ‌وَ‌‍رَفَعْنَا‌ فَوْ‍قَ‍‍كُمُ ‌ال‍‍طُّ‍‍و‌‍رَخُ‍‍ذُ‌و‌ا‌ مَ‍‍ا‌ ‌آتَيْنَاكُمْ بِ‍‍قُ‍‍وَّةٍ‌ ‌وَ‌اسْمَعُو‌اۖ قَ‍‍الُو‌ا‌ سَمِعْنَا‌ ‌وَعَ‍‍صَ‍‍يْنَا‌ ‌وَ‌أُشْ‍‍رِبُو‌ا‌ فِي قُ‍‍لُوبِهِمُ ‌الْعِ‍‍جْ‍‍لَ بِكُفْ‍‍رِهِمْ ۚ قُ‍‍لْ بِئْسَمَا‌ يَأْمُرُكُمْ بِهِ ‌إِيمَانُكُمْ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مُؤْمِنِينَ
Qul 'In Kānat Lakumu Ad-Dāru Al-'Ākhiratu `Inda Allāhi Khālişatan Min Dūni An-Nāsi Fatamannaw Al-Mawta 'In Kuntum Şādiqīna 2-94 (நபியே!) "இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீர் சொல்வீராக. قُ‍‍لْ ‌إِ‌نْ كَانَتْ لَكُمُ ‌ال‍‍دّ‍َ‍‌ا‌رُ‌ ‌الآ‍‍خِ‍رَةُ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ خَ‍‍الِ‍‍صَ‍‍ة ً‌ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ فَتَمَ‍‍نَّ‍‍وْ‌ا‌ ‌الْمَ‍‍وْتَ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ صَ‍‍ا‌دِقِ‍‍ينَ
Wa Lan Yatamannawhu 'Abadāan Bimā Qaddamat 'Aydīhim Wa ۗ Allāhu `Alīmun Biž-Žālimīna 2-95 ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான். وَلَ‍‌‍نْ يَتَمَ‍‍نَّ‍‍وْهُ ‌أَبَد‌ا‌ ً‌ بِمَا‌ قَ‍‍دَّمَتْ ‌أَيْدِيهِمْ ۗ ‌وَ‌اللَّهُ عَل‍‍ِ‍ي‍‍م‌‍ٌ‌ بِ‍ال‍‍ظَّ‍‍الِمِينَ
Wa Latajidannahum 'Aĥraşa An-Nāsi `Alá Ĥayāatin Wa Mina Al-Ladhīna 'Ashraۚ Yawaddu 'Aĥaduhum Law Yu`ammaru 'Alfa Sanatin Wa Mā Huwa Bimuzaĥziĥihi Mina Al-`Adhābi 'An Yu`ammara Wa ۗ Allāhu Başīrun Bimā Ya`malūna 2-96 அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான். وَلَتَجِدَنَّ‍‍هُمْ ‌أَحْ‍رَصَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ عَلَى‌ حَي‍‍َ‍اةٍ‌ ‌وَمِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أَشْ‍رَكُو‌اۚ يَوَ‌دُّ‌ ‌أَحَدُهُمْ لَوْ‌ يُعَ‍‍مَّ‍‍رُ‌ ‌أَلْفَ سَنَةٍ‌ ‌وَمَا‌ هُوَ‌ بِمُزَحْزِحِ‍‍هِ مِنَ ‌الْعَذ‍َ‍‌ابِ ‌أَ‌نْ يُعَ‍‍مَّ‍‍‍رَۗ ‌وَ‌اللَّهُ بَ‍‍صِ‍‍ي‍‍ر‌ٌ‌ بِمَا‌ يَعْمَلُونَ
Qul Man Kāna `Adūwāan Lijibrīla Fa'innahu Nazzalahu `Alá Qalbika Bi'idhni Allāhi Muşaddiqāan Limā Bayna Yadayhi Wa Hudan Wa Bushrá Lilmu'uminīna 2-97 யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. قُ‍‍لْ مَ‍‌‍نْ ك‍‍َ‍انَ عَدُ‌وّ‌ا‌ ً‌ لِجِ‍‍بْ‍‍ر‍ِ‍ي‍‍لَ فَإِنَّ‍‍هُ نَزَّلَ‍‍هُ عَلَى‌ قَ‍‍لْبِكَ بِإِ‌ذْنِ ‌اللَّ‍‍هِ مُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍‍ا‌ ً‌ لِمَا‌ بَ‍‍يْ‍‍نَ يَدَيْ‍‍هِ ‌وَهُ‍‍د‌ى‌ ً‌ ‌وَبُشْ‍رَ‌ى‌ لِلْمُؤْمِنِينَ
Man Kāna `Adūwāan Lillāh Wa Malā'ikatihi Wa Rusulihi Wa Jibrīla Wa Mīkāla Fa'inna Allāha `Adūwun Lilkāfirīna 2-98 எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். مَ‍‌‍نْ ك‍‍َ‍انَ عَدُ‌وّ‌ا‌ ًلِلَّهِ ‌وَمَلاَئِكَتِ‍‍هِ ‌وَ‌رُسُلِ‍‍هِ ‌وَجِ‍‍بْ‍‍ر‍ِ‍ي‍‍لَ ‌وَمِيك‍‍َ‍الَ فَإِنَّ ‌اللَّ‍‍هَ عَدُ‌وّ‌ٌ‌ لِلْكَافِ‍‍رِينَ
Wa Laqad 'Anzalnā 'Ilayka 'Āyātin Bayyinātin ۖ Wa Mā Yakfuru Bihā 'Illā Al-Fāsiqūna 2-99 (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். وَلَ‍قَ‍‍دْ‌ ‌أَ‌ن‍‍زَلْنَ‍‍ا‌ ‌إِلَ‍‍يْ‍‍كَ ‌آي‍‍َ‍ات ٍ‌ بَيِّن‍‍َ‍اتٍۖ ‌وَمَا‌ يَكْفُرُ‌ بِهَ‍‍ا‌ ‌إِلاَّ‌ ‌الْفَاسِ‍‍قُ‍‍ونَ
'Awakullamā `Āhadū `Ahdāan Nabadhahu Farīqun Minhum ۚ Bal 'Aktharuhum Lā Yu'uminūna 2-100 மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள். أَ‌وَكُلَّمَا‌ عَاهَدُ‌و‌ا‌ عَهْد‌ا‌ ً‌ نَبَذَهُ فَ‍‍ر‍ِ‍ي‍‍قٌ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ۚ بَلْ ‌أَكْثَرُهُمْ لاَ‌ يُؤْمِنُونَ
Wa Lammā Jā'ahum Rasūlun Min `Indi Allāhi Muşaddiqun Limā Ma`ahum Nabadha Farīqun Mina Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Kitāba Allāhi Warā'a Žuhūrihim Ka'annahum Lā Ya`lamūna 2-101 அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். وَلَ‍‍مَّ‍‍ا‌ ج‍‍َ‍ا‌ءَهُمْ ‌‍رَس‍‍ُ‍ولٌ‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِ‌ ‌اللَّ‍‍هِ مُ‍‍صَ‍‍دِّ‍‍ق‍ ٌ‌ لِمَا‌ مَعَهُمْ نَبَذَ‌ فَ‍‍ر‍ِ‍ي‍‍قٌ‌ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْكِت‍‍َ‍ابَ كِت‍‍َ‍ابَ ‌اللَّ‍‍هِ ‌وَ‌ر‍َ‍‌ا‌ءَ‌ ظُ‍‍هُو‌رِهِمْ كَأَنَّ‍‍هُمْ لاَ‌ يَعْلَمُونَ
Wa Attaba`ū Mā Tatlū Ash-Shayāţīnu `Alá Mulki Sulaymāna ۖ Wa Mā Kafara Sulaymānu Wa Lakinna Ash-Shayāţīna Kafarū Yu`allimūna An-Nāsa As-Siĥra Wa Mā 'Unzila `Alá Al-Malakayni Bibābila Hārūta Wa Mārūta ۚ Wa Mā Yu`allimāni Min 'Aĥadin Ĥattá Yaqūlā 'Innamā Naĥnu Fitnatun Falā Takfur ۖ Fayata`allamūna Minhumā Mā Yufarriqūna Bihi Bayna Al-Mar'i Wa Zawjihi ۚ Wa Mā Hum Biđārrīna Bihi Min 'Aĥadin 'Illā Bi'idhni Allāhi ۚ Wa Yata`allamūna Mā Yađurruhum Wa Lā Yanfa`uhum ۚ Wa Laqad `Alimū Lamani Ashtarāhu Mā Lahu Fī Al-'Ākhirati Min Khalāqin ۚ Wa Labi'sa Mā Sharaw Bihi~ 'Anfusahum ۚ Law Kānū Ya`lamūna 2-102 அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? وَ‌اتَّبَعُو‌ا‌ مَا‌ تَتْلُو‌ ‌ال‍‍شَّيَاطِ‍‍ي‍‍نُ عَلَى‌ مُلْكِ سُلَيْم‍‍َ‍انَ ۖ ‌وَمَا‌ كَفَ‍رَ‌ سُلَيْم‍‍َ‍انُ ‌وَلَكِ‍‍نَّ ‌ال‍‍شَّيَاطِ‍‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ يُعَلِّم‍‍ُ‍ونَ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ ‌ال‍‍سِّحْ‍رَ‌ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ عَلَى‌ ‌الْمَلَكَ‍‍يْ‍‍نِ بِبَابِلَ هَا‌ر‍ُ‍‌وتَ ‌وَمَا‌ر‍ُ‍‌وتَ ۚ ‌وَمَا‌ يُعَلِّم‍‍َ‍انِ مِ‍‌‍نْ ‌أَحَدٍ‌ حَتَّى‌ يَ‍‍قُ‍‍ولاَ‌ ‌إِنَّ‍‍مَا‌ نَحْنُ فِتْنَة‌‍ٌ‌ فَلاَ‌ تَكْفُرْ‌ ۖ فَيَتَعَلَّم‍‍ُ‍ونَ مِ‍‌‍نْ‍‍هُمَا‌ مَا‌ يُفَرِّ‍‍قُ‍‍ونَ بِ‍‍هِ بَ‍‍يْ‍‍نَ ‌الْمَرْ‌ءِ‌ ‌وَ‌زَ‌وْجِ‍‍هِ ۚ ‌وَمَا‌ هُمْ بِ‍‍ضَ‍‍ا‌رّ‍ِ‍ي‍‍نَ بِ‍‍هِ مِ‍‌‍نْ ‌أَحَد‌‌ٍ‌ ‌إِلاَّ‌ بِإِ‌ذْنِ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَيَتَعَلَّم‍‍ُ‍ونَ مَا‌ يَ‍‍ضُ‍‍رُّهُمْ ‌وَلاَ‌ يَ‍‌‍ن‍‍فَعُهُمْ ۚ ‌وَلَ‍‍قَ‍‍دْ‌ عَلِمُو‌ا‌ لَمَنِ ‌اشْتَ‍رَ‍‌اهُ مَا‌ لَ‍‍هُ فِي ‌الآ‍‍خِ‍رَةِ مِ‍‌‍نْ خَ‍‍لاَ‍قٍۚ ‌وَلَبِئْسَ مَا‌ شَ‍رَ‌وْ‌ا‌ بِهِ ‌أَ‌ن‍‍فُسَهُمْ ۚ لَوْ‌ كَانُو‌ا‌ يَعْلَمُونَ
Wa Law 'Annahum 'Āmanū Wa Attaqaw Lamathūbatun Min `Indi Allāhi Khayrun ۖ Law Kānū Ya`lamūna 2-103 அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்;. இதனை அவர்கள் அறிய வேண்டாமா? وَلَوْ‌ ‌أَنَّ‍‍هُمْ ‌آمَنُو‌ا‌ ‌وَ‌اتَّ‍‍قَ‍‍وْ‌ا‌ لَمَثُوبَةٌ‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِ‌ ‌اللَّ‍‍هِ خَ‍‍يْ‍‍ر‌ٌۖ لَوْ‌ كَانُو‌ا‌ يَعْلَمُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Taqūlū `inā Wa Qūlū Anžurnā Wa Asma`ū ۗ Wa Lilkāfirīna `Adhābun 'Alīmun 2-104 ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) 'ராயினா' என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) 'உன்ளுர்னா' என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு. يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تَ‍‍قُ‍‍ولُو‌ا‌ ‌‍رَ‌اعِنَا‌ ‌وَ‍قُ‍‍ولُو‌ا‌ان‍‍ظُ‍‍رْنَا‌ ‌وَ‌اسْمَعُو‌اۗ ‌وَلِلْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
Mā Yawaddu Al-Ladhīna Kafarū Min 'Ahli Al-Kitābi Wa Lā Al-Mushrikīna 'An Yunazzala `Alaykum Min Khayrin Min Rabbikum Wa ۗ Allāhu Yakhtaşşu Biraĥmatihi Man Yashā'u Wa ۚ Allāhu Dhū Al-Fađli Al-`Ažīmi 2-105 அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன். مَا‌ يَوَ‌دُّ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ مِ‍‌‍نْ ‌أَهْلِ ‌الْكِت‍‍َ‍ابِ ‌وَلاَ‌ ‌الْمُشْ‍‍رِك‍‍ِ‍ي‍‍نَ ‌أَ‌نْ يُنَزَّلَ عَلَيْكُمْ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌ٍ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكُمْ ۗ ‌وَ‌اللَّهُ يَ‍‍خْ‍‍تَ‍‍صُّ بِ‍رَحْمَتِ‍‍هِ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَ‌اللَّهُ ‌ذُ‌و‌ ‌الْفَ‍‍ضْ‍‍لِ ‌الْعَ‍‍ظِ‍‍يمِ
Mā Nansakh Min 'Āyatin 'Aw Nunsihā Na'ti Bikhayrin Minhā 'Aw Mithlihā ۗ 'Alam Ta`lam 'Anna Allāha `Alá Kulli Shay'in Qadīrun 2-106 ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? مَا‌ نَ‍‌‍ن‍‍سَ‍‍خْ مِ‍‌‍نْ ‌آيَةٍ ‌أَ‌وْ‌ نُ‍‌‍ن‍‍سِهَا‌ نَأْتِ بِ‍‍خَ‍‍يْ‍‍ر‌ٍ‌ مِ‍‌‍نْ‍‍هَ‍‍ا‌ ‌أَ‌وْ‌ مِثْلِهَ‍‍اۗ ‌أَلَمْ تَعْلَمْ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
'Alam Ta`lam 'Anna Allāha Lahu Mulku As-Samāwāti Wa Al-'Arđi ۗ Wa Mā Lakum Min Dūni Allāhi Min Wa Līyin Wa Lā Naşīrin 2-107 நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? أَلَمْ تَعْلَمْ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ لَ‍‍هُ مُلْكُ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ۗ ‌وَمَا‌ لَكُمْ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ ‌وَلِيٍّ‌ ‌وَلاَ‌ نَ‍‍صِ‍‍ي‍‍ر‍ٍ‍
'Am Turīdūna 'An Tas'alū Rasūlakum Kamā Su'ila Mūsá Min Qablu ۗ Wa Man Yatabaddali Al-Kufra Bil-'Īmāni Faqad Đalla Sawā'a As-Sabīli 2-108 இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான். أَمْ تُ‍‍رِيد‍ُ‍‌ونَ ‌أَ‌نْ تَسْأَلُو‌ا‌ ‌‍رَسُولَكُمْ كَمَا‌ سُئِلَ مُوسَى‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لُ ۗ ‌وَمَ‍‌‍نْ يَتَبَدَّلِ ‌الْكُفْ‍رَ‌ بِ‍الإِيم‍‍َ‍انِ فَ‍‍قَ‍‍دْ‌ ضَ‍‍لَّ سَو‍َ‍‌ا‌ءَ‌ ‌ال‍‍سَّبِيلِ
Wadda Kathīrun Min 'Ahli Al-Kitābi Law Yaruddūnakum Min Ba`di 'Īmānikum Kuffāan Ĥasadāan Min `Indi 'Anfusihim Min Ba`di Mā Tabayyana Lahumu Al-Ĥaqqu ۖ Fā`fū Wa Aşfaĥū Ĥattá Ya'tiya Allāhu Bi'amrihi~ ۗ 'Inna Allāha `Alá Kulli Shay'in Qadīrun 2-109 வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான். وَ‌دَّ‌ كَث‍‍ِ‍ي‍‍ر‌ٌ‌ مِ‍‌‍نْ ‌أَهْلِ ‌الْكِت‍‍َ‍ابِ لَوْ‌ يَرُ‌دُّ‌ونَكُمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ ‌إِيمَانِكُمْ كُفَّا‌ر‌اً‌ حَسَد‌ا‌ ً‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِ‌ ‌أَ‌ن‍‍فُسِهِمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ تَبَيَّنَ لَهُمُ ‌الْحَ‍‍قُّ ۖ فَاعْفُو‌ا‌ ‌وَ‌اصْ‍‍فَحُو‌ا‌ حَتَّى‌ يَأْتِيَ ‌اللَّ‍‍هُ بِأَمْ‍‍رِهِ ۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Wa 'Aqīmū Aş-Şalāata Wa 'Ātū Az-Zakāata ۚ Wa Mā Tuqaddimū Li'nfusikum Min Khayrin Tajidūhu `Inda Allāhi ۗ 'Inna Allāha Bimā Ta`malūna Başīrun 2-110 இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். وَ‌أَ‍قِ‍‍يمُو‌ا‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آتُو‌ا‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ۚ ‌وَمَا‌ تُ‍‍قَ‍‍دِّمُو‌ا‌ لِأ‌ن‍‍فُسِكُمْ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌‌ٍ‌ تَجِد‍ُ‍‌وهُ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ ۗ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ بَ‍‍صِ‍‍يرٌ
Wa Qālū Lan Yadkhula Al-Jannata 'Illā Man Kāna Hūdāan 'Aw Naşārá ۗ Tilka 'Amānīyuhum ۗ Qul Hātū Burhānakum 'In Kuntum Şādiqīn 2-111 "யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; "நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! وَ‍قَ‍‍الُو‌ا‌ لَ‍‌‍نْ يَ‍‍دْ‍‍خُ‍‍لَ ‌الْجَ‍‍نَّ‍‍ةَ ‌إِلاَّ‌ مَ‍‌‍نْ ك‍‍َ‍انَ هُو‌د‌اً‌ ‌أَ‌وْ‌ نَ‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ ۗ تِلْكَ ‌أَمَانِيُّهُمْ ۗ قُ‍‍لْ هَاتُو‌ا‌ بُرْهَانَكُمْ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ صَ‍‍ا‌دِ‍ق‍‍ِ‍‍ين
Balá Man 'Aslama Wajhahu Lillāh Wa Huwa Muĥsinun Falahu~ 'Ajruhu `Inda Rabbihi Wa Lā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 2-112 அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். بَلَى‌ مَ‍‌‍نْ ‌أَسْلَمَ ‌وَجْ‍‍هَ‍‍هُ لِلَّهِ ‌وَهُوَ‌ مُحْسِن‌‍ٌ‌ فَلَهُ~ُ ‌أَجْ‍‍رُهُ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌‍رَبِّ‍‍هِ ‌وَلاَ‌ خَ‍‍وْفٌ عَلَيْهِمْ ‌وَلاَ‌ هُمْ يَحْزَنُونَ
Wa Qālati Al-Yahūdu Laysati An-Naşārá `Alá Shay'in Wa Qālati An-Naşārá Laysati Al-Yahūdu `Alá Shay'in Wa Hum Yatlūna Al-Kitāba ۗ Kadhālika Qāla Al-Ladhīna Lā Ya`lamūna Mithla Qawlihim ۚ Fa-Allāhu Yaĥkumu Baynahum Yawma Al-Qiyāmati Fīmā Kānū Fīhi Yakhtalifūna 2-113 யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான். وَ‍قَ‍‍الَتِ ‌الْيَه‍‍ُ‍و‌دُ‌ لَيْسَتِ ‌ال‍‍نَّ‍‍‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ عَلَى‌ شَ‍‍يْء‌ٍ‌ ‌وَ‍قَ‍‍الَتِ ‌ال‍‍نَّ‍‍‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ لَيْسَتِ ‌الْيَه‍‍ُ‍و‌دُ‌ عَلَى‌ شَ‍‍يْء‌ٍ‌ ‌وَهُمْ يَتْل‍‍ُ‍ونَ ‌الْكِت‍‍َ‍ابَ ۗ كَذَلِكَ قَ‍‍الَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ لاَ‌ يَعْلَم‍‍ُ‍ونَ مِثْلَ قَ‍‍وْلِهِمْ ۚ فَاللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَ‍‍وْمَ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ فِيمَا‌ كَانُو‌ا‌ ف‍‍ِ‍ي‍‍هِ يَ‍‍خْ‍‍تَلِفُونَ
Wa Man 'Ažlamu Mimman Mana`a Masājida Allāhi 'An Yudhkara Fīhā Asmuhu Wa Sa`á Fī Khabihā ۚ 'Ūlā'ika Mā Kāna Lahum 'An Yadkhulūhā 'Ilā Khā'ifīna ۚ Lahum Ad-DunKhizyun Wa Lahum Al-'Ākhirati `Adhābun `Ažīmun 2-114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. وَمَ‍‌‍نْ ‌أَ‍ظْ‍‍لَمُ مِ‍‍مَّ‍‍‌‍نْ مَنَعَ مَسَاجِدَ‌ ‌اللَّ‍‍هِ ‌أَ‌نْ يُذْكَ‍رَ‌ فِيهَا‌ ‌اسْمُ‍‍هُ ‌وَسَعَى‌ فِي خَ‍رَ‌ابِهَ‍‍اۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ مَا‌ ك‍‍َ‍انَ لَهُمْ ‌أَ‌نْ يَ‍‍د‍خُ‍‍لُوهَ‍‍ا‌ ‌إلا‌ خَ‍‍ائِف‍‍ِ‍ي‍‍نَ ۚ لَهُمْ فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ خِ‍‍زْيٌ‌ ‌وَلَهُمْ فِي ‌الآ‍‍خِ‍رَةِ عَذ‍َ‍‌ابٌ عَ‍‍ظِ‍‍يمٌ
Wa Lillāh Al-Mashriqu Wa Al-Maghribu ۚ Fa'aynamā Tuwallū Fathamma Wajhu Allāhi 'Inna ۚ Allāha Wāsi`un `Alīmun 2-115 கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன். وَلِلَّهِ ‌الْمَشْ‍‍رِ‍‍قُ ‌وَ‌الْمَ‍‍غْ‍‍رِبُ ۚ فَأَيْنَمَا‌ تُوَلُّو‌ا‌ فَثَ‍‍مَّ ‌وَجْ‍‍هُ ‌اللَّ‍‍هِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ‌وَ‌اسِعٌ عَلِيمٌ
Wa Qālū Attakhadha Allāhu Waladāan ۗ Subĥānahu ۖ Bal Lahu Mā Fī As-Samāwāti Wa Al-'Arđi ۖ Kullun Lahu Qānitūna 2-116 இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன. وَ‍قَ‍‍الُو‌ا‌اتَّ‍‍خَ‍‍ذَ‌ ‌اللَّ‍‍هُ ‌وَلَد‌ا‌‌ ًۗ سُ‍‍بْ‍‍حَانَ‍‍هُ ۖ بَلْ لَ‍‍هُ مَا‌ فِي ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ۖ كُلّ ٌ‌ لَ‍‍هُ قَ‍‍انِتُونَ
Badī`u As-Samāwāti Wa Al-'Arđi ۖ Wa 'Idhā Qá 'Aman Fa'innamā Yaqūlu Lahu Kun Fayakūnu 2-117 (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. بَد‍ِ‍ي‍‍عُ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ۖ ‌وَ‌إِ‌ذَ‌ا‌ قَ‍‍ضَ‍‍ى‌ ‌أَمْر‌ا‌‌ ً‌ فَإِنَّ‍‍مَا‌ يَ‍‍قُ‍‍ولُ لَ‍‍هُ كُ‍‌‍نْ فَيَكُونُ
Wa Qāla Al-Ladhīna Lā Ya`lamūna Lawlā Yukallimunā Al-Lahu 'Aw Ta'tīnā 'Āyatun ۗ Kadhālika Qāla Al-Ladhīna Min Qablihim Mithla Qawlihim ۘ Tashābahat Qulūbuhum ۗ Qad Bayyannā Al-'Āyāti Liqawminqinūna 2-118 இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். وَ‍قَ‍‍الَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ لاَ‌ يَعْلَم‍‍ُ‍ونَ لَوْلاَ‌ يُكَلِّمُنَا‌ ‌اللَّهُ ‌أَ‌وْ‌ تَأْتِينَ‍‍ا‌ ‌آيَة‌‍ٌۗ كَذَلِكَ قَ‍‍الَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهِمْ مِثْلَ قَ‍‍وْلِهِمْ ۘ تَشَابَهَتْ قُ‍‍لُوبُهُمْ ۗ قَ‍‍دْ‌ بَيَّ‍‍نَّ‍‍ا‌ ‌الآي‍‍َ‍اتِ لِ‍‍قَ‍‍وْمٍ‌ يُوقِ‍‍نُونَ
'Innā 'Arsalnāka Bil-Ĥaqqi Bashīrāan Wa Nadhīrāan ۖ Wa Lā Tus'alu `An 'Aşĥābi Al-Jaĥīmi 2-119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர். إِنَّ‍‍ا‌ ‌أَ‌رْسَلْن‍‍َ‍اكَ بِ‍الْحَ‍‍قِّ بَشِي‍‍ر‌ا‌ ً‌ ‌وَنَذِي‍‍ر‌ا‌ ًۖ ‌وَلاَ‌ تُسْأَلُ عَ‍‌‍نْ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابِ ‌الْجَحِيمِ
Wa Lan Tarđá `Anka Al-Yahūdu Wa Lā An-Naşārá Ĥattá Tattabi`a Millatahum ۗ Qul 'Inna Hudá Allāhi Huwa Al-Hudá ۗ Wa La'ini Attaba`ta 'Ahwā'ahum Ba`da Al-Ladhī Jā'aka Mina Al-`Ilmi ۙ Mā Laka Mina Allāhi Min Wa Līyin Wa Lā Naşīrin 2-120 (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. وَلَ‍‌‍نْ تَرْ‍ضَ‍‍ى‌ عَ‍‌‍نْ‍‍كَ ‌الْيَه‍‍ُ‍و‌دُ‌ ‌وَلاَ‌ ‌ال‍‍نَّ‍‍‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ حَتَّى‌ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُ‍‍لْ ‌إِنَّ هُدَ‌ى‌ ‌اللَّ‍‍هِ هُوَ‌ ‌الْهُدَ‌ى‌ ۗ ‌وَلَئِنِ ‌اتَّبَعْتَ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ بَعْدَ‌ ‌الَّذِي ج‍‍َ‍ا‌ءَكَ مِنَ ‌الْعِلْمِ ۙ مَا‌ لَكَ مِنَ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ ‌وَلِيٍّ‌ ‌وَلاَ‌ نَ‍‍صِ‍‍ي‍‍ر‍ٍ‍
Al-Ladhīna 'Ātaynāhumu Al-Kitāba Yatlūnahu Ĥaqqa Tilāwatihi~ 'Ūlā'ika Yu'uminūna Bihi ۗ Wa Man Yakfur Bihi Fa'ūlā'ika Humu Al-Khāsirūna 2-121 யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே! الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آتَيْنَاهُمُ ‌الْكِت‍‍َ‍ابَ يَتْلُونَ‍‍هُ حَ‍‍قَّ تِلاَ‌وَتِهِ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ يُؤْمِن‍‍ُ‍ونَ بِ‍‍هِ ۗ ‌وَمَ‍‌‍نْ يَكْفُرْ‌ بِ‍‍هِ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْ‍‍خَ‍‍اسِرُ‌ونَ
Yā Banī 'Isrā'īla Adhkurū Ni`matiya Allatī 'An`amtu `Alaykum Wa 'Annī Fađđaltukum `Alá Al-`Ālamīna 2-122 (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்;. இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன். يَا‌ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ ‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَتِيَ ‌الَّتِ‍‍ي ‌أَ‌نْ‍‍عَمْتُ عَلَيْكُمْ ‌وَ‌أَنِّ‍‍ي فَ‍‍ضَّ‍‍لْتُكُمْ عَلَى‌ ‌الْعَالَمِينَ
Wa Attaqū Yawmāan Lā Tajzī Nafsun `An Nafsin Shay'āan Wa Lā Yuqbalu Minhā `Adlun Wa Lā Tanfa`uhā Shafā`atun Wa Lā Hum Yunşarūna 2-123 இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌ يَوْما‌ ً‌ لاَ‌ تَ‍‍جْ‍‍زِي نَفْسٌ عَ‍‌‍نْ نَفْس‌‍ٍ‌ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَلاَ‌ يُ‍‍قْ‍‍بَلُ مِ‍‌‍نْ‍‍هَا‌ عَ‍‍دْلٌ‌ ‌وَلاَ‌ تَ‍‌‍ن‍‍فَعُهَا‌ شَفَاعَةٌ‌ ‌وَلاَ‌ هُمْ يُ‍‌‍ن‍‍صَ‍‍رُ‌ونَ
Wa 'Idh Abtalá 'Ibhīma Rabbuhu Bikalimātin Fa'atammahunna ۖ Qāla 'Innī Jā`iluka Lilnnāsi 'Imāmāan ۖ Qāla Wa Min Dhurrīyatī ۖ Qāla Lā Yanālu `Ahdī Až-Žālimīna 2-124 (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; "என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். وَ‌إِ‌ذْ‌ ‌ابْ‍‍تَلَ‍‍ى‌ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ ‌‍رَبُّ‍‍هُ بِكَلِم‍‍َ‍ات‌‍ٍ‌ فَأَتَ‍‍مَّ‍‍هُ‍‍نَّ ۖ قَ‍‍الَ ‌إِنِّ‍‍ي جَاعِلُكَ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌إِمَاما‌‌ ًۖ قَ‍‍الَ ‌وَمِ‍‌‍نْ ‌ذُ‌رِّيَّتِي ۖ قَ‍‍الَ لاَ‌ يَن‍‍َ‍الُ عَهْدِي ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
Wa 'Idh Ja`alnā Al-Bayta Mathābatan Lilnnāsi Wa 'Amnāan Wa Attakhidhū Min Maqāmi 'Ibhīma Muşallan ۖ Wa `Ahidnā 'Ilá 'Ibhīma Wa 'Ismā`īla 'An Ţahhirā Baytiya Lilţţā'ifīna Wa Al-`Ākifīna Wa Ar-Rukka`i As-Sujūdi 2-125 (இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். وَ‌إِ‌ذْ‌ جَعَلْنَا‌ ‌الْبَ‍‍يْ‍‍تَ مَثَابَة ً‌ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌وَ‌أَمْنا‌ ً‌ ‌وَ‌اتَّ‍‍خِ‍‍ذُ‌و‌ا‌ مِ‍‌‍نْ مَ‍‍قَ‍‍امِ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ مُ‍‍صَ‍‍لّى‌ ًۖ ‌وَعَهِ‍‍دْنَ‍‍ا‌ ‌إِلَ‍‍ى‌ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ ‌وَ‌إِسْمَاع‍‍ِ‍ي‍‍لَ ‌أَ‌نْ طَ‍‍هِّ‍رَ‌ا‌ بَيْتِيَ لِل‍‍طَّ‍‍ائِف‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْعَاكِف‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌ال‍‍رُّكَّعِ ‌ال‍‍سُّجُو‌دِ
Wa 'Idh Qāla 'Ibhīmu Rabbi Aj`al Hādhā Baladāan 'Āmināan Wa Arzuq 'Ahlahu Mina Ath-Thamarāti Man 'Āmana Minhum Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri ۖ Qāla Wa Man Kafara Fa'umatti`uhu Qalīlāan Thumma 'Ađţarruhu~ 'Ilá `Adhābi An-Nāri ۖ Wa Bi'sa Al-Maşīru 2-126 (இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; "இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; "(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே." وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مُ ‌‍رَبِّ ‌اجْ‍‍عَلْ هَذَ‌ا‌ بَلَد‌ا‌‌ ً‌ ‌آمِنا‌ ً‌ ‌وَ‌ا‌رْ‌زُ‍قْ ‌أَهْلَ‍‍هُ مِنَ ‌ال‍‍ثَّمَ‍رَ‍‌اتِ مَ‍‌‍نْ ‌آمَنَ مِ‍‌‍نْ‍‍هُمْ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ۖ قَ‍‍الَ ‌وَمَ‍‌‍نْ كَفَ‍رَ‌ فَأُمَتِّعُ‍‍هُ قَ‍‍لِيلا‌‌ ً‌ ثُ‍‍مَّ ‌أَ‍ضْ‍‍طَ‍‍رُّهُ~ُ ‌إِلَى‌ عَذ‍َ‍‌ابِ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ ‌وَبِئْسَ ‌الْمَ‍‍صِ‍‍يرُ
Wa 'Idh Yarfa`u 'Ibhīmu Al-Qawā`ida Mina Al-Bayti Wa 'Ismā`īlu Rabbanā Taqabbal Minnā ۖ 'Innaka 'Anta As-Samī`u Al-`Alīmu 2-127 இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினர்). وَ‌إِ‌ذْ‌ يَرْفَعُ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مُ ‌الْ‍‍قَ‍‍وَ‌اعِدَ‌ مِنَ ‌الْبَ‍‍يْ‍‍تِ ‌وَ‌إِسْمَاع‍‍ِ‍ي‍‍لُ ‌‍رَبَّنَا‌ تَ‍‍قَ‍‍بَّلْ مِ‍‍نَّ‍‍اۖ ‌إِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ ‌ال‍‍سَّم‍‍ِ‍ي‍‍عُ ‌الْعَلِيمُ
Rabbanā Wa Aj`alnā Muslimayni Laka Wa Min Dhurrīyatinā 'Ummatan Muslimatan Laka Wa 'Arinā Manāsikanā Wa Tub `Alaynā ۖ 'Innaka 'Anta At-Tawwābu Ar-Raĥīmu 2-128 "எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." رَبَّنَا‌ ‌وَ‌اجْ‍‍عَلْنَا‌ مُسْلِمَ‍‍يْ‍‍نِ لَكَ ‌وَمِ‍‌‍نْ ‌ذُ‌رِّيَّتِنَ‍‍ا‌ ‌أُمَّ‍‍ة ً‌ مُسْلِمَة ً‌ لَكَ ‌وَ‌أَ‌رِنَا‌ مَنَاسِكَنَا‌ ‌وَتُ‍‍بْ عَلَيْنَ‍‍اۖ ‌إِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ ‌ال‍‍تَّوّ‍َ‍‌ابُ ‌ال‍رَّحِيمُ
Rabbanā Wa Ab`ath Fīhim Rasūlāan Minhum Yatlū `Alayhim 'Āyātika Wa Yu`allimuhumu Al-Kitāba Wa Al-Ĥikmata Wa Yuzakkīhim ۚ 'Innaka 'Anta Al-`Azīzu Al-Ĥakīmu 2-129 "எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்." رَبَّنَا‌ ‌وَ‌ابْ‍‍عَثْ فِيهِمْ ‌‍رَسُولا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ يَتْلُو‌ عَلَيْهِمْ ‌آيَاتِكَ ‌وَيُعَلِّمُهُمُ ‌الْكِت‍‍َ‍ابَ ‌وَ‌الْحِكْمَةَ ‌وَيُزَكِّيهِمْ ۚ ‌إِنَّ‍‍كَ ‌أَ‌نْ‍‍تَ ‌الْعَز‍ِ‍ي‍‍زُ‌ ‌الْحَكِيمُ
Wa Man Yarghabu `An Millati 'Ibhīma 'Illā Man Safiha Nafsahu ۚ Wa Laqadi Aşţafaynāhu Fī Ad-Dunۖ Wa 'Innahu Fī Al-'Ākhirati Lamina Aş-Şāliĥīna 2-130 இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். وَمَ‍‌‍نْ يَرْ‍غَ‍‍بُ عَ‍‌‍نْ مِلَّةِ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ ‌إِلاَّ‌ مَ‍‌‍نْ سَفِهَ نَفْسَ‍‍هُ ۚ ‌وَلَ‍‍قَ‍‍دِ‌ ‌اصْ‍‍طَ‍‍فَيْن‍‍َ‍اهُ فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ۖ ‌وَ‌إِنَّ‍‍هُ فِي ‌الآ‍‍خِ‍رَةِ لَمِنَ ‌ال‍‍صَّ‍‍الِحِينَ
'Idh Qāla Lahu Rabbuhu~ 'Aslim ۖ Qāla 'Aslamtu Lirabbi Al-`Ālamīna 2-131 இன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; "(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்" என்று சொன்னபோது அவர், "அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்" என்று கூறினார். إِ‌ذْ‌ قَ‍‍الَ لَ‍‍هُ ‌‍رَبُّهُ~ُ ‌أَسْلِمْ ۖ قَ‍‍الَ ‌أَسْلَمْتُ لِ‍رَبِّ ‌الْعَالَمِينَ
Wa Waşşá Bihā 'Ibhīmu Banīhi Wa Ya`qūbu Yā Banīya 'Inna Allāha Aşţafá Lakumu Ad-Dīna Falā Tamūtunna 'Illā Wa 'Antum Muslimūna 2-132 இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்." وَ‌وَ‍صَّ‍‍ى‌ بِهَ‍‍ا‌ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مُ بَن‍‍ِ‍ي‍‍هِ ‌وَيَعْ‍‍قُ‍‍وبُ يَا‌ بَنِيَّ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ‌اصْ‍‍طَ‍‍فَى‌ لَكُمُ ‌ال‍‍دّ‍ِ‍ي‍‍نَ فَلاَ‌ تَمُوتُ‍‍نَّ ‌إِلاَّ‌ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ مُسْلِمُونَ
'Am Kuntum Shuhadā'a 'Idh Ĥađara Ya`qūba Al-Mawtu 'Idh Qāla Libanīhi Mā Ta`budūna Min Ba`dī Qālū Na`budu 'Ilahaka Wa 'Ilaha 'Ābā'ika 'Ibhīma Wa 'Ismā`īla Wa 'Isĥāqa 'Ilahāan Wāĥidāan Wa Naĥnu Lahu Muslimūna 2-133 யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர். أَمْ كُ‍‌‍ن‍‍تُمْ شُهَد‍َ‍‌ا‌ءَ‌ ‌إِ‌ذْ‌ حَ‍‍ضَ‍رَ‌ يَعْ‍‍قُ‍‍وبَ ‌الْمَ‍‍وْتُ ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ لِبَن‍‍ِ‍ي‍‍هِ مَا‌ تَعْبُد‍ُ‍‌ونَ مِ‍‌‍نْ بَعْدِي قَ‍‍الُو‌ا‌ نَعْبُدُ‌ ‌إِلَهَكَ ‌وَ‌إِلَهَ ‌آب‍‍َ‍ائِكَ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ ‌وَ‌إِسْمَاع‍‍ِ‍ي‍‍لَ ‌وَ‌إِسْح‍‍َ‍اقَ ‌إِلَها‌ ً‌ ‌وَ‌احِد‌ا‌ ً‌ ‌وَنَحْنُ لَ‍‍هُ مُسْلِمُونَ
Tilka 'Ummatun Qad Khalat ۖ Lahā Mā Kasabat Wa Lakum Mā Kasabtum ۖ Wa Lā Tus'alūna `Ammā Kānū Ya`malūna 2-134 அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். تِلْكَ ‌أُمَّ‍‍ة‌‍ٌقَ‍‍دْ‌ خَ‍‍لَتْ ۖ لَهَا‌ مَا‌ كَسَبَتْ ‌وَلَكُمْ مَا‌ كَسَ‍‍بْ‍‍تُمْ ۖ ‌وَلاَ‌ تُسْأَل‍‍ُ‍ونَ عَ‍‍مَّ‍‍ا‌ كَانُو‌ا‌ يَعْمَلُونَ
Wa Qālū Kūnū Hūdāan 'Aw Naşārá Tahtadū ۗ Qul Bal Millata 'Ibhīma Ĥanīfāan ۖ Wa Mā Kāna Mina Al-Mushrikīna 2-135 "நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! وَ‍قَ‍‍الُو‌ا‌ كُونُو‌ا‌ هُو‌د‌اً‌ ‌أَ‌وْ‌ نَ‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ تَهْتَدُ‌و‌اۗ قُ‍‍لْ بَلْ مِلَّةَ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ حَنِيفا‌ ًۖ ‌وَمَا‌ ك‍‍َ‍انَ مِنَ ‌الْمُشْ‍‍رِكِينَ
Qūlū 'Āmannā Billāhi Wa Mā 'Unzila 'Ilaynā Wa Mā 'Unzila 'Ilá 'Ibhīma Wa 'Ismā`īla Wa 'Isĥāqa Wa Ya`qūba Wa Al-'Asbāţi Wa Mā 'Ūtiya Mūsá Wa `Īsá Wa Mā 'Ūtiya An-Nabīyūna Min Rabbihim Lā Nufarriqu Bayna 'Aĥadin Minhum Wa Naĥnu Lahu Muslimūna 2-136 (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக. قُ‍‍ولُ‍‍و‌ا‌ ‌آمَ‍‍نَّ‍‍ا‌ بِ‍اللَّ‍‍هِ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَيْنَا‌ ‌وَمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍ى‌ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ ‌وَ‌إِسْمَاع‍‍ِ‍ي‍‍لَ ‌وَ‌إِسْح‍‍َ‍اقَ ‌وَيَعْ‍‍قُ‍‍وبَ ‌وَ‌الأَسْب‍‍َ‍اطِ ‌وَمَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وتِيَ مُوسَى‌ ‌وَعِيسَى‌ ‌وَمَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وتِيَ ‌ال‍‍نَّ‍‍بِيّ‍‍ُ‍ونَ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ لاَ‌ نُفَرِّ‍‍قُ بَ‍‍يْ‍‍نَ ‌أَحَد‌ٍ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ‌وَنَحْنُ لَ‍‍هُ مُسْلِمُونَ
Fa'in 'Āmanū Bimithli Mā 'Āmantum Bihi Faqadi Ahtadaw ۖ Wa 'In Tawallaw Fa'innamā HumShiqāqin ۖ Fasayakfīkahumu Allāhu ۚ Wa Huwa As-Samī`u Al-`Alīmu 2-137 ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான். فَإِ‌نْ ‌آمَنُو‌ا‌ بِمِثْلِ مَ‍‍ا‌ ‌آمَ‍‌‍ن‍‍تُمْ بِ‍‍هِ فَ‍‍قَ‍‍دِ‌ ‌اهْتَدَ‌و‌ا‌ ۖ ‌وَ‌إِ‌نْ تَوَلَّوْ‌ا‌ فَإِنَّ‍‍مَا‌ هُمْ فِي شِ‍‍قَ‍‍اق‍ٍۖ فَسَيَكْفِيكَهُمُ ‌اللَّ‍‍هُ ۚ ‌وَهُوَ‌ ‌ال‍‍سَّم‍‍ِ‍ي‍‍عُ ‌الْعَلِيمُ
Şibghata Allāhi ۖ Wa Man 'Aĥsanu Mina Allāhi Şibghatan ۖ Wa Naĥnu Lahu `Ābidūna 2-138 "(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்" (எனக் கூறுவீர்களாக). صِ‍‍بْ‍‍‍‍غَ‍‍ةَ ‌اللَّ‍‍هِ ۖ ‌وَمَ‍‌‍نْ ‌أَحْسَنُ مِنَ ‌اللَّ‍‍هِ صِ‍‍بْ‍‍‍‍غَ‍‍ة ًۖ ‌وَنَحْنُ لَ‍‍هُ عَابِدُ‌ونَ
Qul 'Atuĥājjūnanā Fī Al-Lahi Wa Huwa Rabbunā Wa Rabbukum Wa Lanā 'A`mālunā Wa Lakum 'A`mālukum Wa Naĥnu Lahu Mukhlişūna 2-139 அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்" என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக. قُ‍‍لْ ‌أَتُح‍‍َ‍اجُّونَنَا‌ فِي ‌اللَّهِ ‌وَهُوَ‌ ‌‍رَبُّنَا‌ ‌وَ‌‍رَبُّكُمْ ‌وَلَنَ‍‍ا‌ ‌أَعْمَالُنَا‌ ‌وَلَكُمْ ‌أَعْمَالُكُمْ ‌وَنَحْنُ لَ‍‍هُ مُ‍‍خْ‍‍لِ‍‍صُ‍‍ونَ
'Am Taqūlūna 'Inna 'Ibhīma Wa 'Ismā`īla Wa 'Isĥāqa Wa Ya`qūba Wa Al-'Asbāţa Kānū Hūdāan 'Aw Naşārá ۗ Qul 'A'antum 'A`lamu 'Ami Allāhu ۗ Wa Man 'Ažlamu Mimman Katama Shahādatan `Indahu Mina Allāhi ۗ Wa Mā Al-Lahu Bighāfilin `Ammā Ta`malūna 2-140 "இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக "(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை." أَمْ تَ‍‍قُ‍‍ول‍‍ُ‍ونَ ‌إِنَّ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ ‌وَ‌إِسْمَاع‍‍ِ‍ي‍‍لَ ‌وَ‌إِسْح‍‍َ‍اقَ ‌وَيَعْ‍‍قُ‍‍وبَ ‌وَ‌الأَسْب‍‍َ‍اطَ كَانُو‌ا‌ هُو‌د‌اً‌ ‌أَ‌وْ‌ نَ‍‍صَ‍‍ا‌‍رَ‌ى‌ ۗ قُ‍‍لْ ‌أَ‌أَ‌نْ‍‍تُمْ ‌أَعْلَمُ ‌أَمِ ‌اللَّ‍‍هُ ۗ ‌وَمَ‍‌‍نْ ‌أَ‍ظْ‍‍لَمُ مِ‍‍مَّ‍‍‌‍نْ كَتَمَ شَهَا‌دَةً عِ‍‌‍نْ‍‍دَهُ مِنَ ‌اللَّ‍‍هِ ۗ ‌وَمَا‌ ‌اللَّهُ بِ‍‍غَ‍‍افِلٍ عَ‍‍مَّ‍‍ا‌ تَعْمَلُونَ
Tilka 'Ummatun Qad Khalat ۖ Lahā Mā Kasabat Wa Lakum Mā Kasabtum ۖ Wa Lā Tus'alūna `Ammā Kānū Ya`malūna 2-141 அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். تِلْكَ ‌أُمَّ‍‍ة‌‍ٌقَ‍‍دْ‌ خَ‍‍لَتْ ۖ لَهَا‌ مَا‌ كَسَبَتْ ‌وَلَكُمْ مَا‌ كَسَ‍‍بْ‍‍تُمْ ۖ ‌وَلاَ‌ تُسْأَل‍‍ُ‍ونَ عَ‍‍مَّ‍‍ا‌ كَانُو‌ا‌ يَعْمَلُونَ
Sayaqūlu As-Sufahā'u Mina An-Nāsi Mā Wa Llāhum `An Qiblatihimu Allatī Kānū `Alayhā ۚ Qul Lillāh Al-Mashriqu Wa Al-Maghribu ۚ Yahdī Man Yashā'u 'Ilá Şirāţin Mustaqīmin 2-142 மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?" என்று. (நபியே!) நீர் கூறும்; "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்" என்று. سَيَ‍قُ‍‍ولُ ‌ال‍‍سُّفَه‍‍َ‍ا‌ءُ‌ مِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ مَا‌ ‌وَلاَّهُمْ عَ‍‌‍نْ قِ‍‍بْ‍‍لَتِهِمُ ‌الَّتِي كَانُو‌ا‌ عَلَيْهَا‌ ۚ قُ‍‍لْ لِلَّهِ ‌الْمَشْ‍‍رِ‍‍قُ ‌وَ‌الْمَ‍‍غْ‍‍رِبُ ۚ يَهْدِي مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌إِلَى‌ صِ‍رَ‍‌اطٍ‌ مُسْتَ‍‍قِ‍‍يمٍ
Wa Kadhalika Ja`alnākum 'Ummatan Wasaţāan Litakūnū Shuhadā'a `Alá An-Nāsi Wa Yakūna Ar-Rasūlu `Alaykum Shahīdāan ۗ Wa Mā Ja`alnā Al-Qiblata Allatī Kunta `Alayhā 'Illā Lina`lama Man Yattabi`u Ar-Rasūla Mimman Yanqalibu `Alá `Aqibayhi ۚ Wa 'In Kānat Lakabīratan 'Illā `Alá Al-Ladhīna Hadá Allāhu ۗ Wa Mā Kāna Allāhu Liyuđī`a 'Īmānakum ۚ 'Inna Allāha Bin-Nāsi Lara'ūfun Raĥīmun 2-143 இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;, யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்;, யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன். وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ ‌أُمَّ‍‍ة ً‌ ‌وَسَ‍‍ط‍‍ا‌ ً‌ لِتَكُونُو‌ا‌ شُهَد‍َ‍‌ا‌ءَ‌ عَلَى‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ ‌وَيَك‍‍ُ‍ونَ ‌ال‍رَّس‍‍ُ‍ولُ عَلَيْكُمْ شَهِيد‌ا‌ ًۗ ‌وَمَا‌ جَعَلْنَا‌ ‌الْ‍‍قِ‍‍بْ‍‍لَةَ ‌الَّتِي كُ‍‌‍ن‍‍تَ عَلَيْهَ‍‍ا‌ ‌إِلاَّ‌ لِنَعْلَمَ مَ‍‌‍نْ يَتَّبِعُ ‌ال‍رَّس‍‍ُ‍ولَ مِ‍‍مَّ‍‍‌‍نْ يَ‍‌‍ن‍‍قَ‍‍لِبُ عَلَى‌ عَ‍‍قِ‍‍بَ‍‍يْ‍‍هِ ۚ ‌وَ‌إِ‌نْ كَانَتْ لَكَبِي‍رَة‌ ً‌ ‌إِلاَّ‌ عَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ هَدَ‌ى‌ ‌اللَّ‍‍هُ ۗ ‌وَمَا‌ ك‍‍َ‍انَ ‌اللَّ‍‍هُ لِيُ‍‍ضِ‍‍ي‍‍عَ ‌إِيمَانَكُمْ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ بِ‍ال‍‍نّ‍‍َ‍اسِ لَ‍رَ‌ء‍ُ‍‌وف ٌ‌ ‌‍رَحِيمٌ
Qad Nará Taqalluba Wajhika Fī As-Samā'i Falanuwalliyannaka ۖ Qiblatan Tarđāhā Fawalli Wajhaka ۚ Shaţra Al-Masjidi Al-Ĥarāmi Wa Ĥaythu Mā ۚ Kuntum Fawallū Wujūhakum Shaţrahu Wa 'Inna Al-Ladhīna ۗ 'Ūtū Al-Kitāba Laya`lamūna 'Annahu Al-Ĥaqqu Min Rabbihim Wa Mā Al-Lahu ۗ Bighāfilin `Ammā Ya`malūna 2-144 (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. قَ‍‍دْ‌ نَ‍رَ‌ى‌ تَ‍‍قَ‍‍لُّبَ ‌وَجْ‍‍هِكَ فِي ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ ۖ فَلَنُوَلِّيَ‍‍نَّ‍‍كَ قِ‍‍بْ‍‍لَة‌ ً‌ تَرْ‍ضَ‍‍اهَا‌ ۚ فَوَلِّ ‌وَجْ‍‍هَكَ شَ‍‍طْ‍‍‍رَ‌الْمَسْجِدِ‌ ‌الْحَ‍رَ‍‌امِ ۚ ‌وَحَ‍‍يْ‍‍ثُ مَا‌ كُ‍‌‍ن‍‍تُمْ فَوَلُّو‌ا‌ ‌وُجُوهَكُمْ شَ‍‍طْ‍‍‍رَهُ ۗ ‌وَ‌إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْكِت‍‍َ‍ابَ لَيَعْلَم‍‍ُ‍ونَ ‌أَنَّ‍‍هُ ‌الْحَ‍‍قُّ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ۗ ‌وَمَا‌ ‌اللَّهُ بِ‍‍غَ‍‍افِلٍ عَ‍‍مَّ‍‍ا‌ يَعْمَلُونَ
Wa La'in 'Atayta Al-Ladhīna 'Ūtū Al-Kitāba Bikulli 'Āyatin Mā Tabi`ū Qiblataka ۚ Wa Mā 'Anta Bitābi`in Qiblatahum ۚ Wa Mā Ba`đuhum Bitābi`in Qiblata Ba`đin ۚ Wa La'ini Attaba`ta 'Ahwā'ahum Min Ba`di Mā Jā'aka Mina Al-`Ilmi ۙ 'Innaka 'Idhāan Lamina Až-Žālimīna 2-145 வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர். وَلَئِ‍‌‍نْ ‌أَتَ‍‍يْ‍‍تَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الكِت‍‍َ‍ابَ بِكُلِّ ‌آيَةٍ‌ مَا‌ تَبِعُو‌اقِ‍‍بْ‍‍لَتَكَ ۚ ‌وَمَ‍‍ا‌ ‌أَ‌نْ‍‍تَ بِتَابِع‌‍ٍقِ‍‍بْ‍‍لَتَهُمْ ۚ ‌وَمَا‌ بَعْ‍‍ضُ‍‍هُمْ بِتَابِع‌‍ٍقِ‍‍بْ‍‍لَةَ بَعْ‍‍ضٍۚ ‌وَلَئِنِ ‌اتَّبَعْتَ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ ج‍‍َ‍ا‌ءَكَ مِنَ ‌الْعِلْمِ ۙ ‌إِنَّ‍‍كَ ‌إِ‌ذ‌ا‌ ً‌ لَمِنَ ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
Al-Ladhīna 'Ātaynāhumu Al-Kitāba Ya`rifūnahu Kamā Ya`rifūna 'Abnā'ahum ۖ Wa 'Inna Farīqāan Minhum Layaktumūna Al-Ĥaqqa Wa Hum Ya`lamūna 2-146 எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آتَيْنَاهُمُ ‌الْكِت‍‍َ‍ابَ يَعْ‍‍رِفُونَ‍‍هُ كَمَا‌ يَعْ‍‍رِف‍‍ُ‍ونَ ‌أَبْ‍‍ن‍‍َ‍ا‌ءَهُمْ ۖ ‌وَ‌إِنَّ فَ‍‍رِي‍‍ق‍‍ا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ لَيَكْتُم‍‍ُ‍ونَ ‌الْحَ‍‍قَّ ‌وَهُمْ يَعْلَمُونَ
Al-Ĥaqqu Min Rabbika ۖ Falā Takūnanna Mina Al-Mumtarīna 2-147 (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்;. ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம். الْحَ‍‍قُّ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ۖ فَلاَ‌ تَكُونَ‍‍نَّ مِنَ ‌الْمُمْتَ‍‍رِينَ
Wa Likullin Wijhatun Huwa Muwallīhā ۖ Fāstabiqū Al-Khayrāti ۚ 'Ayna Mā Takūnū Ya'ti Bikumu Allāhu Jamī`āan ۚ 'Inna Allāha `Alá Kulli Shay'in Qadīrun 2-148 ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான். وَلِكُلٍّ‌ ‌وِجْ‍‍هَةٌ هُوَ‌ مُوَلِّيهَا‌ ۖ فَاسْتَبِ‍‍قُ‍‍و‌ا‌الْ‍‍خَ‍‍يْ‍رَ‍‌اتِ ۚ ‌أَيْ‍‍نَ مَا‌ تَكُونُو‌ا‌ يَأْتِ بِكُمُ ‌اللَّ‍‍هُ جَمِيعا‌‌ ًۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Wa Min Ĥaythu Kharajta Fawalli Wajhaka Shaţra Al-Masjidi Al-Ĥarāmi Wa 'Innahu ۖ Lalĥaqqu Min Rabbika Wa Mā ۗ Al-Lahu Bighāfilin `Ammā Ta`malūna 2-149 ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை. وَمِ‍‌‍نْ حَ‍‍يْ‍‍ثُ خَ‍رَجْ‍‍تَ فَوَلِّ ‌وَجْ‍‍هَكَ شَ‍‍طْ‍‍‍رَ‌الْمَسْجِدِ‌ ‌الْحَ‍رَ‍‌امِ ۖ ‌وَ‌إِنَّ‍‍هُ لَلْحَ‍‍قُّ مِ‍‌‍نْ ‌‍رَبِّكَ ۗ ‌وَمَا‌ ‌اللَّهُ بِ‍‍غَ‍‍افِلٍ عَ‍‍مَّ‍‍ا‌ تَعْمَلُونَ
Wa Min Ĥaythu Kharajta Fawalli Wajhaka Shaţra Al-Masjidi Al-Ĥarāmi Wa Ĥaythu ۚ Mā Kuntum Fawallū Wujūhakum Shaţrahu Li'allā Yakūna Lilnnāsi `Alaykum Ĥujjatun 'Illā Al-Ladhīna Žalamū Minhum Falā Takhshawhum Wa Akhshawnī Wa Li'atimma Ni`matī `Alaykum Wa La`allakum Tahtadūna 2-150 ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்). وَمِ‍‌‍نْ حَ‍‍يْ‍‍ثُ خَ‍رَجْ‍‍تَ فَوَلِّ ‌وَجْ‍‍هَكَ شَ‍‍طْ‍‍‍رَ‌الْمَسْجِدِ‌ ‌الْحَ‍رَ‍‌امِ ۚ ‌وَحَ‍‍يْ‍‍ثُ مَا‌ كُ‍‌‍ن‍‍تُمْ فَوَلُّو‌ا‌ ‌وُجُوهَكُمْ شَ‍‍طْ‍‍‍رَهُ لِئَلاَّ‌ يَك‍‍ُ‍ونَ لِل‍‍نّ‍‍َ‍اسِ عَلَيْكُمْ حُجَّة‌‍ٌ‌ ‌إِلاَّ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ظَ‍‍لَمُو‌ا‌ مِ‍‌‍نْ‍‍هُمْ فَلاَ‌ تَ‍‍خْ‍‍شَوْهُمْ ‌وَ‌اخْ‍‍شَوْنِي ‌وَلِأَتِ‍‍مَّ نِعْمَتِي عَلَيْكُمْ ‌وَلَعَلَّكُمْ تَهْتَدُ‌ونَ
Kamā 'Arsalnā Fīkum Rasūlāan Minkum Yatlū `Alaykum 'Āyātinā Wa Yuzakkīkum Wa Yu`allimukumu Al-Kitāba Wa Al-Ĥikmata Wa Yu`allimukum Mā Lam Takūnū Ta`lamūna 2-151 இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். كَمَ‍‍ا‌ ‌أَ‌رْسَلْنَا‌ فِيكُمْ ‌‍رَسُولا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍كُمْ يَتْلُو‌ عَلَيْكُمْ ‌آيَاتِنَا‌ ‌وَيُزَكِّيكُمْ ‌وَيُعَلِّمُكُمُ ‌الْكِت‍‍َ‍ابَ ‌وَ‌الْحِكْمَةَ ‌وَيُعَلِّمُكُمْ مَا‌ لَمْ تَكُونُو‌ا‌ تَعْلَمُونَ
dhkurūnī 'Adhkurkum Wa Ashkurū Lī Wa Lā Takfurūni 2-152 ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். فَا‌ذْكُرُ‌ونِ‍‍ي ‌أَ‌ذْكُرْكُمْ ‌وَ‌اشْكُرُ‌و‌ا‌ لِي ‌وَلاَ‌ تَكْفُرُ‌ونِ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Asta`īnū Biş-Şabri Wa Aş-Şalāati ۚ 'Inna Allāha Ma`a Aş-Şābirīna 2-153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌اسْتَعِينُو‌ا‌ بِ‍ال‍‍صَّ‍‍بْ‍‍ر‍ِ‍‌ ‌وَ‌ال‍‍صَّ‍‍لاَةِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ مَعَ ‌ال‍‍صَّ‍‍ابِ‍‍رِينَ
Wa Lā Taqūlū Liman Yuqtalu Fī Sabīli Allāhi 'Amwātun ۚ Bal 'Aĥyā'un Wa Lakin Lā Tash`urūna 2-154 இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். وَلاَ‌ تَ‍‍قُ‍‍ولُو‌ا‌ لِمَ‍‌‍نْ يُ‍‍قْ‍‍تَلُ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌أَمْو‍َ‍‌ات‌‍ٌۚ بَلْ ‌أَحْي‍‍َ‍ا‌ء‌ٌ‌ ‌وَلَكِ‍‌‍نْ لاَ‌ تَشْعُرُ‌ونَ
Wa Lanabluwannakum Bishay'in Mina Al-Khawfi Wa Al-Jū`i Wa Naqşin Mina Al-'Amwli Wa Al-'Anfusi Wa Ath-Thamarāti ۗ Wa Bashshiri Aş-Şābirīna 2-155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! وَلَنَ‍‍بْ‍‍لُوَنَّ‍‍كُمْ بِشَ‍‍يْء‌ٍ‌ مِنَ ‌الْ‍‍خَ‍‍وْفِ ‌وَ‌الْج‍‍ُ‍وعِ ‌وَنَ‍‍قْ‍‍‍‍صٍ‌ مِنَ ‌الأَمْو‌الِ ‌وَ‌الأَ‌ن‍‍فُسِ ‌وَ‌ال‍‍ثَّمَ‍رَ‍‌اتِ ۗ ‌وَبَشِّرِ‌ ‌ال‍‍صَّ‍‍ابِ‍‍رِينَ
Al-Ladhīna 'Idhā 'Aşābat/hum Muşībatun Qālū 'Innā Lillāh Wa 'Innā 'Ilayhi ji`ūna 2-156 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். الَّذ‍ِ‍ي‍‍نَ ‌إِ‌ذَ‌ا‌ ‌أَ‍صَ‍‍ابَتْهُمْ مُ‍‍صِ‍‍يبَة‌‍ٌقَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍ا‌ لِلَّهِ ‌وَ‌إِنَّ‍‍ا‌ ‌إِلَ‍‍يْ‍‍هِ ‌‍رَ‌اجِعُونَ
'Ūlā'ika `Alayhim Şalawātun Min Rabbihim Wa Raĥmatun ۖ Wa 'Ūlā'ika Humu Al-Muhtadūna 2-157 இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ عَلَيْهِمْ صَ‍‍لَو‍َ‍‌اتٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ‌وَ‌‍رَحْمَةٌۖ ‌وَ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْمُهْتَدُ‌ونَ
'Inna Aş-Şafā Wa Al-Marwata Min Sha`ā'iri Allāhi ۖ Faman Ĥajja Al-Bayta 'Aw A`tamara Falā Junāĥa `Alayhi 'An Yaţţawwafa Bihimā ۚ Wa Man Taţawwa`a Khayan Fa'inna Allāha Shākirun `Alīmun 2-158 நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். إِنَّ ‌ال‍‍صَّ‍‍فَا‌ ‌وَ‌الْمَرْ‌وَةَ مِ‍‌‍نْ شَع‍‍َ‍ائِرِ‌ ‌اللَّ‍‍هِ ۖ فَمَ‍‌‍نْ حَجَّ ‌الْبَ‍‍يْ‍‍تَ ‌أَ‌وْ‌ ‌اعْتَمَ‍رَ‌ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَ‍‍يْ‍‍هِ ‌أَ‌نْ يَ‍‍طَّ‍‍وَّفَ بِهِمَا‌ ۚ ‌وَمَ‍‌‍نْ تَ‍‍طَ‍‍وَّعَ خَ‍‍يْر‌ا‌‌ ً‌ فَإِنَّ ‌اللَّ‍‍هَ شَاكِرٌ‌ عَلِيمٌ
'Inna Al-Ladhīna Yaktumūna Mā 'Anzalnā Mina Al-Bayyināti Wa Al-Hudá Min Ba`di Mā Bayyannāhu Lilnnāsi Fī Al-Kitābi ۙ 'Ūlā'ika Yal`anuhumu Allāhu Wa Yal`anuhumu Al-Lā`inūna 2-159 நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يَكْتُم‍‍ُ‍ونَ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلْنَا‌ مِنَ ‌الْبَيِّن‍‍َ‍اتِ ‌وَ‌الْهُدَ‌ى‌ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ بَيَّ‍‍نّ‍‍َ‍اهُ لِل‍‍نّ‍‍َ‍اسِ فِي ‌الْكِت‍‍َ‍ابِ ۙ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ يَلْعَنُهُمُ ‌اللَّ‍‍هُ ‌وَيَلْعَنُهُمُ ‌ال‍‍لاَّعِنُونَ
'Illā Al-Ladhīna Tābū Wa 'Aşlaĥū Wa Bayyanū Fa'ūlā'ika 'Atūbu `Alayhim ۚ Wa 'Anā At-Tawwābu Ar-Raĥīmu 2-160 எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். إِلاَّ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ تَابُو‌ا‌ ‌وَ‌أَ‍صْ‍‍لَحُو‌ا‌ ‌وَبَيَّنُو‌ا‌ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَت‍‍ُ‍وبُ عَلَيْهِمْ ۚ ‌وَ‌أَنَا‌ ‌ال‍‍تَّوّ‍َ‍‌ابُ ‌ال‍رَّحِيمُ
'Inna Al-Ladhīna Kafarū Wa Mātū Wa Hum Kuffārun 'Ūlā'ika `Alayhim La`natu Allāhi Wa Al-Malā'ikati Wa An-Nāsi 'Ajma`īna 2-161 யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌وَمَاتُو‌ا‌ ‌وَهُمْ كُفّ‍‍َ‍ا‌رٌ‌ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ عَلَيْهِمْ لَعْنَةُ ‌اللَّ‍‍هِ ‌وَ‌الْمَلاَئِكَةِ ‌وَ‌ال‍‍نّ‍‍َ‍اسِ ‌أَجْ‍‍مَعِينَ
Khālidīna Fīhā ۖ Lā Yukhaffafu `Anhumu Al-`Adhābu Wa Lā Hum Yunžarūna 2-162 அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது. خَ‍‍الِد‍ِ‍ي‍‍نَ فِيهَا‌ ۖ لاَ‌ يُ‍‍خَ‍‍فَّفُ عَ‍‌‍نْ‍‍هُمُ ‌الْعَذ‍َ‍‌ابُ ‌وَلاَ‌ هُمْ يُ‍‌‍ن‍‍ظَ‍‍رُ‌ونَ
Wa 'Ilahukum 'Ilahun Wāĥidun ۖ Lā 'Ilāha 'Illā Huwa Ar-Raĥmānu Ar-Raĥīmu 2-163 மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். وَ‌إِلَهُكُمْ ‌إِلَهٌ‌ ‌وَ‌احِد‌ٌۖ لاَ‌ ‌إِلَهَ ‌إِلاَّ‌ هُوَ‌ ‌ال‍رَّحْمَنُ ‌ال‍رَّحِيمُ
'Inna Fī Khalqi As-Samāwāti Wa Al-'Arđi Wa Akhtilāfi Al-Layli Wa An-Nahāri Wa Al-Fulki Allatī Tajrī Fī Al-Baĥri Bimā Yanfa`u An-Nāsa Wa Mā 'Anzala Allāhu Mina As-Samā'i Min Mā'in Fa'aĥyā Bihi Al-'Arđa Ba`da Mawtihā Wa Baththa Fīhā Min Kulli Dābbatin Wa Taşrīfi Ar-Riyāĥi Wa As-Saĥābi Al-Musakhkhari Bayna As-Samā'i Wa Al-'Arđi La'āyātin Liqawmin Ya`qilūna 2-164 நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. إِنَّ فِي خَ‍‍لْ‍‍قِ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضِ ‌وَ‌اخْ‍‍تِلاَفِ ‌ال‍‍لَّ‍‍يْ‍‍لِ ‌وَ‌ال‍‍نَّ‍‍ه‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ‌وَ‌الْفُلْكِ ‌الَّتِي تَ‍‍جْ‍‍رِي فِي ‌الْبَحْ‍‍ر‍ِ‍‌ بِمَا‌ يَ‍‌‍ن‍‍فَعُ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ ‌وَمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ مِنَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ مِ‍‌‍نْ م‍‍َ‍ا‌ء‌‌ٍ‌ فَأَحْيَا‌ بِهِ ‌الأَ‌رْ‍ضَ بَعْدَ‌ مَوْتِهَا‌ ‌وَبَثَّ فِيهَا‌ مِ‍‌‍نْ كُلِّ ‌د‍َ‍‌ابَّةٍ‌ ‌وَتَ‍‍صْ‍‍ر‍ِ‍ي‍‍فِ ‌ال‍‍رِّي‍‍َ‍احِ ‌وَ‌ال‍‍سَّح‍‍َ‍ابِ ‌الْمُسَ‍‍خَّ‍‍ر‍ِ‍‌ بَ‍‍يْ‍‍نَ ‌ال‍‍سَّم‍‍َ‍ا‌ءِ‌ ‌وَ‌الأَ‌رْ‍ضِ لَآي‍‍َ‍ات‍ٍ‌ لِ‍‍قَ‍‍وْمٍ‌ يَعْ‍‍قِ‍‍لُونَ
Wa Mina An-Nāsi Man Yattakhidhu Min Dūni Allāhi 'Andādāan Yuĥibbūnahum Kaĥubbi Allāhi Wa ۖ Al-Ladhīna 'Āmanū 'Ashaddu Ĥubbāan Lillāh ۗ Wa Law Yará Al-Ladhīna Žalamū 'Idh Yarawna Al-`Adhāba 'Anna Al-Qūwata Lillāh Jamī`āan Wa 'Anna Allāha Shadīdu Al-`Adhābi 2-165 அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). وَمِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ مَ‍‌‍نْ يَتَّ‍‍خِ‍‍ذُ‌ مِ‍‌‍نْ ‌د‍ُ‍‌ونِ ‌اللَّ‍‍هِ ‌أَ‌ن‍‍دَ‌ا‌د‌ا‌ ً‌ يُحِبُّونَهُمْ كَحُبِّ ‌اللَّ‍‍هِ ۖ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌أَشَدُّ‌ حُبّا‌ ًلِلَّهِ ۗ ‌وَلَوْ‌ يَ‍رَ‌ى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ظَ‍‍لَمُ‍‍و‌ا‌ ‌إِ‌ذْ‌ يَ‍رَ‌وْنَ ‌الْعَذ‍َ‍‌ابَ ‌أَنَّ ‌الْ‍‍قُ‍‍وَّةَ لِلَّهِ جَمِيعا‌ ً‌ ‌وَ‌أَنَّ ‌اللَّ‍‍هَ شَد‍ِ‍ي‍‍دُ‌ ‌الْعَذَ‌ابِ
'Idh Tabarra'a Al-Ladhīna Attubi`ū Mina Al-Ladhīna Attaba`ū Wa Ra'aw Al-`Adhāba Wa Taqaţţa`at Bihimu Al-'Asbābu 2-166 (இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும். إِ‌ذْ‌ تَبَ‍رَّ‌أَ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اتُّبِعُو‌ا‌ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اتَّبَعُو‌ا‌ ‌وَ‌‍رَ‌أَ‌وْ‌ا‌ ‌الْعَذ‍َ‍‌ابَ ‌وَتَ‍‍قَ‍‍طَّ‍‍عَتْ بِهِمُ ‌الأَسْ‍‍ب‍‍ابُ
Wa Qāla Al-Ladhīna Attaba`ū Law 'Anna Lanā Karratan Fanatabarra'a Minhum Kamā Tabarra'ū Minnā ۗ Kadhālika Yurīhimu Allāhu 'A`mālahum Ĥasarātin `Alayhim ۖ Wa Mā Hum Bikhārijīna Mina An-Nāri 2-167 (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்; "நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்." இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர். وَ‍قَ‍‍الَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اتَّبَعُو‌ا‌ لَوْ‌ ‌أَنَّ لَنَا‌ كَ‍رَّة‌ ً‌ فَنَتَبَ‍رَّ‌أَ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ كَمَا‌ تَبَ‍رَّ‌ء‍ُ‍‌و‌ا‌ مِ‍‍نَّ‍‍ا‌ ۗ كَذَلِكَ يُ‍‍رِيهِمُ ‌اللَّ‍‍هُ ‌أَعْمَالَهُمْ حَسَ‍رَ‍‌اتٍ عَلَيْهِمْ ۖ ‌وَمَا‌ هُمْ بِ‍‍خَ‍‍ا‌رِج‍‍ِ‍ي‍‍نَ مِنَ ‌ال‍‍نَّ‍‍ا‌رِ
Yā 'Ayyuhā An-Nāsu Kulū Mimmā Fī Al-'Arđi Ĥalālāan Ţayyibāan Wa Lā Tattabi`ū Khuţuwāti Ash-Shayţāni ۚ 'Innahu Lakum `Adūwun Mubīn 2-168 மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ كُلُو‌ا‌ مِ‍‍مَّ‍‍ا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ حَلالا‌‌ ًطَ‍‍يِّبا‌ ً‌ ‌وَلاَ‌ تَتَّبِعُو‌اخُ‍‍طُ‍‍و‍َ‍‌اتِ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انِ ۚ ‌إِنَّ‍‍هُ لَكُمْ عَدُ‌وّ‌ٌ‌ مُ‍‍بِ‍‍ين
'Innamā Ya'murukum Bis-Sū'i Wa Al-Faĥshā'i Wa 'An Taqūlū `Alá Allāhi Mā Lā Ta`lamūna 2-169 நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். إِنَّ‍‍مَا‌ يَأْمُرُكُمْ بِ‍ال‍‍سّ‍‍ُ‍و‌ءِ‌ ‌وَ‌الْفَحْش‍‍َ‍ا‌ءِ‌ ‌وَ‌أَ‌نْ تَ‍‍قُ‍‍ولُو‌ا‌ عَلَى‌ ‌اللَّ‍‍هِ مَا‌ لاَ‌ تَعْلَمُونَ
Wa 'Idhā Qīla Lahum Attabi`ū Mā 'Anzala Allāhu Qālū Bal Nattabi`u Mā 'Alfaynā `Alayhi 'Ābā'anā ۗ 'Awalaw Kāna 'Ābā'uuhum Lā Ya`qilūna Shay'āan Wa Lā Yahtadūna 2-170 மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? وَ‌إِ‌ذَ‌ا‌ قِ‍‍ي‍‍لَ لَهُمْ ‌اتَّبِعُو‌ا‌ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ قَ‍‍الُو‌ا‌ بَلْ نَتَّبِعُ مَ‍‍ا‌ ‌أَلْفَيْنَا‌ عَلَ‍‍يْ‍‍هِ ‌آب‍‍َ‍ا‌ءَنَ‍‍اۗ ‌أَ‌وَلَوْ‌ ك‍‍َ‍انَ ‌آب‍‍َ‍ا‌ؤُهُمْ لاَ‌ يَعْ‍‍قِ‍‍ل‍‍ُ‍ونَ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَلاَ‌ يَهْتَدُ‌ونَ
Wa Mathalu Al-Ladhīna Kafarū Kamathali Al-Ladhī Yan`iqu Bimā Lā Yasma`u 'Illā Du`ā'an Wa Nidā'an ۚ Şummun Bukmun `Umyun Fahum Lā Ya`qilūna 2-171 அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். وَمَثَلُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ كَمَثَلِ ‌الَّذِي يَ‍‌‍نْ‍‍عِ‍‍قُ بِمَا‌ لاَ‌ يَسْمَعُ ‌إِلاَّ‌ ‌دُع‍‍َ‍ا‌ء‌ ً‌ ‌وَنِد‍َ‍‌ا‌ء‌‌ ًۚ صُ‍‍مّ‌‍‌‍ٌ‌ بُكْمٌ عُمْي‌‍ٌ‌ فَهُمْ لاَ‌ يَعْ‍‍قِ‍‍لُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Kulū Min Ţayyibāti Mā Razaqnākum Wa Ashkurū Lillāh 'In Kuntum 'Īyāhu Ta`budūna 2-172 நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ كُلُو‌ا‌ مِ‍‌‍نْ طَ‍‍يِّب‍‍َ‍اتِ مَا‌ ‌‍رَ‌زَ‍قْ‍‍نَاكُمْ ‌وَ‌اشْكُرُ‌و‌الِلَّهِ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ ‌إِيّ‍‍َ‍اهُ تَعْبُدُ‌ونَ
'Innamā Ĥarrama `Alaykumu Al-Maytata Wa Ad-Dama Wa Laĥma Al-Khinzīri Wa Mā 'Uhilla Bihi Lighayri Allāhi ۖ Famani Ađţurra Ghayraghin Wa Lā `Ādin Falā 'Ithma `Alayhi ۚ 'Inna Allāha Ghafūrun Raĥīmun 2-173 தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். إِنَّ‍‍مَا‌ حَ‍رَّمَ عَلَيْكُمُ ‌الْمَيْتَةَ ‌وَ‌ال‍‍دَّمَ ‌وَلَحْمَ ‌الْ‍‍خِ‍‍‌‍ن‍‍ز‍ِ‍ي‍‍ر‍ِ‍‌ ‌وَمَ‍‍ا‌ ‌أُهِلَّ بِ‍‍هِ لِ‍‍غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ ‌اللَّ‍‍هِ ۖ فَمَنِ ‌اضْ‍‍طُ‍رَّغَ‍‍يْ‍رَ‌ ب‍‍َ‍اغٍ‌ ‌وَلاَ‌ ع‍‍َ‍ا‌د‌‌ٍ‌ فَلاَ‌ ‌إِثْمَ عَلَ‍‍يْ‍‍هِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
'Inna Al-Ladhīna Yaktumūna Mā 'Anzala Allāhu Mina Al-Kitābi Wa Yashtarūna Bihi Thamanāan Qalīlāan ۙ 'Ūlā'ika Mā Ya'kulūna Fī Buţūnihim 'Illā An-Nāra Wa Lā Yukallimuhumu Allāhu Yawma Al-Qiyāmati Wa Lā Yuzakkīhim Wa Lahum `Adhābun 'Alīmun 2-174 எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يَكْتُم‍‍ُ‍ونَ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ مِنَ ‌الْكِت‍‍َ‍ابِ ‌وَيَشْتَر‍ُ‍‌ونَ بِ‍‍هِ ثَمَنا‌‌ ًقَ‍‍لِيلاً‌ ۙ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ مَا‌ يَأْكُل‍‍ُ‍ونَ فِي بُ‍‍طُ‍‍ونِهِمْ ‌إِلاَّ‌ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌‍رَ‌ ‌وَلاَ‌ يُكَلِّمُهُمُ ‌اللَّ‍‍هُ يَ‍‍وْمَ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ ‌وَلاَ‌ يُزَكِّيهِمْ ‌وَلَهُمْ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
'Ūlā'ika Al-Ladhīna Ashtaraw Ađ-Đalālata Bil-Hudá Wa Al-`Adhāba Bil-Maghfirati ۚ Famā 'Aşbarahum `Alá An-Nāri 2-175 அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது? أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اشْتَ‍رَ‌وْ‌ا‌ ‌ال‍‍ضَّ‍‍لاَلَةَ بِ‍الْهُدَ‌ى‌ ‌وَ‌الْعَذ‍َ‍‌ابَ بِ‍الْمَ‍‍غْ‍‍فِ‍رَةِ ۚ فَمَ‍‍ا‌ ‌أَ‍صْ‍‍بَ‍رَهُمْ عَلَى‌ ‌ال‍‍نَّ‍‍ا‌رِ
Dhālika Bi'anna Allāha Nazzala Al-Kitāba Bil-Ĥaqqi ۗ Wa 'Inna Al-Ladhīna Akhtalafū Fī Al-Kitābi Lafī Shiqāqin Ba`īdin 2-176 இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர். ذَلِكَ بِأَنَّ ‌اللَّ‍‍هَ نَزَّلَ ‌الْكِت‍‍َ‍ابَ بِ‍الْحَ‍‍قِّ ۗ ‌وَ‌إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اخْ‍‍تَلَفُو‌ا‌ فِي ‌الْكِت‍‍َ‍ابِ لَفِي شِ‍‍قَ‍‍اق‍ ٍ‌ بَعِيدٍ
Laysa Al-Birra 'An Tuwallū Wujūhakum Qibala Al-Mashriqi Wa Al-Maghribi Wa Lakinna Al-Birra Man 'Āmana Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri Wa Al-Malā'ikati Wa Al-Kitābi Wa An-Nabīyīna Wa 'Ātá Al-Māla `Alá Ĥubbihi Dhawī Al-Qurbá Wa Al-Yatāmá Wa Al-Masākīna Wa Abna As-Sabīli Wa As-Sā'ilīna Wa Fī Ar-Riqābi Wa 'Aqāma Aş-Şalāata Wa 'Ātá Az-Zakāata Wa Al-Mūfūna Bi`ahdihim 'Idhā `Āhadū Wa ۖ Aş-Şābirīna Fī Al-Ba'sā'i Wa Ađ-Đarrā'i Wa Ĥīna Al-Ba'si ۗ 'Ūlā'ika Al-Ladhīna Şadaqū ۖ Wa 'Ūlā'ika Humu Al-Muttaqūna 2-177 புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). لَ‍‍يْ‍‍سَ ‌الْبِ‍‍ر‍ّ‍َ‌ ‌أَ‌نْ تُوَلُّو‌ا‌ ‌وُجُوهَكُمْ قِ‍‍بَلَ ‌الْمَشْ‍‍رِ‍‍قِ ‌وَ‌الْمَ‍‍غْ‍‍رِبِ ‌وَلَكِ‍‍نَّ ‌الْبِ‍‍ر‍ّ‍َ‌ مَ‍‌‍نْ ‌آمَنَ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ‌وَ‌الْمَلاَئِكَةِ ‌وَ‌الْكِت‍‍َ‍ابِ ‌وَ‌ال‍‍نَّ‍‍بِيّ‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌آتَى‌ ‌الْم‍‍َ‍الَ عَلَى‌ حُبِّ‍‍هِ ‌ذَ‌وِي ‌الْ‍‍قُ‍‍رْبَى‌ ‌وَ‌الْيَتَامَى‌ ‌وَ‌الْمَسَاك‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌ابْ‍‍نَ ‌ال‍‍سَّب‍‍ِ‍ي‍‍لِ ‌وَ‌ال‍‍سّ‍‍َ‍ائِل‍‍ِ‍ي‍‍نَ ‌وَفِي ‌ال‍‍رِّ‍‍قَ‍‍ابِ ‌وَ‌أَ‍قَ‍‍امَ ‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آتَى‌ ‌ال‍‍زَّك‍‍َ‍اةَ ‌وَ‌الْمُوف‍‍ُ‍ونَ بِعَهْدِهِمْ ‌إِ‌ذَ‌ا‌ عَاهَدُ‌و‌اۖ ‌وَ‌ال‍‍صَّ‍‍ابِ‍‍ر‍ِ‍ي‍‍نَ فِي ‌الْبَأْس‍‍َ‍ا‌ءِ‌ ‌وَ‌ال‍‍ضَّ‍‍رّ‍َ‍‌ا‌ءِ‌ ‌وَح‍‍ِ‍ي‍‍نَ ‌الْبَأْسِ ۗ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ صَ‍‍دَ‍قُ‍‍و‌اۖ ‌وَ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌الْمُتَّ‍‍قُ‍‍ونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Kutiba `Alaykumu Al-Qişāşu Fī Al-Qatlá ۖ Al-Ĥurru Bil-Ĥurri Wa Al-`Abdu Bil-`Abdi Wa Al-'Unthá Bil-'Unthá ۚ Faman `Ufiya Lahu Min 'Akhīhi Shay'un Fa Attibā`un Bil-Ma`rūfi Wa 'Adā'un 'Ilayhi Bi'iĥsānin ۗ Dhālika Takhfīfun Min Rabbikum Wa Raĥmatun ۗ Famani A`tadá Ba`da Dhālika Falahu `Adhābun 'Alīmun 2-178 ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ كُتِبَ عَلَيْكُمُ ‌الْ‍‍قِ‍‍صَ‍‍اصُ فِي ‌الْ‍‍قَ‍‍تْلَى‌ ۖ ‌الْحُرُّ‌ بِ‍الْحُرِّ‌ ‌وَ‌الْعَ‍‍بْ‍‍دُ‌ بِ‍الْعَ‍‍بْ‍‍دِ‌ ‌وَ‌الأُ‌ن‍‍ثَى‌ بِ‍الأُ‌ن‍‍ثَى‌ ۚ فَمَ‍‌‍نْ عُفِيَ لَ‍‍هُ مِ‍‌‍نْ ‌أَ‍خِ‍‍ي‍‍هِ شَ‍‍يْء‌‌ٌ‌ فَاتِّب‍‍َ‍اع‌‍ٌ‌ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ‌وَ‌أَ‌د‍َ‍‌ا‌ء‌‌ٌ‌ ‌إِلَ‍‍يْ‍‍هِ بِإِحْس‍‍َ‍ان‌‍ٍۗ ‌ذَلِكَ تَ‍‍خْ‍‍ف‍‍ِ‍ي‍‍فٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكُمْ ‌وَ‌‍رَحْمَة‌‍ٌۗ فَمَنِ ‌اعْتَدَ‌ى‌ بَعْدَ‌ ‌ذَلِكَ فَلَ‍‍هُ عَذ‍َ‍‌ابٌ ‌أَلِيمٌ
Wa Lakum Al-Qişāşi Ĥayāatun Yā 'Ūlī Al-'Albābi La`allakum Tattaqūna 2-179 நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். وَلَكُمْ فِي ‌الْ‍‍قِ‍‍صَ‍‍اصِ حَي‍‍َ‍اةٌ‌ يَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وْلِي ‌الأَلْب‍‍َ‍ابِ لَعَلَّكُمْ تَتَّ‍‍قُ‍‍ونَ
Kutiba `Alaykum 'Idhā Ĥađara 'Aĥadakumu Al-Mawtu 'In Taraka Khayan Al-Waşīyatu Lilwālidayni Wa Al-'Aqrabīna Bil-Ma`rūfi ۖ Ĥaqqāan `Alá Al-Muttaqīna 2-180 உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும். كُتِبَ عَلَيْكُمْ ‌إِ‌ذَ‌ا‌ حَ‍‍ضَ‍رَ‌ ‌أَحَدَكُمُ ‌الْمَ‍‍وْتُ ‌إِ‌نْ تَ‍رَكَ خَ‍‍يْر‌ا‌‌ ً‌الْوَ‍صِ‍‍يَّةُ لِلْوَ‌الِدَيْ‍‍نِ ‌وَ‌الأَ‍قْ‍‍‍رَب‍‍ِ‍ي‍‍نَ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۖ حَ‍‍قّ‍‍اً‌ عَلَى‌ ‌الْمُتَّ‍‍قِ‍‍ينَ
Faman Baddalahu Ba`damā Sami`ahu Fa'innamā 'Ithmuhu `Alá Al-Ladhīna Yubaddilūnahu~ ۚ 'Inna Allāha Samī`un `Alīmun 2-181 வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். فَمَ‍‌‍نْ بَدَّلَ‍‍هُ بَعْدَمَا‌ سَمِعَ‍‍هُ فَإِنَّ‍‍مَ‍‍ا‌ ‌إِثْمُ‍‍هُ عَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُبَدِّلُونَهُ~ُ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ سَم‍‍ِ‍ي‍‍عٌ عَلِيمٌ
Faman Khāfa Minşin Janafāan 'Aw 'Ithmāan Fa'aşlaĥa Baynahum Falā 'Ithma `Alayhi ۚ 'Inna Allāha Ghafūrun Raĥīmun 2-182 ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான். فَمَ‍‌‍نْ خَ‍‍افَ مِ‍‌‍نْ م‍‍ُ‍و‍ص‌‍‌‍ٍ‌ جَنَفاً‌ ‌أَ‌وْ‌ ‌إِثْما‌‌ ً‌ فَأَ‍صْ‍‍لَحَ بَيْنَهُمْ فَلاَ‌ ‌إِثْمَ عَلَ‍‍يْ‍‍هِ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Kutiba `Alaykumu Aş-Şiyāmu Kamā Kutiba `Alá Al-Ladhīna Min Qablikum La`allakum Tattaqūna 2-183 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ كُتِبَ عَلَيْكُمُ ‌ال‍‍صِّ‍‍ي‍‍َ‍امُ كَمَا‌ كُتِبَ عَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكُمْ لَعَلَّكُمْ تَتَّ‍‍قُ‍‍ونَ
'Ayyāmāan Ma`dūdātin ۚ Faman Kāna Minkum Marīđāan 'Aw `Alá Safarin Fa`iddatun Min 'Ayyāmin 'Ukhara ۚ Wa `Alá Al-Ladhīna Yuţīqūnahu Fidyatun Ţa`āmu Miskīnin ۖ Faman Taţawwa`a Khayan Fahuwa Khayrun Lahu ۚ Wa 'An Taşūmū Khayrun Lakum ۖ 'In Kuntum Ta`lamūna 2-184 (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). أَيَّاما‌ ً‌ مَعْدُ‌و‌د‍َ‍‌ات‌‍ٍۚ فَمَ‍‌‍نْ ك‍‍َ‍انَ مِ‍‌‍نْ‍‍كُمْ مَ‍‍رِي‍‍ض‍‍اً‌ ‌أَ‌وْ‌ عَلَى‌ سَفَر‌‌ٍ‌ فَعِدَّةٌ‌ مِ‍‌‍نْ ‌أَيّ‍‍َ‍امٍ ‌أُ‍خَ‍رَۚ ‌وَعَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‍طِ‍‍ي‍‍قُ‍‍ونَ‍‍هُ فِ‍‍دْيَة‌‍ٌطَ‍‍ع‍‍َ‍امُ مِسْك‍‍ِ‍ي‍‍ن‌‍ٍۖ فَمَ‍‌‍نْ تَ‍‍طَ‍‍وَّعَ خَ‍‍يْر‌ا‌‌ ً‌ فَهُوَ‌ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَ‍‍هُ ۚ ‌وَ‌أَ‌نْ تَ‍‍صُ‍‍ومُو‌اخَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَكُمْ ۖ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ تَعْلَمُونَ
Shahru Ramađāna Al-Ladhī 'Unzila Fīhi Al-Qur'ānu Hudan Lilnnāsi Wa Bayyinātin Mina Al-Hudá Wa Al-Furqāni ۚ Faman Shahida Minkumu Ash-Shahra Falyaşumhu ۖ Wa Man Kāna Marīđāan 'Aw `Alá Safarin Fa`iddatun Min 'Ayyāmin 'Ukhara ۗ Yurīdu Allāhu Bikumu Al-Yusra Wa Lā Yurīdu Bikumu Al-`Usra Wa Litukmilū Al-`Iddata Wa Litukabbirū Allaha `Alá Mā Hadākum Wa La`allakum Tashkurūna 2-185 ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). شَهْرُ‌ ‌‍رَمَ‍‍ضَ‍‍انَ ‌الَّذِي ‌أُ‌ن‍‍زِلَ ف‍‍ِ‍ي‍‍هِ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنُ هُ‍‍د‌ى‌ ً‌ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌وَبَيِّن‍‍َ‍اتٍ‌ مِنَ ‌الْهُدَ‌ى‌ ‌وَ‌الْفُرْ‍قَ‍‍انِ ۚ فَمَ‍‌‍نْ شَهِدَ‌ مِ‍‌‍نْ‍‍كُمُ ‌ال‍‍شَّهْ‍رَ‌ فَلْيَ‍‍صُ‍‍مْهُ ۖ ‌وَمَ‍‌‍نْ ك‍‍َ‍انَ مَ‍‍رِي‍‍ض‍‍اً‌ ‌أَ‌وْ‌ عَلَى‌ سَفَر‌‌ٍ‌ فَعِدَّةٌ‌ مِ‍‌‍نْ ‌أَيّ‍‍َ‍امٍ ‌أُ‍خَ‍رَۗ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ ‌اللَّ‍‍هُ بِكُمُ ‌الْيُسْ‍رَ‌ ‌وَلاَ‌ يُ‍‍ر‍ِ‍ي‍‍دُ‌ بِكُمُ ‌الْعُسْ‍رَ‌ ‌وَلِتُكْمِلُو‌ا‌الْعِدَّةَ ‌وَلِتُكَبِّرُ‌و‌ا‌اللَّ‍‍هَ عَلَى‌ مَا‌ هَدَ‌اكُمْ ‌وَلَعَلَّكُمْ تَشْكُرُ‌ونَ
Wa 'Idhā Sa'alaka `Ibādī `Annī Fa'innī Qarībun ۖ 'Ujību Da`wata Ad-Dā`i 'Idhā Da`āni ۖ Falyastajībū Lī Wa Līu'uminū Bī La`allahum Yarshudūna 2-186 (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. وَ‌إِ‌ذَ‌ا‌ سَأَلَكَ عِبَا‌دِي عَ‍‍نِّ‍‍ي فَإِنِّ‍‍ي قَ‍‍ر‍ِ‍ي‍‍بٌ ۖ ‌أُج‍‍ِ‍ي‍‍بُ ‌دَعْوَةَ ‌ال‍‍دّ‍َ‍‌اعِ ‌إِ‌ذَ‌ا‌ ‌دَع‍‍َ‍انِ ۖ فَلْيَسْتَجِيبُو‌ا‌ لِي ‌وَلْيُؤْمِنُو‌ا‌ بِي لَعَلَّهُمْ يَرْشُدُ‌ونَ
'Uĥilla Lakum Laylata Aş-Şiyāmi Ar-Rafathu 'Ilá Nisā'ikum ۚ Hunna Libāsun Lakum Wa 'Antum Libāsun Lahunna ۗ `Alima Allāhu 'Annakum Kuntum Takhtānūna 'Anfusakum Fatāba `Alaykum Wa `Afā `Ankum ۖ Fāl'āna Bāshirūhunna Wa Abtaghū Mā Kataba Allāhu Lakum ۚ Wa Kulū Wa Ashrabū Ĥattá Yatabayyana Lakumu Al-Khayţu Al-'Abyađu Mina Al-Khayţi Al-'Aswadi Mina Al-Fajri ۖ Thumma 'Atimmū Aş-Şiyāma 'Ilá Al-Layli ۚ Wa Lā Tubāshirūhunna Wa 'Antum `Ākifūna Fī Al-Masājidi ۗ Tilka Ĥudūdu Allāhi Falā Taqrabūhā ۗ Kadhālika Yubayyinu Allāhu 'Āyātihi Lilnnāsi La`allahum Yattaqūna 2-187 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். أُحِلَّ لَكُمْ لَيْلَةَ ‌ال‍‍صِّ‍‍ي‍‍َ‍امِ ‌ال‍رَّفَثُ ‌إِلَى‌ نِس‍‍َ‍ائِكُمْ ۚ هُ‍‍نَّ لِب‍‍َ‍اس ٌ‌ لَكُمْ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ لِب‍‍َ‍اس ٌ‌ لَهُ‍‍نَّ ۗ عَلِمَ ‌اللَّ‍‍هُ ‌أَنَّ‍‍كُمْ كُ‍‌‍ن‍‍تُمْ تَ‍‍خْ‍‍تَان‍‍ُ‍ونَ ‌أَ‌ن‍‍فُسَكُمْ فَت‍‍َ‍ابَ عَلَيْكُمْ ‌وَعَفَا‌ عَ‍‌‍نْ‍‍كُمْ ۖ فَالآنَ بَاشِرُ‌وهُ‍‍نَّ ‌وَ‌ابْ‍‍تَ‍‍غُ‍‍و‌ا‌ مَا‌ كَتَبَ ‌اللَّ‍‍هُ لَكُمْ ۚ ‌وَكُلُو‌ا‌ ‌وَ‌اشْ‍رَبُو‌ا‌ حَتَّى‌ يَتَبَيَّنَ لَكُمُ ‌الْ‍‍خَ‍‍يْ‍‍طُ ‌الأَبْ‍‍يَ‍‍ضُ مِنَ ‌الْ‍‍خَ‍‍يْ‍‍طِ ‌الأَسْوَ‌دِ‌ مِنَ ‌الْفَ‍‍جْ‍‍ر‍ِ‍‌ ۖ ثُ‍‍مَّ ‌أَتِ‍‍مُّ‍‍و‌ا‌ال‍‍صِّ‍‍ي‍‍َ‍امَ ‌إِلَى‌ ‌ال‍‍لَّ‍‍يْ‍‍لِ ۚ ‌وَلاَ‌ تُبَاشِرُ‌وهُ‍‍نَّ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ عَاكِف‍‍ُ‍ونَ فِي ‌الْمَسَاجِدِ‌ ۗ تِلْكَ حُد‍ُ‍‌و‌دُ‌ ‌اللَّ‍‍هِ فَلاَ‌ تَ‍‍قْ‍‍‍رَبُوهَا‌ ۗ كَذَلِكَ يُبَيِّنُ ‌اللَّ‍‍هُ ‌آيَاتِ‍‍هِ لِل‍‍نّ‍‍َ‍اسِ لَعَلَّهُمْ يَتَّ‍‍قُ‍‍ونَ
Wa Lā Ta'kulū 'Amwālakum Baynakum Bil-Bāţili Wa Tudlū Bihā 'Ilá Al-Ĥukkāmi Lita'kulū Farīqāan Min 'Amwāli An-Nāsi Bil-'Ithmi Wa 'Antum Ta`lamūna 2-188 அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள். وَلاَ‌ تَأْكُلُ‍‍و‌ا‌ ‌أَمْوَ‌الَكُمْ بَيْنَكُمْ بِ‍الْبَاطِ‍‍لِ ‌وَتُ‍‍دْلُو‌ا‌ بِهَ‍‍ا‌ ‌إِلَى‌ ‌الْحُكّ‍‍َ‍امِ لِتَأْكُلُو‌ا‌ فَ‍‍رِي‍‍ق‍‍ا‌ ً‌ مِ‍‌‍نْ ‌أَمْو‍َ‍‌الِ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ بِ‍الإِثْمِ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ تَعْلَمُونَ
Yas'alūnaka `Ani Al-'Ahillati ۖ Qul Hiya Mawāqītu Lilnnāsi Wa Al-Ĥajji ۗ Wa Laysa Al-Birru Bi'an Ta'tū Al-Buyūta Min Žuhūrihā Wa Lakinna Al-Birra Mani Attaqá ۗ Wa 'Tū Al-Buyūta Min 'Abwābihā ۚ Wa Attaqū Allaha La`allakum Tufliĥūna 2-189 (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள். يَسْأَلُونَكَ عَنِ ‌الأَهِلَّةِ ۖ قُ‍‍لْ هِيَ مَوَ‌اقِ‍‍ي‍‍تُ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌وَ‌الْحَجِّ ۗ ‌وَلَ‍‍يْ‍‍سَ ‌الْبِ‍‍ر‍ّ‍ُ‌ بِأَ‌نْ تَأْتُو‌ا‌الْبُي‍‍ُ‍وتَ مِ‍‌‍نْ ظُ‍‍هُو‌رِهَا‌ ‌وَلَكِ‍‍نَّ ‌الْبِ‍‍ر‍ّ‍َ‌ مَنِ ‌اتَّ‍‍قَ‍‍ى‌ ۗ ‌وَ‌أْتُو‌ا‌الْبُي‍‍ُ‍وتَ مِ‍‌‍نْ ‌أَبْ‍‍وَ‌ابِهَا‌ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
Wa Qātilū Fī Sabīli Allāhi Al-Ladhīna Yuqātilūnakum Wa Lā Ta`tadū ۚ 'Inna Allāha Lā Yuĥibbu Al-Mu`tadīna 2-190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. وَ‍قَ‍‍اتِلُو‌ا‌ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‍قَ‍‍اتِلُونَكُمْ ‌وَلاَ‌ تَعْتَدُ‌و‌اۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لاَ‌ يُحِبُّ ‌الْمُعْتَدِينَ
qtulūhum Ĥaythu Thaqiftumūhum Wa 'Akhrijūhum Min Ĥaythu 'Akhrajūkum Wa ۚ Al-Fitnatu 'Ashaddu Mina Al-Qatli ۚ Wa Lā Tuqātilūhum `Inda Al-Masjidi Al-Ĥarāmi Ĥattá Yuqātilūkum Fīhi ۖ Fa'in Qātalūkumqtulūhum ۗ Kadhālika Jazā'u Al-Kāfirīna 2-191 (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். وَ‌ا‍قْ‍‍تُلُوهُمْ حَ‍‍يْ‍‍ثُ ثَ‍‍قِ‍‍فْتُمُوهُمْ ‌وَ‌أَ‍خْ‍‍رِجُوهُمْ مِ‍‌‍نْ حَ‍‍يْ‍‍ثُ ‌أَ‍خْ‍رَجُوكُمْ ۚ ‌وَ‌الْفِتْنَةُ ‌أَشَدُّ‌ مِنَ ‌الْ‍‍قَ‍‍تْلِ ۚ ‌وَلاَ‌ تُ‍‍قَ‍‍اتِلُوهُمْ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌الْمَسْجِدِ‌ ‌الْحَ‍رَ‍‌امِ حَتَّى‌ يُ‍‍قَ‍‍اتِلُوكُمْ ف‍‍ِ‍ي‍‍هِ ۖ فَإِ‌نْ قَ‍‍اتَلُوكُمْ فَا‍قْ‍‍تُلُوهُمْ ۗ كَذَلِكَ جَز‍َ‍‌ا‌ءُ‌ ‌الْكَافِ‍‍رِينَ
Fa'ini Antahaw Fa'inna Allāha Ghafūrun Raĥīmun 2-192 எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். فَإِنِ ‌ان‍‍تَهَوْ‌ا‌ فَإِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Wa Qātilūhum Ĥattá Lā Takūna Fitnatun Wa Yakūna Ad-Dīnu Lillāh ۖ Fa'ini Antahaw Falā `Udwāna 'Illā `Alá Až-Žālimīna 2-193 ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. وَ‍قَ‍‍اتِلُوهُمْ حَتَّى‌ لاَ‌ تَك‍‍ُ‍ونَ فِتْنَةٌ‌ ‌وَيَك‍‍ُ‍ونَ ‌ال‍‍دّ‍ِ‍ي‍‍نُ لِلَّهِ ۖ فَإِنِ ‌ان‍‍تَهَوْ‌ا‌ فَلاَ‌ عُ‍‍دْ‌و‍َ‍‌انَ ‌إِلاَّ‌ عَلَى‌ ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
Ash-Shahru Al-Ĥarāmu Bish-Shahri Al-Ĥarāmi Wa Al-Ĥurumātu Qişāşun ۚ Famani A`tadá `Alaykum Fā`tadū `Alayhi Bimithli Mā A`tadá `Alaykum ۚ Wa Attaqū Allaha Wa A`lamū 'Anna Allāha Ma`a Al-Muttaqīna 2-194 (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ال‍‍شَّهْرُ‌ ‌الْحَ‍رَ‍‌امُ بِ‍ال‍‍شَّهْ‍‍ر‍ِ‍‌ ‌الْحَ‍رَ‍‌امِ ‌وَ‌الْحُرُم‍‍َ‍اتُ قِ‍‍صَ‍‍اص‌‍ٌۚ فَمَنِ ‌اعْتَدَ‌ى‌ عَلَيْكُمْ فَاعْتَدُ‌و‌ا‌ عَلَ‍‍يْ‍‍هِ بِمِثْلِ مَا‌ ‌اعْتَدَ‌ى‌ عَلَيْكُمْ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ مَعَ ‌الْمُتَّ‍‍قِ‍‍ينَ
Wa 'Anfiqū Fī Sabīli Allāhi Wa Lā Tulqū Bi'aydīkum 'Ilá At-Tahlukati ۛ Wa 'Aĥsinū ۛ 'Inna Allāha Yuĥibbu Al-Muĥsinīna 2-195 அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். وَ‌أَ‌ن‍‍فِ‍‍قُ‍‍و‌ا‌ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌وَلاَ‌ تُلْ‍‍قُ‍‍و‌ا‌ بِأَيْدِيكُمْ ‌إِلَى‌ ‌ال‍‍تَّهْلُكَةِ ۛ ‌وَ‌أَحْسِنُ‍‍و‌اۛ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ يُحِبُّ ‌الْمُحْسِنِينَ
Wa 'Atimmū Al-Ĥajja Wa Al-`Umrata Lillāh ۚ Fa'in 'Uĥşirtum Famā Astaysara Mina Al-Hadyi ۖ Wa Lā Taĥliqū Ru'ūsakum Ĥattá Yablugha Al-Hadyu Maĥillahu ۚ Faman Kāna Minkum Marīđāan 'Aw Bihi~ 'Adhan Min Ra'sihi Fafidyatun Min Şiyāmin 'Aw Şadaqatin 'Aw Nusukin ۚ Fa'idhā 'Amintum Faman Tamatta`a Bil-`Umrati 'Ilá Al-Ĥajji Famā Astaysara Mina Al-Hadyi ۚ Faman Lam Yajid Faşiyāmu Thalāthati 'Ayyāmin Al-Ĥajji Wa Sab`atin 'Idhā Raja`tum ۗ Tilka `Asharatun Kāmilatun ۗ Dhālika Liman Lam Yakun 'Ahluhu Ĥāđirī Al-Masjidi Al-Ĥarāmi ۚ Wa Attaqū Allaha Wa A`lamū 'Anna Allāha Shadīdu Al-`Iqābi 2-196 ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். وَ‌أَتِ‍‍مُّ‍‍و‌ا‌الْحَجَّ ‌وَ‌الْعُمْ‍رَةَ لِلَّهِ ۚ فَإِ‌نْ ‌أُحْ‍‍صِ‍‍رْتُمْ فَمَا‌ ‌اسْتَيْسَ‍رَ‌ مِنَ ‌الْهَ‍‍دْيِ ۖ ‌وَلاَ‌ تَحْلِ‍‍قُ‍‍و‌ا‌ ‌رُ‌ء‍ُ‍‌وسَكُمْ حَتَّى‌ يَ‍‍بْ‍‍لُ‍‍غَ ‌الْهَ‍‍دْيُ مَحِلَّ‍‍هُ ۚ فَمَ‍‌‍نْ ك‍‍َ‍انَ مِ‍‌‍نْ‍‍كُمْ مَ‍‍رِي‍‍ض‍‍اً‌ ‌أَ‌وْ‌ بِهِ ‌أَ‌ذ‌ى‌ ً‌ مِ‍‌‍نْ ‌‍رَ‌أْسِ‍‍هِ فَفِ‍‍دْيَةٌ‌ مِ‍‌‍نْ صِ‍‍ي‍‍َ‍امٍ ‌أَ‌وْ‌ صَ‍‍دَ‍قَ‍‍ةٍ ‌أَ‌وْ‌ نُسُك‌‍ٍۚ فَإِ‌ذَ‌ا‌ ‌أَمِ‍‌‍ن‍‍تُمْ فَمَ‍‌‍نْ تَمَتَّعَ بِ‍الْعُمْ‍رَةِ ‌إِلَى‌ ‌الْحَجِّ فَمَا‌ ‌اسْتَيْسَ‍رَ‌ مِنَ ‌الْهَ‍‍دْيِ ۚ فَمَ‍‌‍نْ لَمْ يَجِ‍‍دْ‌ فَ‍‍صِ‍‍ي‍‍َ‍امُ ثَلاَثَةِ ‌أَيّ‍‍َ‍ام‌‍ٍ‌ فِي ‌الْحَجِّ ‌وَسَ‍‍بْ‍‍عَة‌‍ٍ‌ ‌إِ‌ذَ‌ا‌ ‌‍رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَ‍رَة‌‍ٌ‌ كَامِلَة‌‍ٌۗ ‌ذَلِكَ لِمَ‍‌‍نْ لَمْ يَكُ‍‌‍نْ ‌أَهْلُ‍‍هُ حَاضِ‍‍رِي ‌الْمَسْجِدِ‌ ‌الْحَ‍رَ‍‌امِ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ شَد‍ِ‍ي‍‍دُ‌ ‌الْعِ‍‍قَ‍‍ابِ
Al-Ĥajju 'Ash/hurun Ma`lūmātun ۚ Faman Farađa Fīhinna Al-Ĥajja Falā Rafatha Wa Lā Fusūqa Wa Lā Jidāla Fī Al-Ĥajji ۗ Wa Mā Taf`alū Min Khayrin Ya`lamhu Allāhu ۗ Wa Tazawwadū Fa'inna Khayra Az-Zādi At-Taqۚ Wa Attaqūnī Yā 'Ūlī Al-'Albābi 2-197 ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். الْحَجُّ ‌أَشْهُر‌ٌ‌ مَعْلُوم‍‍َ‍ات‌‍ٌۚ فَمَ‍‌‍نْ فَ‍رَضَ فِيهِ‍‍نَّ ‌الْحَجَّ فَلاَ‌ ‌‍رَفَثَ ‌وَلاَ‌ فُس‍‍ُ‍و‍قَ ‌وَلاَ‌ جِد‍َ‍‌الَ فِي ‌الْحَجِّ ۗ ‌وَمَا‌ تَفْعَلُو‌ا‌ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌ٍ‌ يَعْلَمْهُ ‌اللَّ‍‍هُ ۗ ‌وَتَزَ‌وَّ‌دُ‌و‌ا‌ فَإِنَّ خَ‍‍يْ‍رَ‌ال‍‍زّ‍َ‍‌ا‌دِ‌ ‌ال‍‍تَّ‍‍قْ‍‍وَ‌ى‌ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍ونِي يَ‍‍ا‌ ‌أ‍ُ‍‌وْلِي ‌الأَلْبَابِ
Laysa `Alaykum Junāĥun 'An Tabtaghū Fađlāan Min Rabbikum ۚ Fa'idhā 'Afađtum Min `Arafātindhkurū Allaha `Inda Al-Mash`ari Al-Ĥarāmi ۖ Wa Adhkurūhu Kamā Hadākum Wa 'In Kuntum Min Qablihi Lamina Ađ-Đāllīna 2-198 (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது "மஷ்அருள் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். لَ‍‍يْ‍‍سَ عَلَيْكُمْ جُن‍‍َ‍احٌ ‌أَ‌نْ تَ‍‍بْ‍‍تَ‍‍غُ‍‍و‌ا‌ فَ‍‍ضْ‍‍لا‌ ً‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكُمْ ۚ فَإِ‌ذَ‌ا‌ ‌أَفَ‍‍ضْ‍‍تُمْ مِ‍‌‍نْ عَ‍رَف‍‍َ‍ات‌‍ٍ‌ فَا‌ذْكُرُ‌و‌ا‌اللَّ‍‍هَ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌الْمَشْعَ‍‍ر‍ِ‍‌ ‌الْحَ‍رَ‍‌امِ ۖ ‌وَ‌ا‌ذْكُر‍ُ‍‌وهُ كَمَا‌ هَدَ‌اكُمْ ‌وَ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِ‍‍هِ لَمِنَ ‌ال‍‍ضَّ‍‍الِّينَ
Thumma 'Afīđū Min Ĥaythu 'Afāđa An-Nāsu Wa Astaghfirū Allaha ۚ 'Inna Allāha Ghafūrun Raĥīmun 2-199 பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். ثُ‍‍مَّ ‌أَفِي‍‍ضُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ حَ‍‍يْ‍‍ثُ ‌أَف‍‍َ‍اضَ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ ‌وَ‌اسْتَ‍‍غْ‍‍فِرُ‌و‌ا‌اللَّ‍‍هَ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Fa'idhā Qađaytum Manāsikakumdhkurū Allaha Kadhikrikum 'Ābā'akum 'Aw 'Ashadda Dhikan ۗ Famina An-Nāsi Man Yaqūlu Rabbanā 'Ātinā Fī Ad-Dunyā Wa Mā Lahu Fī Al-'Ākhirati Min Khalāqin 2-200 ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், "எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு" என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. فَإِ‌ذَ‌ا‌ قَ‍‍ضَ‍‍يْتُمْ مَنَاسِكَكُمْ فَا‌ذْكُرُ‌و‌ا‌اللَّ‍‍هَ كَذِكْ‍‍رِكُمْ ‌آب‍‍َ‍ا‌ءَكُمْ ‌أَ‌وْ‌ ‌أَشَدَّ‌ ‌ذِكْر‌ا‌‌ ًۗ فَمِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ مَ‍‌‍نْ يَ‍‍قُ‍‍ولُ ‌‍رَبَّنَ‍‍ا‌ ‌آتِنَا‌ فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَمَا‌ لَ‍‍هُ فِي ‌الآ‍‍خِ‍رَةِ مِ‍‌‍نْ خَ‍‍لاَ‍قٍ
Wa Minhum Man Yaqūlu Rabbanā 'Ātinā Fī Ad-Dunyā Ĥasanatan Wa Fī Al-'Ākhirati Ĥasanatan Wa Qinā `Adhāba An-Nāri 2-201 இன்னும் அவர்களில் சிலர், "ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. وَمِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‌‍نْ يَ‍‍قُ‍‍ولُ ‌‍رَبَّنَ‍‍ا‌ ‌آتِنَا‌ فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ حَسَنَة ً‌ ‌وَفِي ‌الآ‍‍خِ‍رَةِ حَسَنَة ً‌ ‌وَ‍قِ‍‍نَا‌ عَذ‍َ‍‌ابَ ‌ال‍‍نَّ‍‍ا‌رِ
'Ūlā'ika Lahum Naşībun Mimmā Kasabū Wa ۚ Allāhu Sarī`u Al-Ĥisābi 2-202 இவ்வாறு, (இம்மை - மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ لَهُمْ نَ‍‍صِ‍‍ي‍‍بٌ‌ مِ‍‍مَّ‍‍ا‌ كَسَبُو‌اۚ ‌وَ‌اللَّهُ سَ‍‍ر‍ِ‍ي‍‍عُ ‌الْحِسَابِ
Wa Adhkurū Allaha Fī 'Ayyāmin Ma`dūdātin ۚ Faman Ta`ajjala Fī Yawmayni Falā 'Ithma `Alayhi Wa Man Ta'akhkhara Falā 'Ithma `Alayhi ۚ Limani Attaqá ۗ Wa Attaqū Allaha Wa A`lamū 'Annakum 'Ilayhi Tuĥsharūna 2-203 குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். وَ‌ا‌ذْكُرُ‌و‌ا‌اللَّ‍‍هَ فِ‍‍ي ‌أَيّ‍‍َ‍امٍ‌ مَعْدُ‌و‌د‍َ‍‌ات‌‍ٍۚ فَمَ‍‌‍نْ تَعَجَّلَ فِي يَوْمَ‍‍يْ‍‍نِ فَلاَ‌ ‌إِثْمَ عَلَ‍‍يْ‍‍هِ ‌وَمَ‍‌‍نْ تَأَ‍خَّ‍رَ‌ فَلاَ‌ ‌إِثْمَ عَلَ‍‍يْ‍‍هِ ۚ لِمَنِ ‌اتَّ‍‍قَ‍‍ى‌ ۗ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ‍‍كُمْ ‌إِلَ‍‍يْ‍‍هِ تُحْشَرُ‌ونَ
Wa Mina An-Nāsi Man Yu`jibuka Qawluhu Fī Al-Ĥayāati Ad-Dunyā Wa Yush/hidu Allāha `Alá Mā Fī Qalbihi Wa Huwa 'Aladdu Al-Khişāmi 2-204 (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். وَمِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ مَ‍‌‍نْ يُعْجِبُكَ قَ‍‍وْلُ‍‍هُ فِي ‌الْحَي‍‍َ‍اةِ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَيُشْهِدُ‌ ‌اللَّ‍‍هَ عَلَى‌ مَا‌ فِي قَ‍‍لْبِ‍‍هِ ‌وَهُوَ‌ ‌أَلَدُّ‌ ‌الْ‍‍خِ‍‍صَ‍‍امِ
Wa 'Idhā Tawallá Sa`á Fī Al-'Arđi Liyufsida Fīhā Wa Yuhlika Al-Ĥartha Wa An-Nasla Wa ۗ Allāhu Lā Yuĥibbu Al-Fasāda 2-205 அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்;. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. وَ‌إِ‌ذَ‌ا‌ تَوَلَّى‌ سَعَى‌ فِي ‌الأَ‌رْ‍ضِ لِيُفْسِدَ‌ فِيهَا‌ ‌وَيُهْلِكَ ‌الْحَرْثَ ‌وَ‌ال‍‍نَّ‍‍سْلَ ۗ ‌وَ‌اللَّهُ لاَ‌ يُحِبُّ ‌الْفَسَا‌دَ
Wa 'Idhā Qīla Lahu Attaqi Allāha 'Akhadhat/hu Al-`Izzatu Bil-'Ithmi ۚ Faĥasbuhu Jahannamu ۚ Wa Labi'sa Al-Mihādu 2-206 "அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும். وَ‌إِ‌ذَ‌ا‌ قِ‍‍ي‍‍لَ لَهُ ‌اتَّ‍‍قِ ‌اللَّ‍‍هَ ‌أَ‍خَ‍‍ذَتْهُ ‌الْعِزَّةُ بِ‍الإِثْمِ ۚ فَحَسْبُ‍‍هُ جَهَ‍‍نَّ‍‍مُ ۚ ‌وَلَبِئْسَ ‌الْمِهَا‌دُ
Wa Mina An-Nāsi Man Yashrī Nafsahu Abtighā'a Marđāati Allāhi Wa ۗ Allāhu Ra'ūfun Bil-`Ibādi 2-207 இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான். وَمِنَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ مَ‍‌‍نْ يَشْ‍‍رِي نَفْسَهُ ‌ابْ‍‍تِ‍‍غَ‍‍ا‌ءَ‌ مَرْ‍ضَ‍‍اةِ ‌اللَّ‍‍هِ ۗ ‌وَ‌اللَّهُ ‌‍رَ‌ء‍ُ‍‌وف‌‍ٌ‌ بِ‍الْعِبَا‌دِ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Adkhulū Fī As-Silmi Kāffatan Wa Lā Tattabi`ū Khuţuwāti Ash-Shayţāni ۚ 'Innahu Lakum `Adūwun Mubīnun 2-208 நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ا‌دْ‍‍خُ‍‍لُو‌ا‌ فِي ‌ال‍‍سِّلْمِ كَافَّة ً‌ ‌وَلاَ‌ تَتَّبِعُو‌اخُ‍‍طُ‍‍و‍َ‍‌اتِ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انِ ۚ ‌إِنَّ‍‍هُ لَكُمْ عَدُ‌وّ‌ٌ‌ مُبِينٌ
Fa'in Zalaltum Min Ba`di Mā Jā'atkumu Al-Bayyinātu Fā`lamū 'Anna Allāha `Azīzun Ĥakīmun 2-209 தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். فَإِ‌نْ ‌زَلَلْتُمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ ج‍‍َ‍ا‌ءَتْكُمُ ‌الْبَيِّن‍‍َ‍اتُ فَاعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ عَز‍ِ‍ي‍‍زٌ‌ حَكِيمٌ
Hal Yanžurūna 'Illā 'An Ya'tiyahumu Allāhu Fī Žulalin Mina Al-Ghamāmi Wa Al-Malā'ikatu Wa Quđiya Al-'Amru ۚ Wa 'Ilá Allāhi Turja`u Al-'Umūru 2-210 அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும். هَلْ يَ‍‌‍ن‍‍ظُ‍‍ر‍ُ‍‌ونَ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ يَأْتِيَهُمُ ‌اللَّ‍‍هُ فِي ظُ‍‍لَلٍ‌ مِنَ ‌الْ‍‍غَ‍‍م‍‍َ‍امِ ‌وَ‌الْمَلاَئِكَةُ ‌وَ‍قُ‍‍ضِ‍‍يَ ‌الأَمْرُ‌ ۚ ‌وَ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ تُرْجَعُ ‌الأُمُو‌رُ
Sal Banī 'Isrā'īla Kam 'Ātaynāhum Min 'Āyatin Bayyinatin ۗ Wa Man Yubaddil Ni`mata Allāhi Min Ba`di Mā Jā'at/hu Fa'inna Allāha Shadīdu Al-`Iqābi 2-211 (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்; "நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்" என்று. அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன். سَلْ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ كَمْ ‌آتَيْنَاهُمْ مِ‍‌‍نْ ‌آيَة ٍ‌ بَيِّنَةٍۗ ‌وَمَ‍‌‍نْ يُبَدِّلْ نِعْمَةَ ‌اللَّ‍‍هِ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ ج‍‍َ‍ا‌ءَتْهُ فَإِنَّ ‌اللَّ‍‍هَ شَد‍ِ‍ي‍‍دُ‌ ‌الْعِ‍‍قَ‍‍ابِ
Zuyyina Lilladhīna Kafarū Al-Ĥayāatu Ad-Dunyā Wa Yaskharūna Mina Al-Ladhīna 'Āmanū Wa ۘ Al-Ladhīna Attaqaw Fawqahum Yawma Al-Qiyāmati Wa ۗ Allāhu Yarzuqu Man Yashā'u Bighayri Ĥisābin 2-212 நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்;டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;. இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான். زُيِّنَ لِلَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌الْحَي‍‍َ‍اةُ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَيَسْ‍‍خَ‍‍ر‍ُ‍‌ونَ مِنَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌اۘ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اتَّ‍‍قَ‍‍وْ‌ا‌ فَوْ‍قَ‍‍هُمْ يَ‍‍وْمَ ‌الْ‍‍قِ‍‍يَامَةِ ۗ ‌وَ‌اللَّهُ يَرْ‌زُ‍قُ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ بِ‍‍غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ حِسَابٍ
Kāna An-Nāsu 'Ummatan Wāĥidatan Faba`atha Allāhu An-Nabīyīna Mubashshirīna Wa Mundhirīna Wa 'Anzala Ma`ahumu Al-Kitāba Bil-Ĥaqqi Liyaĥkuma Bayna An-Nāsi Fīmā Akhtalafū Fīhi ۚ Wa Mā Akhtalafa Fīhi 'Illā Al-Ladhīna 'Ūtūhu Min Ba`di Mā Jā'at/humu Al-Bayyinātu Baghyāan Baynahum ۖ Fahadá Allāhu Al-Ladhīna 'Āmanū Limā Akhtalafū Fīhi Mina Al-Ĥaqqi Bi'idhnihi Wa ۗ Allāhu Yahdī Man Yashā'u 'Ilá Şirāţin Mustaqīmin 2-213 (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். ك‍‍َ‍انَ ‌ال‍‍نّ‍‍َ‍اسُ ‌أُمَّ‍‍ة ً‌ ‌وَ‌احِدَة‌ ً‌ فَبَعَثَ ‌اللَّ‍‍هُ ‌ال‍‍نَّ‍‍بِيّ‍‍ِ‍ي‍‍نَ مُبَشِّ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌وَمُ‍‌‍ن‍‍ذِ‌ر‍ِ‍ي‍‍نَ ‌وَ‌أَ‌ن‍‍زَلَ مَعَهُمُ ‌الْكِت‍‍َ‍ابَ بِ‍الْحَ‍‍قِّ لِيَحْكُمَ بَ‍‍يْ‍‍نَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ فِيمَا‌ ‌اخْ‍‍تَلَفُو‌ا‌ ف‍‍ِ‍ي‍‍هِ ۚ ‌وَمَا‌ ‌اخْ‍‍تَلَفَ ف‍‍ِ‍ي‍‍هِ ‌إِلاَّ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وت‍‍ُ‍وهُ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ ج‍‍َ‍ا‌ءَتْهُمُ ‌الْبَيِّن‍‍َ‍اتُ بَ‍‍غْ‍‍يا‌ ً‌ بَيْنَهُمْ ۖ فَهَدَ‌ى‌ ‌اللَّ‍‍هُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لِمَا‌ ‌اخْ‍‍تَلَفُو‌ا‌ ف‍‍ِ‍ي‍‍هِ مِنَ ‌الْحَ‍‍قِّ بِإِ‌ذْنِ‍‍هِ ۗ ‌وَ‌اللَّهُ يَهْدِي مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌إِلَى‌ صِ‍رَ‍‌اطٍ‌ مُسْتَ‍‍قِ‍‍يمٍ
'Am Ĥasibtum 'An Tadkhulū Al-Jannata Wa Lammā Ya'tikum Mathalu Al-Ladhīna Khalaw Min Qablikum ۖ Massat/humu Al-Ba'sā'u Wa Ađ-Đarrā'u Wa Zulzilū Ĥattá Yaqūla Ar-Rasūlu Wa Al-Ladhīna 'Āmanū Ma`ahu Matá Naşru Allāhi ۗ 'Alā 'Inna Naşra Allāhi Qarībun 2-214 உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) أَمْ حَسِ‍‍بْ‍‍تُمْ ‌أَ‌نْ تَ‍‍دْ‍‍خُ‍‍لُو‌ا‌الْجَ‍‍نَّ‍‍ةَ ‌وَلَ‍‍مَّ‍‍ا‌ يَأْتِكُمْ مَثَلُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ خَ‍‍لَوْ‌ا‌ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِكُمْ ۖ مَسَّتْهُمُ ‌الْبَأْس‍‍َ‍ا‌ءُ‌ ‌وَ‌ال‍‍ضَّ‍‍رّ‍َ‍‌ا‌ءُ‌ ‌وَ‌زُلْزِلُو‌ا‌ حَتَّى‌ يَ‍‍قُ‍‍ولَ ‌ال‍رَّس‍‍ُ‍ولُ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ مَعَ‍‍هُ مَتَى‌ نَ‍‍صْ‍‍رُ‌ ‌اللَّ‍‍هِ ۗ ‌أَلاَ‌ ‌إِنَّ نَ‍‍صْ‍رَ‌اللَّ‍‍هِ قَ‍‍رِيبٌ
Yas'alūnaka Mādhā Yunfiqūna ۖ Qul Mā 'Anfaqtum Min Khayrin Falilwālidayni Wa Al-'Aqrabīna Wa Al-Yatāmá Wa Al-Masākīni Wa Abni As-Sabīli ۗ Wa Mā Taf`alū Min Khayrin Fa'inna Allāha Bihi `Alīmun 2-215 அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." يَسْأَلُونَكَ مَا‌ذَ‌ا‌ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ ۖ قُ‍‍لْ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍فَ‍‍قْ‍‍تُمْ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌‌ٍ‌ فَلِلْوَ‌الِدَيْ‍‍نِ ‌وَ‌الأَ‍قْ‍‍‍رَب‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْيَتَامَى‌ ‌وَ‌الْمَسَاك‍‍ِ‍ي‍‍نِ ‌وَ‌ابْ‍‍نِ ‌ال‍‍سَّب‍‍ِ‍ي‍‍لِ ۗ ‌وَمَا‌ تَفْعَلُو‌ا‌ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌‌ٍ‌ فَإِنَّ ‌اللَّ‍‍هَ بِ‍‍هِ عَلِيمٌ
Kutiba `Alaykumu Al-Qitālu Wa Huwa Kurhun Lakum ۖ Wa `Asá 'An TakraShay'āan Wa Huwa Khayrun Lakum ۖ Wa `Asá 'An Tuĥibbū Shay'āan Wa Huwa Sharrun Lakum Wa ۗ Allāhu Ya`lamu Wa 'Antum Lā Ta`lamūna 2-216 போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். كُتِبَ عَلَيْكُمُ ‌الْ‍‍قِ‍‍ت‍‍َ‍الُ ‌وَهُوَ‌ كُرْه ٌ‌ لَكُمْ ۖ ‌وَعَس‍‍ى‌ ‌أَ‌نْ تَكْ‍رَهُو‌ا‌ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَهُوَ‌ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَكُمْ ۖ ‌وَعَسَ‍‍ى‌ ‌أَ‌نْ تُحِبُّو‌ا‌ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَهُوَ‌ شَرّ‌ٌ‌ لَكُمْ ۗ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ لاَ‌ تَعْلَمُونَ
Yas'alūnaka `Ani Ash-Shahri Al-Ĥarāmi Qitālin Fīhi ۖ Qul Qitālun Fīhi Kabīrun ۖ Wa Şaddun `An Sabīli Allāhi Wa Kufrun Bihi Wa Al-Masjidi Al-Ĥarāmi Wa 'Ikhrāju 'Ahlihi Minhu 'Akbaru `Inda Allāhi Wa ۚ Al-Fitnatu 'Akbaru Mina Al-Qatli ۗ Wa Lā Yazālūna Yuqātilūnakum Ĥattá Yaruddūkum `An Dīnikum 'Ini Astaţā`ū ۚ Wa Man Yartadid Minkum `An Dīnihi Fayamut Wa Huwa Kāfirun Fa'ūlā'ika Ĥabiţat 'A`māluhum Ad-Dunyā Wa Al-'Ākhirati ۖ Wa 'Ūlā'ika 'Aşĥābu An-Nāri ۖ Hum Fīhā Khālidūna 2-217 (நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." يَسْأَلُونَكَ عَنِ ‌ال‍‍شَّهْ‍‍ر‍ِ‍‌ ‌الْحَ‍رَ‍‌امِ قِ‍‍ت‍‍َ‍ال‌‍ٍ‌ ف‍‍ِ‍ي‍‍هِ ۖ قُ‍‍لْ قِ‍‍ت‍‍َ‍ال‌‍ٌ‌ ف‍‍ِ‍ي‍‍هِ كَب‍‍ِ‍ي‍‍ر‌ٌۖ ‌وَ‍صَ‍‍دٌّ‌ عَ‍‌‍نْ سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌وَكُفْر‌ٌ‌ بِ‍‍هِ ‌وَ‌الْمَسْجِدِ‌ ‌الْحَ‍رَ‍‌امِ ‌وَ‌إِخْ‍رَ‍‌اجُ ‌أَهْلِ‍‍هِ مِ‍‌‍نْ‍‍هُ ‌أَكْبَرُ‌ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَ‌الْفِتْنَةُ ‌أَكْبَرُ‌ مِنَ ‌الْ‍‍قَ‍‍تْلِ ۗ ‌وَلاَ‌ يَزَ‌ال‍‍ُ‍ونَ يُ‍‍قَ‍‍اتِلُونَكُمْ حَتَّى‌ يَرُ‌دُّ‌وكُمْ عَ‍‌‍نْ ‌دِينِكُمْ ‌إِنِ ‌اسْتَ‍‍طَ‍‍اعُو‌اۚ ‌وَمَ‍‌‍نْ يَرْتَدِ‌دْ‌ مِ‍‌‍نْ‍‍كُمْ عَ‍‌‍نْ ‌دِينِ‍‍هِ فَيَمُتْ ‌وَهُوَ‌ كَافِر‌‌ٌ‌ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ حَبِ‍‍طَ‍‍تْ ‌أَعْمَالُهُمْ فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَ‌الآ‍‍خِ‍رَةِ ۖ ‌وَ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
'Inna Al-Ladhīna 'Āmanū Wa Al-Ladhīna Hājarū Wa Jāhadū Fī Sabīli Allāhi 'Ūlā'ika Yarjūna Raĥmata Allāhi Wa ۚ Allāhu Ghafūrun Raĥīmun 2-218 நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ هَاجَرُ‌و‌ا‌ ‌وَجَاهَدُ‌و‌ا‌ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ يَرْج‍‍ُ‍ونَ ‌‍رَحْمَةَ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَ‌اللَّهُ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Yas'alūnaka `Ani Al-Khamri Wa Al-Maysiri ۖ Qul Fīhimā 'Ithmun Kabīrun Wa Manāfi`u Lilnnāsi Wa 'Ithmuhumā 'Akbaru Min Naf`ihimā ۗ Wa Yas'alūnaka Mādhā Yunfiqūna Quli Al-`Afwa ۗ Kadhālika Yubayyinu Allāhu Lakumu Al-'Āyāti La`allakum Tatafakkarūna 2-219 (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். يَسْأَلُونَكَ عَنِ ‌الْ‍‍خَ‍‍مْ‍‍ر‍ِ‍‌ ‌وَ‌الْمَيْسِرِ‌ ۖ قُ‍‍لْ فِيهِمَ‍‍ا‌ ‌إِثْم‌‍ٌ‌ كَب‍‍ِ‍ي‍‍ر‌ٌ‌ ‌وَمَنَافِعُ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌وَ‌إِثْمُهُمَ‍‍ا‌ ‌أَكْبَرُ‌ مِ‍‌‍نْ نَفْعِهِمَا‌ ۗ ‌وَيَسْأَلُونَكَ مَا‌ذَ‌ا‌ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ قُ‍‍لِ ‌الْعَفْوَ‌ ۗ كَذَلِكَ يُبَيِّنُ ‌اللَّ‍‍هُ لَكُمُ ‌الآي‍‍َ‍اتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُ‌ونَ
Ad-Dunyā Wa Al-'Ākhirati ۗ Wa Yas'alūnaka `Ani Al-Yatāmá ۖ Qul 'Işlāĥun Lahum Khayrun ۖ Wa 'In Tukhāliţūhum Fa'ikhwānukum Wa ۚ Allāhu Ya`lamu Al-Mufsida Mina Al-Muşliĥi ۚ Wa Law Shā'a Allāhu La'a`natakum ۚ 'Inna Allāha `Azīzun Ĥakīmun 2-220 (மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) "அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;" நீர் கூறுவீராக "அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது. நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்;. இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்;. அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்." فِي ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ ‌وَ‌الآ‍‍خِ‍رَةِ ۗ ‌وَيَسْأَلُونَكَ عَنِ ‌الْيَتَامَى‌ ۖ قُ‍‍لْ ‌إِصْ‍‍لاَح ٌ‌ لَهُمْ خَ‍‍يْ‍‍ر‌ٌۖ ‌وَ‌إِ‌نْ تُ‍‍خَ‍‍الِ‍‍طُ‍‍وهُمْ فَإِخْ‍‍وَ‌انُكُمْ ۚ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ ‌الْمُفْسِدَ‌ مِنَ ‌الْمُ‍‍صْ‍‍لِحِ ۚ ‌وَلَوْ‌ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ لَأَعْنَتَكُمْ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ عَز‍ِ‍ي‍‍زٌ‌ حَكِيمٌ
Wa Lā Tankiĥū Al-Mushrikāti Ĥattá Yu'uminna ۚ Wa La'amatun Mu'uminatun Khayrun Min Mushrikatin Wa Law 'A`jabatkum ۗ Wa Lā Tunkiĥū Al-Mushrikīna Ĥattá Yu'uminū ۚ Wa La`abdun Mu'uminun Khayrun Min Mushrikin Wa Law 'A`jabakum ۗ 'Ūlā'ika Yad`ūna 'Ilá An-Nāri Wa ۖ Allāhu Yad`ū 'Ilá Al-Jannati Wa Al-Maghfirati Bi'idhnihi ۖ Wa Yubayyinu 'Āyātihi Lilnnāsi La`allahum Yatadhakkarūna 2-221 (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். وَلاَ‌ تَ‍‌‍ن‍‍كِحُو‌ا‌الْمُشْ‍‍رِك‍‍َ‍اتِ حَتَّى‌ يُؤْمِ‍‍نَّ ۚ ‌وَلَأَمَةٌ‌ مُؤْمِنَةٌ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ مِ‍‌‍نْ مُشْ‍‍رِكَةٍ‌ ‌وَلَوْ‌ ‌أَعْجَبَتْكُمْ ۗ ‌وَلاَ‌ تُ‍‌‍ن‍‍كِحُو‌ا‌الْمُشْ‍‍رِك‍‍ِ‍ي‍‍نَ حَتَّى‌ يُؤْمِنُو‌اۚ ‌وَلَعَ‍‍بْ‍‍د‌ٌ‌ مُؤْمِنٌ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ مِ‍‌‍نْ مُشْ‍‍رِكٍ‌ ‌وَلَوْ‌ ‌أَعْجَبَكُمْ ۗ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ يَ‍‍دْع‍‍ُ‍ونَ ‌إِلَى‌ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ ‌وَ‌اللَّهُ يَ‍‍دْعُو‌ ‌إِلَى‌ ‌الْجَ‍‍نَّ‍‍ةِ ‌وَ‌الْمَ‍‍غْ‍‍فِ‍رَةِ بِإِ‌ذْنِ‍‍هِ ۖ ‌وَيُبَيِّنُ ‌آيَاتِ‍‍هِ لِل‍‍نّ‍‍َ‍اسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُ‌ونَ
Wa Yas'alūnaka `Ani Al-Maĥīđi ۖ Qul Huwa 'Adhan Fā`tazilū An-Nisā' Fī Al-Maĥīđi ۖ Wa Lā Taqrabūhunna Ĥattá Yaţhurna ۖ Fa'idhā Taţahharna Fa'tūhunna Min Ĥaythu 'Amarakumu Allāhu ۚ 'Inna Allāha Yuĥibbu At-Tawwābīna Wa Yuĥibbu Al-Mutaţahhirīna 2-222 மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்." وَيَسْأَلُونَكَ عَنِ ‌الْمَح‍‍ِ‍ي‍‍ضِ ۖ قُ‍‍لْ هُوَ‌ ‌أَ‌ذ‌ى‌‌ ً‌ فَاعْتَزِلُو‌ا‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ فِي ‌الْمَح‍‍ِ‍ي‍‍ضِ ۖ ‌وَلاَ‌ تَ‍‍قْ‍‍‍رَبُوهُ‍‍نَّ حَتَّى‌ يَ‍‍طْ‍‍هُرْنَ ۖ فَإِ‌ذَ‌ا‌ تَ‍‍طَ‍‍هَّرْنَ فَأْتُوهُ‍‍نَّ مِ‍‌‍نْ حَ‍‍يْ‍‍ثُ ‌أَمَ‍رَكُمُ ‌اللَّ‍‍هُ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ يُحِبُّ ‌ال‍‍تَّوَّ‌اب‍‍ِ‍ي‍‍نَ ‌وَيُحِبُّ ‌الْمُتَ‍‍طَ‍‍هِّ‍‍رِينَ
Nisā'uukum Ĥarthun Lakum Fa'tū Ĥarthakum 'Anná Shi'tum ۖ Wa Qaddimū Li'nfusikum ۚ Wa Attaqū Allaha Wa A`lamū 'Annakum Mulāqūhu ۗ Wa Bashshiri Al-Mu'uminīna 2-223 உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! نِس‍‍َ‍ا‌ؤُكُمْ حَرْث ٌ‌ لَكُمْ فَأْتُو‌ا‌ حَرْثَكُمْ ‌أَنَّ‍‍ى‌ شِئْتُمْ ۖ ‌وَ‍قَ‍‍دِّمُو‌ا‌ لِأ‌ن‍‍فُسِكُمْ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ‍‍كُمْ مُلاَ‍قُ‍‍وهُ ۗ ‌وَبَشِّرِ‌ ‌الْمُؤْمِنِينَ
Wa Lā Taj`alū Allaha `Urđatan Li'ymānikum 'An Tabarrū Wa Tattaqū Wa Tuşliĥū Bayna An-Nāsi Wa ۗ Allāhu Samī`un `Alīmun 2-224 இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்;. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். وَلاَ‌ تَ‍‍جْ‍‍عَلُو‌ا‌اللَّ‍‍هَ عُرْ‍ضَ‍‍ة ً‌ لِأيْ‍‍مَانِكُمْ ‌أَ‌نْ تَبَرُّ‌و‌ا‌ ‌وَتَتَّ‍‍قُ‍‍و‌ا‌ ‌وَتُ‍‍صْ‍‍لِحُو‌ا‌ بَ‍‍يْ‍‍نَ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ ۗ ‌وَ‌اللَّهُ سَم‍‍ِ‍ي‍‍عٌ عَلِيمٌ
Lā Yu'uākhidhukumu Allāhu Bil-Laghwi Fī 'Aymānikum Wa Lakin Yu'uākhidhukum Bimā Kasabat Qulūbukum Wa ۗ Allāhu Ghafūrun Ĥalīmun 2-225 (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான். لاَ‌ يُؤ‍َ‍‌اخِ‍‍ذُكُمُ ‌اللَّ‍‍هُ بِ‍ال‍‍لَّ‍‍غْ‍‍وِ‌ فِ‍‍ي ‌أَيْمَانِكُمْ ‌وَلَكِ‍‌‍نْ يُؤ‍َ‍‌اخِ‍‍ذُكُمْ بِمَا‌ كَسَبَتْ قُ‍‍لُوبُكُمْ ۗ ‌وَ‌اللَّهُ غَ‍‍ف‍‍ُ‍و‌رٌ‌ حَلِيمٌ
Lilladhīna Yu'ulūna Min Nisā'ihim Tarabbuşu 'Arba`ati 'Ash/hurin ۖ Fa'in Fā'ū Fa'inna Allāha Ghafūrun Raĥīmun 2-226 தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். لِلَّذ‍ِ‍ي‍‍نَ يُؤْل‍‍ُ‍ونَ مِ‍‌‍نْ نِس‍‍َ‍ائِهِمْ تَ‍رَبُّ‍‍صُ ‌أَ‌رْبَعَةِ ‌أَشْهُر‌‌ٍۖ فَإِ‌نْ ف‍‍َ‍ا‌ء‍ُ‍‌و‌ا‌ فَإِنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌ر‌ٌ‌ ‌‍رَحِيمٌ
Wa 'In `Azamū Aţ-Ţalāqa Fa'inna Allāha Samī`un `Alīmun 2-227 ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். وَ‌إِ‌نْ عَزَمُو‌ا‌ال‍‍طَّ‍‍لاَ‍قَ فَإِنَّ ‌اللَّ‍‍هَ سَم‍‍ِ‍ي‍‍عٌ عَلِيمٌ
Wa Al-Muţallaqātu Yatarabbaşna Bi'anfusihinna Thalāthata Qurū'in ۚ Wa Lā Yaĥillu Lahunna 'An Yaktumna Mā Khalaqa Allāhu Fī 'Arĥāmihinna 'In Kunna Yu'uminna Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri ۚ Wa Bu`ūlatuhunna 'Aĥaqqu Biraddihinna Fī Dhālika 'In 'Adū 'Işlāĥāan ۚ Wa Lahunna Mithlu Al-Ladhī `Alayhinna Bil-Ma`rūfi ۚ Wa Lilrrijāli `Alayhinna Darajatun Wa ۗ Allāhu `Azīzun Ĥakīmun 2-228 தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். وَ‌الْمُ‍‍طَ‍‍لَّ‍‍قَ‍‍اتُ يَتَ‍رَبَّ‍‍صْ‍‍نَ بِأَ‌ن‍‍فُسِهِ‍‍نَّ ثَلاَثَةَ قُ‍‍ر‍ُ‍‌و‌ء‌ٍۚ ‌وَلاَ‌ يَحِلُّ لَهُ‍‍نَّ ‌أَ‌نْ يَكْتُمْنَ مَا‌ خَ‍‍لَ‍‍قَ ‌اللَّ‍‍هُ فِ‍‍ي ‌أَ‌رْحَامِهِ‍‍نَّ ‌إِ‌نْ كُ‍‍نَّ يُؤْمِ‍‍نَّ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ۚ ‌وَبُعُولَتُهُ‍‍نَّ ‌أَحَ‍‍قُّ بِ‍رَ‌دِّهِ‍‍نَّ فِي ‌ذَلِكَ ‌إِ‌نْ ‌أَ‌‍رَ‌ا‌دُ‌و‌ا‌ ‌إِصْ‍‍لاَحا‌ ًۚ ‌وَلَهُ‍‍نَّ مِثْلُ ‌الَّذِي عَلَيْهِ‍‍نَّ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۚ ‌وَلِ‍‍ل‍‍رِّج‍‍َ‍الِ عَلَيْهِ‍‍نَّ ‌دَ‌‍رَجَةٌۗ ‌وَ‌اللَّهُ عَز‍ِ‍ي‍‍زٌ‌ حَكِيمٌ
Aţ-Ţalāqu Marratāni ۖ Fa'imsākun Bima`rūfin 'Aw Tasrīĥun Bi'iĥsānin ۗ Wa Lā Yaĥillu Lakum 'An Ta'khudhū Mimmā 'Ātaytumūhunna Shay'āan 'Illā 'An Yakhāfā 'Allā Yuqīmā Ĥudūda Allāhi ۖ Fa'in Khiftum 'Allā Yuqīmā Ĥudūda Allāhi Falā Junāĥa `Alayhimā Fīmā Aftadat Bihi ۗ Tilka Ĥudūdu Allāhi Falā Ta`tadūhā ۚ Wa Man Yata`adda Ĥudūda Allāhi Fa'ūlā'ika Humu Až-Žālimūna 2-229 (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். ال‍‍طَّ‍‍لاَ‍قُ مَ‍رَّت‍‍َ‍انِ ۖ فَإمْس‍‍َ‍اك‌‍ٌ‌ بِمَعْر‍ُ‍‌وفٍ ‌أَ‌وْ‌ تَسْ‍‍ر‍ِ‍ي‍‍ح‌‍ٌ‌ بِإِحْس‍‍َ‍انٍۗ ‌وَلاَ‌ يَحِلُّ لَكُمْ ‌أَ‌نْ تَأْ‍خُ‍‍ذُ‌و‌ا‌ مِ‍‍مَّ‍‍ا‌ ‌آتَيْتُمُوهُ‍‍نَّ شَ‍‍يْ‍‍ئا‌‌ ً‌ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ يَ‍‍خَ‍‍افَ‍‍ا‌ ‌أَلاَّ‌ يُ‍‍قِ‍‍يمَا‌ حُد‍ُ‍‌و‌دَ‌ ‌اللَّ‍‍هِ ۖ فَإِ‌نْ خِ‍‍فْتُمْ ‌أَلاَّ‌ يُ‍‍قِ‍‍يمَا‌ حُد‍ُ‍‌و‌دَ‌ ‌اللَّ‍‍هِ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْهِمَا‌ فِيمَا‌ ‌افْتَدَتْ بِ‍‍هِ ۗ تِلْكَ حُد‍ُ‍‌و‌دُ‌ ‌اللَّ‍‍هِ فَلاَ‌ تَعْتَدُ‌وهَا‌ ۚ ‌وَمَ‍‌‍نْ يَتَعَدَّ‌ حُد‍ُ‍‌و‌دَ‌ ‌اللَّ‍‍هِ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ هُمُ ‌ال‍‍ظَّ‍‍الِمُونَ
Fa'in Ţallaqahā Falā Taĥillu Lahu Min Ba`du Ĥattá Tankiĥa Zawjāan Ghayrahu ۗ Fa'in Ţallaqahā Falā Junāĥa `Alayhimā 'An Yataja`ā 'In Žannā 'An Yuqīmā Ĥudūda Allāhi ۗ Wa Tilka Ĥudūdu Allāhi Yubayyinuhā Liqawmin Ya`lamūna 2-230 மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். فَإِ‌نْ طَ‍‍لَّ‍‍قَ‍‍هَا‌ فَلاَ‌ تَحِلُّ لَ‍‍هُ مِ‍‌‍نْ بَعْدُ‌ حَتَّى‌ تَ‍‌‍ن‍‍كِحَ ‌زَ‌وْجاً‌ غَ‍‍يْ‍رَهُ ۗ فَإِ‌نْ طَ‍‍لَّ‍‍قَ‍‍هَا‌ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْهِمَ‍‍ا‌ ‌أَ‌نْ يَتَ‍رَ‌اجَعَ‍‍ا‌ ‌إِ‌نْ ظَ‍‍نَّ‍‍ا‌ ‌أَ‌نْ يُ‍‍قِ‍‍يمَا‌ حُد‍ُ‍‌و‌دَ‌ ‌اللَّ‍‍هِ ۗ ‌وَتِلْكَ حُد‍ُ‍‌و‌دُ‌ ‌اللَّ‍‍هِ يُبَيِّنُهَا‌ لِ‍‍قَ‍‍وْمٍ‌ يَعْلَمُونَ
Wa 'Idhā Ţallaqtumu An-Nisā' Fabalaghna 'Ajalahunna Fa'amsikūhunna Bima`rūfin 'Aw Sarriĥūhunna Bima`rūfin ۚ Wa Lā Tumsikūhunna Đirāan Lita`tadū ۚ Wa Man Yaf`al Dhālika Faqad Žalama Nafsahu ۚ Wa Lā Tattakhidhū 'Āyāti Allāhi Huzūan ۚ Wa Adhkurū Ni`mata Allāhi `Alaykum Wa Mā 'Anzala `Alaykum Mina Al-Kitābi Wa Al-Ĥikmati Ya`ižukum Bihi ۚ Wa Attaqū Allaha Wa A`lamū 'Anna Allāha Bikulli Shay'in `Alīmun 2-231 (மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;.அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி;த்துப்பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். وَ‌إِ‌ذَ‌ا‌ طَ‍‍لَّ‍‍قْ‍‍تُمُ ‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ فَبَلَ‍‍غْ‍‍نَ ‌أَجَلَهُ‍‍نَّ فَأَمْسِكُوهُ‍‍نَّ بِمَعْر‍ُ‍‌وفٍ ‌أَ‌وْ‌ سَرِّحُوهُ‍‍نَّ بِمَعْر‍ُ‍‌وفٍۚ ‌وَلاَ‌ تُمْسِكُوهُ‍‍نَّ ضِ‍رَ‌ا‌ر‌ا‌ ً‌ لِتَعْتَدُ‌و‌اۚ ‌وَمَ‍‌‍نْ يَفْعَلْ ‌ذَلِكَ فَ‍‍قَ‍‍دْ‌ ظَ‍‍لَمَ نَفْسَ‍‍هُ ۚ ‌وَلاَ‌ تَتَّ‍‍خِ‍‍ذُ‌و‌ا‌ ‌آي‍‍َ‍اتِ ‌اللَّ‍‍هِ هُز‍ُ‍‌و‌ا‌ ًۚ ‌وَ‌ا‌ذْكُرُ‌و‌ا‌ نِعْمَةَ ‌اللَّ‍‍هِ عَلَيْكُمْ ‌وَمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ عَلَيْكُمْ مِنَ ‌الْكِت‍‍َ‍ابِ ‌وَ‌الْحِكْمَةِ يَعِ‍‍ظُ‍‍كُمْ بِ‍‍هِ ۚ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ بِكُلِّ شَ‍‍يْءٍ‌ عَلِيمٌ
Wa 'Idhā Ţallaqtumu An-Nisā' Fabalaghna 'Ajalahunna Falā Ta`đulūhunna 'An Yankiĥna 'Azwājahunna 'Idhā Tađaw Baynahum Bil-Ma`rūfi ۗ Dhālika Yū`ažu Bihi Man Kāna Minkum Yu'uminu Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri ۗ Dhālikum 'Azká Lakum Wa 'Aţharu Wa ۗ Allāhu Ya`lamu Wa 'Antum Lā Ta`lamūna 2-232 இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். وَ‌إِ‌ذَ‌ا‌ طَ‍‍لَّ‍‍قْ‍‍تُمُ ‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ فَبَلَ‍‍غْ‍‍نَ ‌أَجَلَهُ‍‍نَّ فَلاَ‌ تَعْ‍‍ضُ‍‍لُوهُ‍‍نَّ ‌أَ‌نْ يَ‍‌‍ن‍‍كِحْنَ ‌أَ‌زْ‌وَ‌اجَهُ‍‍نَّ ‌إِ‌ذَ‌ا‌ تَ‍رَ‌اضَ‍‍وْ‌ا‌ بَيْنَهُمْ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۗ ‌ذَلِكَ يُوعَ‍‍ظُ بِ‍‍هِ مَ‍‌‍نْ ك‍‍َ‍انَ مِ‍‌‍نْ‍‍كُمْ يُؤْمِنُ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ۗ ‌ذَلِكُمْ ‌أَ‌زْكَى‌ لَكُمْ ‌وَ‌أَ‍طْ‍‍هَرُ‌ ۗ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ لاَ‌ تَعْلَمُونَ
Wa Al-Wālidātu Yurđi`na 'Awlādahunna Ĥawlayni Kāmilayni ۖ Liman 'Arāda 'An Yutimma Ar-Rađā`ata ۚ Wa `Alá Al-Mawlūdi Lahu Rizquhunna Wa Kiswatuhunna Bil-Ma`rūfi ۚ Lā Tukallafu Nafsun 'Illā Wus`ahā ۚ Lā Tuđārra Wa A-Datun Biwaladihā Wa Lā Mawlūdun Lahu Biwaladihi ۚ Wa `Alá Al-Wārithi Mithlu Dhālika ۗ Fa'in 'Adā Fişālāan `An Tađin Minhumā Wa Tashāwurin Falā Junāĥa `Alayhimā ۗ Wa 'In 'Aradtum 'An Tastarđi`ū 'Awlādakum Falā Junāĥa `Alaykum 'Idhā Sallamtum Mā 'Ātaytum Bil-Ma`rūfi ۗ Wa Attaqū Allaha Wa A`lamū 'Anna Allāha Bimā Ta`malūna Başīrun 2-233 (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். وَ‌الْوَ‌الِد‍َ‍‌اتُ يُرْ‍ضِ‍‍عْنَ ‌أَ‌وْلاَ‌دَهُ‍‍نَّ حَوْلَ‍‍يْ‍‍نِ كَامِلَ‍‍يْ‍‍نِ ۖ لِمَ‍‌‍نْ ‌أَ‌رَ‍‌ا‌دَ‌ ‌أَ‌نْ يُتِ‍‍مَّ ‌ال‍رَّ‍ضَ‍‍اعَةَ ۚ ‌وَعَلَى‌ ‌الْمَوْل‍‍ُ‍و‌دِ‌ لَ‍‍هُ ‌رِ‌زْ‍قُ‍‍هُ‍‍نَّ ‌وَكِسْوَتُهُ‍‍نَّ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۚ لاَ‌ تُكَلَّفُ نَفْس‌‍ٌ‌ ‌إِلاَّ‌ ‌وُسْعَهَا‌ ۚ لاَ‌ تُ‍‍ضَ‍‍ا‌‍رَّ‌ ‌وَ‌الِدَة‌‍ٌ‌ بِوَلَدِهَا‌ ‌وَلاَ‌ مَوْل‍‍ُ‍و‌د‌ٌ‌ لَ‍‍هُ بِوَلَدِهِ ۚ ‌وَعَلَى‌ ‌الْوَ‌ا‌رِثِ مِثْلُ ‌ذَلِكَ ۗ فَإِ‌نْ ‌أَ‌‍رَ‌ا‌دَ‌ا‌ فِ‍‍صَ‍‍الاً‌ عَ‍‌‍نْ تَ‍رَ‍‌اضٍ‌ مِ‍‌‍نْ‍‍هُمَا‌ ‌وَتَشَا‌وُ‌ر‌‌ٍ‌ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْهِمَا‌ ۗ ‌وَ‌إِ‌نْ ‌أَ‌‍رَ‌دْتُمْ ‌أَ‌نْ تَسْتَرْ‍ضِ‍‍عُ‍‍و‌ا‌ ‌أَ‌وْلاَ‌دَكُمْ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْكُمْ ‌إِ‌ذَ‌ا‌ سَلَّمْتُمْ مَ‍‍ا‌ ‌آتَيْتُمْ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۗ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ بَ‍‍صِ‍‍يرٌ
Wa Al-Ladhīna Yutawaffawna Minkum Wa Yadharūna 'Azwājāan Yatarabbaşna Bi'anfusihinna 'Arba`ata 'Ash/hurin Wa `Ashan ۖ Fa'idhā Balaghna 'Ajalahunna Falā Junāĥa `Alaykum Fīmā Fa`alna Fī 'Anfusihinna Bil-Ma`rūfi Wa ۗ Allāhu Bimā Ta`malūna Khabīrun 2-234 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்;. (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُتَوَفَّ‍‍وْنَ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَيَذَ‌ر‍ُ‍‌ونَ ‌أَ‌زْ‌وَ‌اجا‌ ً‌ يَتَ‍رَبَّ‍‍صْ‍‍نَ بِأَ‌ن‍‍فُسِهِ‍‍نَّ ‌أَ‌رْبَعَةَ ‌أَشْهُر‌ٍ‌ ‌وَعَشْر‌ا‌‌ ًۖ فَإِ‌ذَ‌ا‌ بَلَ‍‍غْ‍‍نَ ‌أَجَلَهُ‍‍نَّ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْكُمْ فِيمَا‌ فَعَلْنَ فِ‍‍ي ‌أَ‌ن‍‍فُسِهِ‍‍نَّ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۗ ‌وَ‌اللَّهُ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ خَ‍‍بِيرٌ
Wa Lā Junāĥa `Alaykum Fīmā `Arrađtum Bihi Min Khiţbati An-Nisā' 'Aw 'Aknantum Fī 'Anfusikum ۚ `Alima Allāhu 'Annakum Satadhkurūnahunna Wa Lakin Lā Tuwā`idūhunna Siran 'Illā 'An Taqūlū Qawlāan Ma`rūfāan ۚ Wa Lā Ta`zimū `Uqdata An-Nikāĥi Ĥattá Yablugha Al-Kitābu 'Ajalahu ۚ Wa A`lamū 'Anna Allāha Ya`lamu Mā Fī 'Anfusikum Fāĥdharūhu ۚ Wa A`lamū 'Anna Allāha Ghafūrun Ĥalīmun 2-235 (இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்;. இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்;. அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். وَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْكُمْ فِيمَا‌ عَ‍رَّ‍ضْ‍‍تُمْ بِ‍‍هِ مِ‍‌‍نْ خِ‍‍طْ‍‍بَةِ ‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ ‌أَ‌وْ‌ ‌أَكْنَ‍‌‍ن‍‍تُمْ فِ‍‍ي ‌أَ‌ن‍‍فُسِكُمْ ۚ عَلِمَ ‌اللَّ‍‍هُ ‌أَنَّ‍‍كُمْ سَتَذْكُرُ‌ونَهُ‍‍نَّ ‌وَلَكِ‍‌‍نْ لاَ‌ تُوَ‌اعِدُ‌وهُ‍‍نَّ سِ‍‍ر‍ّ‍‌ا‌‌ ً‌ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ تَ‍‍قُ‍‍ولُو‌اقَ‍‍وْلا‌ ً‌ مَعْرُ‌وفا‌ ًۚ ‌وَلاَ‌ تَعْزِمُو‌ا‌ عُ‍‍قْ‍‍دَةَ ‌ال‍‍نِّ‍‍ك‍‍َ‍احِ حَتَّى‌ يَ‍‍بْ‍‍لُ‍‍غَ ‌الْكِت‍‍َ‍ابُ ‌أَجَلَ‍‍هُ ۚ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ يَعْلَمُ مَا‌ فِ‍‍ي ‌أَ‌ن‍‍فُسِكُمْ فَاحْذَ‌ر‍ُ‍‌وهُ ۚ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍ف‍‍ُ‍و‌رٌ‌ حَلِيمٌ
Lā Junāĥa `Alaykum 'In Ţallaqtumu An-Nisā' Mā Lam Tamassūhunna 'Aw Tafriđū Lahunna Farīđatan ۚ Wa Matti`ūhunna `Alá Al-Mūsi`i Qadaruhu Wa `Alá Al-Muqtiri Qadaruhu Matā`āan Bil-Ma`rūfi ۖ Ĥaqqāan `Alá Al-Muĥsinīna 2-236 பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும். لاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْكُمْ ‌إِ‌نْ طَ‍‍لَّ‍‍قْ‍‍تُمُ ‌ال‍‍نِس‍‍َ‍ا‌ء‌ مَا‌ لَمْ تَمَسُّوهُ‍‍نَّ ‌أَ‌وْ‌ تَفْ‍‍رِ‍‍ضُ‍‍و‌ا‌ لَهُ‍‍نَّ فَ‍‍رِي‍‍ضَ‍‍ة ًۚ ‌وَمَتِّعُوهُ‍‍نَّ عَلَى‌ ‌الْمُوسِعِ قَ‍‍دَ‌رُهُ ‌وَعَلَى‌ ‌الْمُ‍‍قْ‍‍تِرِ‌ قَ‍‍دَ‌رُهُ مَتَاعا‌ ً‌ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۖ حَ‍‍قّ‍‍اً‌ عَلَى‌ ‌الْمُحْسِنِينَ
Wa 'In Ţallaqtumūhunna Min Qabli 'An Tamassūhunna Wa Qad Farađtum Lahunna Farīđatan Fanişfu Mā Farađtum 'Illā 'An Ya`fūna 'Aw Ya`fuwa Al-Ladhī Biyadihi `Uqdatu An-Nikāĥi ۚ Wa 'An Ta`fū 'Aqrabu Lilttaqۚ Wa Lā Tansaw Al-Fađla Baynakum ۚ 'Inna Allāha Bimā Ta`malūna Başīrun 2-237 ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான். وَ‌إِ‌نْ طَ‍‍لَّ‍‍قْ‍‍تُمُوهُ‍‍نَّ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِ ‌أَ‌نْ تَمَسُّوهُ‍‍نَّ ‌وَ‍قَ‍‍دْ‌ فَ‍رَضْ‍‍تُمْ لَهُ‍‍نَّ فَ‍‍رِي‍‍ضَ‍‍ة‌ ً‌ فَنِ‍‍صْ‍‍فُ مَا‌ فَ‍رَضْ‍‍تُمْ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ يَعْف‍‍ُ‍ونَ ‌أَ‌وْ‌ يَعْفُوَ‌ ‌الَّذِي بِيَدِهِ عُ‍‍قْ‍‍دَةُ ‌ال‍‍نِّ‍‍ك‍‍َ‍احِ ۚ ‌وَ‌أَ‌نْ تَعْفُ‍‍و‌ا‌ ‌أَ‍قْ‍‍‍رَبُ لِلتَّ‍‍قْ‍‍وَ‌ى‌ ۚ ‌وَلاَ‌ تَ‍‌‍ن‍‍سَوْ‌ا‌ ‌الْفَ‍‍ضْ‍‍لَ بَيْنَكُمْ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ بَ‍‍صِ‍‍يرٌ
Ĥāfižū `Alá Aş-Şalawāti Wa Aş-Şalāati Al-Wusţá Wa Qūmū Lillāh Qānitīna 2-238 தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். حَافِ‍‍ظُ‍‍و‌ا‌ عَلَى‌ ‌ال‍‍صَّ‍‍لَو‍َ‍‌اتِ ‌وَ‌ال‍‍صَّ‍‍لاَةِ ‌الْوُسْ‍‍طَ‍‍ى‌ ‌وَ‍قُ‍‍ومُو‌الِلَّهِ قَ‍‍انِتِينَ
Fa'in Khiftum Farijālāan 'Aw Rukbānāan ۖ Fa'idhā 'Amintumdhkurū Allaha Kamā `Allamakum Mā Lam Takūnū Ta`lamūna 2-239 ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். فَإِ‌نْ خِ‍‍فْتُمْ فَ‍‍رِجَالاً‌ ‌أَ‌وْ‌ ‌رُكْبَانا‌‌ ًۖ فَإِ‌ذَ‌ا‌ ‌أَمِ‍‌‍ن‍‍تُمْ فَا‌ذْكُرُ‌و‌ا‌اللَّ‍‍هَ كَمَا‌ عَلَّمَكُمْ مَا‌ لَمْ تَكُونُو‌ا‌ تَعْلَمُونَ
Wa Al-Ladhīna Yutawaffawna Minkum Wa Yadharūna 'Azwājāan Waşīyatan Li'zwājihim Matā`āan 'Ilá Al-Ĥawli Ghayra 'Ikhrājin ۚ Fa'in Kharajna Falā Junāĥa `Alaykum Fī Mā Fa`alna Fī 'Anfusihinna Min Ma`rūfin Wa ۗ Allāhu `Azīzun Ĥakīmun 2-240 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُتَوَفَّ‍‍وْنَ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَيَذَ‌ر‍ُ‍‌ونَ ‌أَ‌زْ‌وَ‌اجا‌ ً‌ ‌وَ‍صِ‍‍يَّة ً‌ لِأ‌زْ‌وَ‌اجِهِمْ مَتَاعا‌‌ ً‌ ‌إِلَى‌ ‌الْحَ‍‍وْلِ غَ‍‍يْ‍رَ‌ ‌إِخْ‍رَ‍‌اج‌‍ٍۚ فَإِ‌نْ خَ‍رَجْ‍‍نَ فَلاَ‌ جُن‍‍َ‍احَ عَلَيْكُمْ فِي مَا‌ فَعَلْنَ فِ‍‍ي ‌أَ‌ن‍‍فُسِهِ‍‍نَّ مِ‍‌‍نْ مَعْر‍ُ‍‌وفٍۗ ‌وَ‌اللَّهُ عَز‍ِ‍ي‍‍زٌ‌ حَكِيمٌ
Wa Lilmuţallaqāti Matā`un Bil-Ma`rūfi ۖ Ĥaqqāan `Alá Al-Muttaqīna 2-241 மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும். وَلِلْمُ‍‍طَ‍‍لَّ‍‍قَ‍‍اتِ مَت‍‍َ‍اع‌‍ٌ‌ بِ‍الْمَعْر‍ُ‍‌وفِ ۖ حَ‍‍قّ‍‍اً‌ عَلَى‌ ‌الْمُتَّ‍‍قِ‍‍ينَ
Kadhālika Yubayyinu Allāhu Lakum 'Āyātihi La`allakum Ta`qilūna 2-242 நீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான். كَذَلِكَ يُبَيِّنُ ‌اللَّ‍‍هُ لَكُمْ ‌آيَاتِ‍‍هِ لَعَلَّكُمْ تَعْ‍‍قِ‍‍لُونَ
'Alam Tara 'Ilá Al-Ladhīna Kharajū Min Diyārihim Wa Hum 'Ulūfun Ĥadhara Al-Mawti Faqāla Lahumu Allāhu Mūtū Thumma 'Aĥyāhum ۚ 'Inna Allāha Ladhū Fađlin `Alá An-Nāsi Wa Lakinna 'Akthara An-Nāsi Lā Yashkurūna 2-243 (நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் "இறந்து விடுங்கள்" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. أَلَمْ تَ‍رَ‌ ‌إِلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ خَ‍رَجُو‌ا‌ مِ‍‌‍نْ ‌دِيَا‌رِهِمْ ‌وَهُمْ ‌أُل‍‍ُ‍وفٌ حَذَ‌‍رَ‌الْمَ‍‍وْتِ فَ‍‍قَ‍‍الَ لَهُمُ ‌اللَّ‍‍هُ مُوتُو‌ا‌ ثُ‍‍مَّ ‌أَحْيَاهُمْ ۚ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ لَذُ‌و‌ فَ‍‍ضْ‍‍لٍ عَلَى‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ ‌وَلَكِ‍‍نَّ ‌أَكْثَ‍رَ‌ال‍‍نّ‍‍َ‍اسِ لاَ‌ يَشْكُرُ‌ونَ
Wa Qātilū Fī Sabīli Allāhi Wa A`lamū 'Anna Allāha Samī`un `Alīmun 2-244 (முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். وَ‍قَ‍‍اتِلُو‌ا‌ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ سَم‍‍ِ‍ي‍‍عٌ عَلِيمٌ
Man Dhā Al-Ladhī Yuqriđu Allāha Qarđāan Ĥasanāan Fayuđā`ifahu Lahu~ 'Ađ`āfāan Kathīratan Wa ۚ Allāhu Yaqbiđu Wa Yabsuţu Wa 'Ilayhi Turja`ūna 2-245 (கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். مَ‍‌‍نْ ‌ذَ‌ا‌ ‌الَّذِي يُ‍‍قْ‍‍رِ‍‍ضُ ‌اللَّ‍‍هَ قَ‍‍رْ‍ض‍‍اً‌ حَسَنا‌‌ ً‌ فَيُ‍‍ضَ‍‍اعِفَ‍‍هُ لَهُ~ُ ‌أَ‍ضْ‍‍عَافا‌‌ ً‌ كَثِي‍رَة ًۚ ‌وَ‌اللَّهُ يَ‍‍قْ‍‍بِ‍‍ضُ ‌وَيَ‍‍بْ‍‍سُ‍‍طُ ‌وَ‌إِلَ‍‍يْ‍‍هِ تُرْجَعُونَ
'Alam Tara 'Ilá Al-Mala'i Min Banī 'Isrā'īla Min Ba`di Mūsá 'Idh Qālū Linabīyin Lahum Ab`ath Lanā Malikāan Nuqātil Fī Sabīli Allāhi ۖ Qāla Hal `Asaytum 'In Kutiba `Alaykumu Al-Qitālu 'Allā Tuqātilū ۖ Qālū Wa Mā Lanā 'Allā Nuqātila Fī Sabīli Allāhi Wa Qad 'Ukhrijnā Min Diyārinā Wa 'Abnā'inā ۖ Falammā Kutiba `Alayhimu Al-Qitālu Tawallaw 'Illā Qalīlāan Minhum Wa ۗ Allāhu `Alīmun Biž-Žālimīna 2-246 (நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்; "நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார்; அதற்கவர்கள்; "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான். أَلَمْ تَ‍رَ‌ ‌إِلَى‌ ‌الْمَلَإ‌ مِ‍‌‍نْ بَنِ‍‍ي ‌إِسْر‍َ‍‌ائ‍‍ِ‍ي‍‍لَ مِ‍‌‍نْ بَعْدِ‌ مُوسَ‍‍ى‌ ‌إِ‌ذْ‌ قَ‍‍الُو‌ا‌ لِنَبِيّ‍ٍ‌ لَهُمْ ‌ابْ‍‍عَثْ لَنَا‌ مَلِكا‌ ً‌ نُ‍‍قَ‍‍اتِلْ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ۖ قَ‍‍الَ هَلْ عَسَيْتُمْ ‌إِ‌نْ كُتِبَ عَلَيْكُمُ ‌الْ‍‍قِ‍‍ت‍‍َ‍الُ ‌أَلاَّ‌ تُ‍‍قَ‍‍اتِلُو‌اۖ قَ‍‍الُو‌ا‌ ‌وَمَا‌ لَنَ‍‍ا‌ ‌أَلاَّ‌ نُ‍‍قَ‍‍اتِلَ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌وَ‍قَ‍‍دْ‌ ‌أُ‍خْ‍‍رِجْ‍‍نَا‌ مِ‍‌‍نْ ‌دِيَا‌رِنَا‌ ‌وَ‌أَبْ‍‍ن‍‍َ‍ائِنَا‌ ۖ فَلَ‍‍مَّ‍‍ا‌ كُتِبَ عَلَيْهِمُ ‌الْ‍‍قِ‍‍ت‍‍َ‍الُ تَوَلَّوْ‌ا‌ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ۗ ‌وَ‌اللَّهُ عَل‍‍ِ‍ي‍‍م‌‍ٌ‌ بِ‍ال‍‍ظَّ‍‍الِمِينَ
Wa Qāla Lahum Nabīyuhum 'Inna Allāha Qad Ba`atha Lakum Ţālūta Malikāan ۚ Qālū 'Anná Yakūnu Lahu Al-Mulku `Alaynā Wa Naĥnu 'Aĥaqqu Bil-Mulki Minhu Wa Lam Yu'uta Sa`atan Mina Al-Māli ۚ Qāla 'Inna Allāha Aşţafāhu `Alaykum Wa Zādahu Basţatan Al-`Ilmi Wa Al-Jismi Wa ۖ Allāhu Yu'utī Mulkahu Man Yashā'u Wa ۚ Allāhu Wāsi`un `Alīmun 2-247 அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார். وَ‍قَ‍‍الَ لَهُمْ نَبِيُّهُمْ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ قَ‍‍دْ‌ بَعَثَ لَكُمْ طَ‍‍ال‍‍ُ‍وتَ مَلِكا‌‌ ًۚ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌أَنَّ‍‍ى‌ يَك‍‍ُ‍ونُ لَهُ ‌الْمُلْكُ عَلَيْنَا‌ ‌وَنَحْنُ ‌أَحَ‍‍قُّ بِ‍الْمُلْكِ مِ‍‌‍نْ‍‍هُ ‌وَلَمْ يُؤْتَ سَعَة ً‌ مِنَ ‌الْم‍‍َ‍الِ ۚ قَ‍‍الَ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ ‌اصْ‍‍طَ‍‍ف‍‍َ‍اهُ عَلَيْكُمْ ‌وَ‌زَ‌ا‌دَهُ بَسْ‍‍طَ‍‍ة‌ ً‌ فِي ‌الْعِلْمِ ‌وَ‌الْجِسْمِ ۖ ‌وَ‌اللَّهُ يُؤْتِي مُلْكَ‍‍هُ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَ‌اللَّهُ ‌وَ‌اسِعٌ عَلِيمٌ
Wa Qāla Lahum Nabīyuhum 'Inna 'Āyata Mulkihi~ 'An Ya'tiyakumu At-Tābūtu Fīhi Sakīnatun Min Rabbikum Wa Baqīyatun Mimmā Taraka 'Ālu Mūsá Wa 'Ālu Hārūna Taĥmiluhu Al-Malā'ikatu ۚ 'Inna Fī Dhālika La'āyatan Lakum 'In Kuntum Mu'uminīna 2-248 இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது" என்று கூறினார். وَ‍قَ‍‍الَ لَهُمْ نَبِيُّهُمْ ‌إِنَّ ‌آيَةَ مُلْكِهِ ‌أَ‌نْ يَأْتِيَكُمُ ‌ال‍‍تَّاب‍‍ُ‍وتُ ف‍‍ِ‍ي‍‍هِ سَكِينَةٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّكُمْ ‌وَبَ‍‍قِ‍‍يَّةٌ‌ مِ‍‍مَّ‍‍ا‌ تَ‍رَكَ ‌آلُ مُوسَى‌ ‌وَ‌آلُ هَا‌ر‍ُ‍‌ونَ تَحْمِلُهُ ‌الْمَلاَئِكَةُ ۚ ‌إِنَّ فِي ‌ذَلِكَ لَآيَة ً‌ لَكُمْ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مُؤْمِنِينَ
Falammā Faşala Ţālūtu Bil-Junūdi Qāla 'Inna Allāha Mubtalīkum Binaharin Faman Shariba Minhu Falaysa Minnī Wa Man Lam Yaţ`amhu Fa'innahu Minnī 'Illā Mani Aghtarafa Ghurfatan Biyadihi ۚ Fasharibū Minhu 'Illā Qalīlāan Minhum ۚ Falammā Jāwazahu Huwa Wa Al-Ladhīna 'Āmanū Ma`ahu Qālū Lā Ţāqata Lanā Al-Yawma Bijālūta Wa Junūdihi ۚ Qāla Al-Ladhīna Yažunnūna 'Annahum Mulāqū Allahi Kam Min Fi'atin Qalīlatin Ghalabat Fi'atan Kathīratan Bi'idhni Allāhi Wa ۗ Allāhu Ma`a Aş-Şābirīna 2-249 பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்;. பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள். فَلَ‍‍مَّ‍‍ا‌ فَ‍‍صَ‍‍لَ طَ‍‍ال‍‍ُ‍وتُ بِ‍الْجُن‍‍ُ‍و‌دِ‌ قَ‍‍الَ ‌إِنَّ ‌اللَّ‍‍هَ مُ‍‍بْ‍‍تَلِيكُمْ بِنَهَر‌‌ٍ‌ فَمَ‍‌‍نْ شَ‍‍رِبَ مِ‍‌‍نْ‍‍هُ فَلَ‍‍يْ‍‍سَ مِ‍‍نِّ‍‍ي ‌وَمَ‍‌‍نْ لَمْ يَ‍‍طْ‍‍عَمْهُ فَإِنَّ‍‍هُ مِ‍‍نِّ‍‍ي ‌إِلاَّ‌ مَنِ ‌اغْ‍‍تَ‍رَفَ غُ‍‍رْفَة ً‌ بِيَدِهِ ۚ فَشَ‍‍رِبُو‌ا‌ مِ‍‌‍نْ‍‍هُ ‌إِلاَّ‌ قَ‍‍لِيلا‌ ً‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ۚ فَلَ‍‍مَّ‍‍ا‌ جَا‌وَ‌زَهُ هُوَ‌ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ مَعَ‍‍هُ قَ‍‍الُو‌ا‌ لاَ‌ طَ‍‍اقَ‍‍ةَ لَنَا‌ ‌الْيَ‍‍وْمَ بِجَال‍‍ُ‍وتَ ‌وَجُنُو‌دِهِ ۚ قَ‍‍الَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يَ‍‍ظُ‍‍نّ‍‍ُ‍ونَ ‌أَنَّ‍‍هُمْ مُلاَ‍قُ‍‍و‌ ‌اللَّهِ كَمْ مِ‍‌‍نْ فِئَة‌‍ٍقَ‍‍لِيلَةٍ غَ‍‍لَبَتْ فِئَة‌ ً‌ كَثِي‍رَة ً‌ بِإِ‌ذْنِ ‌اللَّ‍‍هِ ۗ ‌وَ‌اللَّهُ مَعَ ‌ال‍‍صَّ‍‍ابِ‍‍رِينَ
Wa Lammā Barazū Lijālūta Wa Junūdihi Qālū Rabbanā 'Afrigh `Alaynā Şaban Wa Thabbit 'Aqdāmanā Wa Anşurnā `Alá Al-Qawmi Al-Kāfirīna 2-250 மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர். وَلَ‍‍مَّ‍‍ا‌ بَ‍رَ‌زُ‌و‌ا‌ لِجَال‍‍ُ‍وتَ ‌وَجُنُو‌دِهِ قَ‍‍الُو‌ا‌ ‌‍رَبَّنَ‍‍ا‌ ‌أَفْ‍‍رِ‍‍غْ عَلَيْنَا‌ صَ‍‍بْ‍‍ر‌ا‌ ً‌ ‌وَثَبِّتْ ‌أَ‍قْ‍‍دَ‌امَنَا‌ ‌وَ‌انْ‍‍‍‍صُ‍‍رْنَا‌ عَلَى‌ ‌الْ‍‍قَ‍‍وْمِ ‌الْكَافِ‍‍رِينَ
Fahazamūhum Bi'idhni Allāhi Wa Qatala Dāwūdu Jālūta Wa 'Ātāhu Allāhu Al-Mulka Wa Al-Ĥikmata Wa `Allamahu Mimmā Yashā'u ۗ Wa Lawlā Daf`u Allāhi An-Nāsa Ba`đahum Biba`đin Lafasadati Al-'Arđu Wa Lakinna Allāha Dhū Fađlin `Alá Al-`Ālamīna 2-251 இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக் கொன்றார்;. அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான். فَهَزَمُوهُمْ بِإِ‌ذْنِ ‌اللَّ‍‍هِ ‌وَ‍قَ‍‍تَلَ ‌دَ‌ا‌و‍ُ‍‌و‌دُ‌ جَال‍‍ُ‍وتَ ‌وَ‌آت‍‍َ‍اهُ ‌اللَّ‍‍هُ ‌الْمُلْكَ ‌وَ‌الْحِكْمَةَ ‌وَعَلَّمَ‍‍هُ مِ‍‍مَّ‍‍ا‌ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۗ ‌وَلَوْلاَ‌ ‌دَفْعُ ‌اللَّ‍‍هِ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ بَعْ‍‍ضَ‍‍هُمْ بِبَعْ‍‍ض‍‍ٍ‌ لَفَسَدَتِ ‌الأَ‌رْ‍ضُ ‌وَلَكِ‍‍نَّ ‌اللَّ‍‍هَ ‌ذُ‌و‌ فَ‍‍ضْ‍‍لٍ عَلَى‌ ‌الْعَالَمِينَ
Tilka 'Āyātu Allāhi Natlūhā `Alayka Bil-Ĥaqqi ۚ Wa 'Innaka Lamina Al-Mursalīna 2-252 (நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம். تِلْكَ ‌آي‍‍َ‍اتُ ‌اللَّ‍‍هِ نَتْلُوهَا‌ عَلَ‍‍يْ‍‍كَ بِ‍الْحَ‍‍قِّ ۚ ‌وَ‌إِنَّ‍‍كَ لَمِنَ ‌الْمُرْسَلِينَ
Tilka Ar-Rusulu Fađđalnā Ba`đahum `Alá Ba`đin ۘ Minhum Man Kallama Allāhu ۖ Wa Rafa`a Ba`đahum Darajātin ۚ Wa 'Ātaynā `Īsá Abna Maryama Al-Bayyināti Wa 'Ayyadnāhu Birūĥi Al-Qudusi ۗ Wa Law Shā'a Allāhu Mā Aqtatala Al-Ladhīna Min Ba`dihim Min Ba`di Mā Jā'at/humu Al-Bayyinātu Wa Lakini Akhtalafū Faminhum Man 'Āmana Wa Minhum Man Kafara ۚ Wa Law Shā'a Allāhu Mā Aqtatalū Wa Lakinna Allāha Yaf`alu Mā Yurīdu 2-253 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். تِلْكَ ‌ال‍‍رُّسُلُ فَ‍‍ضَّ‍‍لْنَا‌ بَعْ‍‍ضَ‍‍هُمْ عَلَى‌ بَعْ‍‍ضٍۘ مِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‌‍نْ كَلَّمَ ‌اللَّ‍‍هُ ۖ ‌وَ‌‍رَفَعَ بَعْ‍‍ضَ‍‍هُمْ ‌دَ‌‍رَج‍‍َ‍اتٍۚ ‌وَ‌آتَيْنَا‌ عِيسَى‌ ‌ابْ‍‍نَ مَرْيَمَ ‌الْبَيِّن‍‍َ‍اتِ ‌وَ‌أَيَّ‍‍دْن‍‍َ‍اهُ بِر‍ُ‍‌وحِ ‌الْ‍‍قُ‍‍دُسِ ۗ ‌وَلَوْ‌ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ مَا‌ ‌ا‍قْ‍‍تَتَلَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ بَعْدِهِمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ ج‍‍َ‍ا‌ءَتْهُمُ ‌الْبَيِّن‍‍َ‍اتُ ‌وَلَكِنِ ‌اخْ‍‍تَلَفُو‌ا‌ فَمِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‌‍نْ ‌آمَنَ ‌وَمِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‌‍نْ كَفَ‍رَۚ ‌وَلَوْ‌ ش‍‍َ‍ا‌ءَ‌ ‌اللَّ‍‍هُ مَا‌ ‌ا‍قْ‍‍تَتَلُو‌ا‌ ‌وَلَكِ‍‍نَّ ‌اللَّ‍‍هَ يَفْعَلُ مَا‌ يُ‍‍رِيدُ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Anfiqū Mimmā Razaqnākum Min Qabli 'An Ya'tiya Yawmun Lā Bay`un Fīhi Wa Lā Khullatun Wa Lā Shafā`atun Wa ۗ Al-Kāfirūna Humu Až-Žālimūna 2-254 நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌أَ‌ن‍‍فِ‍‍قُ‍‍و‌ا‌ مِ‍‍مَّ‍‍ا‌ ‌‍رَ‌زَ‍قْ‍‍نَاكُمْ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِ ‌أَ‌نْ يَأْتِيَ يَ‍‍وْم ٌ‌ لاَ‌ بَ‍‍يْ‍‍ع‌‍ٌ‌ ف‍‍ِ‍ي‍‍هِ ‌وَلاَ‌ خُ‍‍لَّةٌ‌ ‌وَلاَ‌ شَفَاعَةٌۗ ‌وَ‌الْكَافِر‍ُ‍‌ونَ هُمُ ‌ال‍‍ظَّ‍‍الِمُونَ
Al-Lahu Lā 'Ilāha 'Illā Huwa Al-Ĥayyu Al-Qayyūmu ۚ Lā Ta'khudhuhu Sinatun Wa Lā Nawmun ۚ Lahu Mā Fī As-Samāwāti Wa Mā Fī Al-'Arđi ۗ Man Dhā Al-Ladhī Yashfa`u `Indahu~ 'Illā Bi'idhnihi ۚ Ya`lamu Mā Bayna 'Aydīhim Wa Mā Khalfahum ۖ Wa Lā Yuĥīţūna Bishay'in Min `Ilmihi~ 'Illā Bimā Shā'a ۚ Wasi`a Kursīyuhu As-Samāwāti Wa Al-'Arđa ۖ Wa Lā Ya'ūduhu Ĥifžuhumā ۚ Wa Huwa Al-`Alīyu Al-`Ažīmu 2-255 அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். اللَّهُ لاَ‌ ‌إِلَهَ ‌إِلاَّ‌ هُوَ‌ ‌الْحَيُّ ‌الْ‍‍قَ‍‍يّ‍‍ُ‍ومُ ۚ لاَ‌ تَأْ‍خُ‍‍ذُهُ سِنَةٌ‌ ‌وَلاَ‌ نَ‍‍وْم ٌۚ لَ‍‍هُ مَا‌ فِي ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَمَا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ ۗ مَ‍‌‍نْ ‌ذَ‌ا‌ ‌الَّذِي يَشْفَعُ عِ‍‌‍نْ‍‍دَهُ~ُ ‌إِلاَّ‌ بِإِ‌ذْنِ‍‍هِ ۚ يَعْلَمُ مَا‌ بَ‍‍يْ‍‍نَ ‌أَيْدِيهِمْ ‌وَمَا‌ خَ‍‍لْفَهُمْ ۖ ‌وَلاَ‌ يُحِي‍‍طُ‍‍ونَ بِشَ‍‍يْء‌ٍ‌ مِ‍‌‍نْ عِلْمِهِ ‌إِلاَّ‌ بِمَا‌ ش‍‍َ‍ا‌ءَ‌ ۚ ‌وَسِعَ كُرْسِيُّهُ ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَ‌الأَ‌رْ‍ضَ ۖ ‌وَلاَ‌ يَئ‍‍ُ‍‍و‌دُهُ حِفْ‍‍ظُ‍‍هُمَا‌ ۚ ‌وَهُوَ‌ ‌الْعَلِيُّ ‌الْعَ‍‍ظِ‍‍يمُ
Lā 'Ikrāha Fī Ad-Dīni ۖ Qad Tabayyana Ar-Rushdu Mina Al-Ghayyi ۚ Faman Yakfur Biţ-Ţāghūti Wa Yu'umin Billāhi Faqadi Astamsaka Bil-`Urwati Al-Wuthqá Lā Anfişāma Lahā Wa ۗ Allāhu Samī`un `Alīmun 2-256 (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். لاَ‌ ‌إِكْ‍رَ‍‌اهَ فِي ‌ال‍‍دّ‍ِ‍ي‍‍نِ ۖ قَ‍‍دْ‌ تَبَيَّنَ ‌ال‍‍رُّشْدُ‌ مِنَ ‌ال‍‍غَ‍‍يِّ ۚ فَمَ‍‌‍نْ يَكْفُرْ‌ بِ‍ال‍‍طَّ‍‍اغُ‍‍وتِ ‌وَيُؤْمِ‍‌‍نْ بِ‍اللَّ‍‍هِ فَ‍‍قَ‍‍دِ‌ ‌اسْتَمْسَكَ بِ‍الْعُرْ‌وَةِ ‌الْوُثْ‍‍قَ‍‍ى‌ لاَ‌ ‌ان‍‍فِ‍‍صَ‍‍امَ لَهَا‌ ۗ ‌وَ‌اللَّهُ سَم‍‍ِ‍ي‍‍عٌ عَلِيمٌ
Al-Lahu Wa Līyu Al-Ladhīna 'Āmanū Yukhrijuhum Mina Až-Žulumāti 'Ilá An-Nūr Wa ۖ Al-Ladhīna Kafarū 'Awliyā'uuhumu Aţ-Ţāghūtu Yukhrijūnahum Mina An-Nūr 'Ilá Až-Žulumāti ۗ 'Ūlā'ika 'Aşĥābu An-Nāri ۖ Hum Fīhā Khālidūna 2-257 அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். اللَّهُ ‌وَلِيُّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ يُ‍‍خْ‍‍رِجُهُمْ مِنَ ‌ال‍‍ظُّ‍‍لُم‍‍َ‍اتِ ‌إِلَى‌ ‌ال‍‍نُّ‍‍و‌ر‌ ۖ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌أَ‌وْلِي‍‍َ‍ا‌ؤُهُمُ ‌ال‍‍طَّ‍‍اغُ‍‍وتُ يُ‍‍خْ‍‍رِجُونَهُمْ مِنَ ‌ال‍‍نُّ‍‍و‌ر‌ ‌إِلَى‌ ‌ال‍‍ظُّ‍‍لُم‍‍َ‍اتِ ۗ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
'Alam Tara 'Ilá Al-Ladhī Ĥājja 'Ibhīma Fī Rabbihi~ 'An 'Ātāhu Allāhu Al-Mulka 'Idh Qāla 'Ibhīmu Rabbī Al-Ladhī Yuĥyī Wa Yumītu Qāla 'Anā 'Uĥyī Wa 'Umītu ۖ Qāla 'Ibhīmu Fa'inna Allāha Ya'tī Bish-Shamsi Mina Al-Mashriqi Fa'ti Bihā Mina Al-Maghribi Fabuhita Al-Ladhī Kafara Wa ۗ Allāhu Lā Yahdī Al-Qawma Až-Žālimīna 2-258 அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. أَلَمْ تَ‍رَ‌ ‌إِلَى‌ ‌الَّذِي ح‍‍َ‍اجَّ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مَ فِي ‌‍رَبِّهِ ‌أَ‌نْ ‌آت‍‍َ‍اهُ ‌اللَّ‍‍هُ ‌الْمُلْكَ ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مُ ‌‍رَبِّي ‌الَّذِي يُحْيِي ‌وَيُم‍‍ِ‍ي‍‍تُ قَ‍‍الَ ‌أَنَ‍‍ا‌ ‌أُحْيِي ‌وَ‌أُم‍‍ِ‍ي‍‍تُ ۖ قَ‍‍الَ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مُ فَإِنَّ ‌اللَّ‍‍هَ يَأْتِي بِ‍ال‍‍شَّمْسِ مِنَ ‌الْمَشْ‍‍رِ‍‍قِ فَأْتِ بِهَا‌ مِنَ ‌الْمَ‍‍غْ‍‍رِبِ فَبُهِتَ ‌الَّذِي كَفَ‍رَۗ ‌وَ‌اللَّهُ لاَ‌ يَهْدِي ‌الْ‍‍قَ‍‍وْمَ ‌ال‍‍ظَّ‍‍الِمِينَ
'Aw Kālladhī Marra `Alá Qaryatin Wa Hiya Khāwiyatun `Alá `Urūshihā Qāla 'Anná Yuĥyī Hadhihi Allāhu Ba`da Mawtihā ۖ Fa'amātahu Allāhu Miā'ata `Āmin Thumma Ba`athahu ۖ Qāla Kam Labithta ۖ Qāla Labithtu Yawmāan 'Aw Ba`đa Yawmin ۖ Qāla Bal Labithta Miā'ata `Āminnžur 'Ilá Ţa`āmika Wa Shabika Lam Yatasannah ۖ Wa Anžur 'Ilá Ĥimārika Wa Linaj`alaka 'Āyatan Lilnnāsi ۖ Wa Anžur 'Ilá Al-`Ižāmi Kayfa Nunshizuhā Thumma Naksūhā Laĥmāan ۚ Falammā Tabayyana Lahu Qāla 'A`lamu 'Anna Allāha `Alá Kulli Shay'in Qadīrun 2-259 அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) "இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?" என்று (வியந்து) கூறினார்;. ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, "எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்" என்று கூறினார். أَ‌وْ‌ كَالَّذِي مَ‍رَّ‌ عَلَى‌ قَ‍‍رْيَةٍ‌ ‌وَهِيَ خَ‍‍ا‌وِيَةٌ عَلَى‌ عُرُ‌وشِهَا‌ قَ‍‍الَ ‌أَنَّ‍‍ى‌ يُحْيِي هَذِهِ ‌اللَّ‍‍هُ بَعْدَ‌ مَوْتِهَا‌ ۖ فَأَمَاتَهُ ‌اللَّ‍‍هُ مِائَةَ ع‍‍َ‍ام‌‍ٍ‌ ثُ‍‍مَّ بَعَثَ‍‍هُ ۖ قَ‍‍الَ كَمْ لَبِثْتَ ۖ قَ‍‍الَ لَبِثْتُ يَوْماً‌ ‌أَ‌وْ‌ بَعْ‍‍ضَ يَ‍‍وْم‌‍ٍۖ قَ‍‍الَ بَلْ لَبِثْتَ مِائَةَ ع‍‍َ‍ام‌‍ٍ‌ فَا‌ن‍‍ظُ‍‍رْ‌ ‌إِلَى‌ طَ‍‍عَامِكَ ‌وَشَ‍رَ‌ابِكَ لَمْ يَتَسَ‍‍نَّ‍‍هْ ۖ ‌وَ‌ان‍‍ظُ‍‍رْ‌ ‌إِلَى‌ حِمَا‌رِكَ ‌وَلِنَ‍‍جْ‍‍عَلَكَ ‌آيَة ً‌ لِل‍‍نّ‍‍َ‍اسِ ۖ ‌وَ‌ان‍‍ظُ‍‍رْ‌ ‌إِلَى‌ ‌الْعِ‍‍ظَ‍‍امِ كَ‍‍يْ‍‍فَ نُ‍‌‍ن‍‍شِزُهَا‌ ثُ‍‍مَّ نَكْسُوهَا‌ لَحْما‌‌ ًۚ فَلَ‍‍مَّ‍‍ا‌ تَبَيَّنَ لَ‍‍هُ قَ‍‍الَ ‌أَعْلَمُ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
Wa 'Idh Qāla 'Ibhīmu Rabbi 'Arinī Kayfa Tuĥyī Al-Mawtá ۖ Qāla 'Awalam Tu'umin ۖ Qāla Balá Wa Lakin Liyaţma'inna Qalbī ۖ Qāla Fakhudh 'Arba`atan Mina Aţ-Ţayri Faşurhunna 'Ilayka Thumma Aj`al `Alá Kulli Jabalin Minhunna Juz'āan Thumma Ad`uhunna Ya'tīnaka Sa`yāan ۚ Wa A`lam 'Anna Allāha `Azīzun Ĥakīmun 2-260 இன்னும், இப்ராஹீம்; "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா?" எனக் கேட்டான்; "மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)" என்று கூறினார்; "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான். وَ‌إِ‌ذْ‌ قَ‍‍الَ ‌إِبْ‍‍‍رَ‌اه‍‍ِ‍ي‍‍مُ ‌‍رَبِّ ‌أَ‌رِنِي كَ‍‍يْ‍‍فَ تُحْيِي ‌الْمَوْتَى‌ ۖ قَ‍‍الَ ‌أَ‌وَلَمْ تُؤْمِ‍‌‍نْ ۖ قَ‍‍الَ بَلَى‌ ‌وَلَكِ‍‌‍نْ لِيَ‍‍طْ‍‍مَئِ‍‍نَّ قَ‍‍لْبِي ۖ قَ‍‍الَ فَ‍‍خُ‍‍ذْ‌ ‌أَ‌رْبَعَة ً‌ مِنَ ‌ال‍‍طَّ‍‍يْ‍‍ر‍ِ‍‌ فَ‍‍صُ‍‍رْهُ‍‍نَّ ‌إِلَ‍‍يْ‍‍كَ ثُ‍‍مَّ ‌اجْ‍‍عَلْ عَلَى‌ كُلِّ جَبَلٍ‌ مِ‍‌‍نْ‍‍هُ‍‍نَّ جُزْ‌ء‌ا‌‌ ً‌ ثُ‍‍مَّ ‌ا‌دْعُهُ‍‍نَّ يَأْتِينَكَ سَعْيا‌ ًۚ ‌وَ‌اعْلَمْ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ عَز‍ِ‍ي‍‍زٌ‌ حَكِيمٌ
Mathalu Al-Ladhīna Yunfiqūna 'Amwālahum Fī Sabīli Allāhi Kamathali Ĥabbatin 'Anbatat Sab`a Sanābila Fī Kulli Sunbulatin Miā'atu Ĥabbatin Wa ۗ Allāhu Yuđā`ifu Liman Yashā'u Wa ۗ Allāhu Wāsi`un `Alīmun 2-261 அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். مَثَلُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ ‌أَمْوَ‌الَهُمْ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ كَمَثَلِ حَبَّةٍ ‌أَ‌نْ‍‍بَتَتْ سَ‍‍بْ‍‍عَ سَنَابِلَ فِي كُلِّ سُ‍‌‍نْ‍‍بُلَةٍ‌ مِائَةُ حَبَّةٍۗ ‌وَ‌اللَّهُ يُ‍‍ضَ‍‍اعِفُ لِمَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۗ ‌وَ‌اللَّهُ ‌وَ‌اسِعٌ عَلِيمٌ
Al-Ladhīna Yunfiqūna 'Amwālahum Fī Sabīli Allāhi Thumma Lā Yutbi`ūna Mā 'Anfaqū Mannāan Wa Lā 'Adhan ۙ Lahum 'Ajruhum `Inda Rabbihim Wa Lā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 2-262 அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ ‌أَمْوَ‌الَهُمْ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ثُ‍‍مَّ لاَ‌ يُتْبِع‍‍ُ‍ونَ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍فَ‍‍قُ‍‍و‌ا‌ مَ‍‍نّ‍‍ا‌ ً‌ ‌وَلاَ‌ ‌أَ‌ذ‌ى‌ ًۙ لَهُمْ ‌أَجْ‍‍رُهُمْ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌‍رَبِّهِمْ ‌وَلاَ‌ خَ‍‍وْفٌ عَلَيْهِمْ ‌وَلاَ‌ هُمْ يَحْزَنُونَ
Qawlun Ma`rūfun Wa Maghfiratun Khayrun Min Şadaqatin Yatba`uhā 'Adhan Wa ۗ Allāhu Ghanīyun Ĥalīmun 2-263 கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன். قَ‍‍وْلٌ‌ مَعْر‍ُ‍‌وفٌ‌ ‌وَمَ‍‍غْ‍‍فِ‍رَةٌ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ مِ‍‌‍نْ صَ‍‍دَ‍قَ‍‍ةٍ‌ يَتْبَعُهَ‍‍ا‌ ‌أَ‌ذ‌ى‌ ًۗ ‌وَ‌اللَّهُ غَ‍‍نِيٌّ حَلِيمٌ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Lā Tubţilū Şadaqātikum Bil-Manni Wa Al-'Adhá Kālladhī Yunfiqu Mālahu Ri'ā'a An-Nāsi Wa Lā Yu'uminu Billāhi Wa Al-Yawmi Al-'Ākhiri ۖ Famathaluhu Kamathali Şafwānin `Alayhi Turābun Fa'aşābahu Wa Abilun Fatarakahu Şaldāan ۖ Lā Yaqdirūna `Alá Shay'in Mimmā Kasabū Wa ۗ Allāhu Lā Yahdī Al-Qawma Al-Kāfirīna 2-264 நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لاَ‌ تُ‍‍بْ‍‍‍‍طِ‍‍لُو‌اصَ‍‍دَ‍قَ‍‍اتِكُمْ بِ‍الْمَ‍‍نِّ ‌وَ‌الأَ‌ذَ‌ى‌ كَالَّذِي يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ مَالَ‍‍هُ ‌رِئ‍‍َ‍ا‌ءَ‌ ‌ال‍‍نّ‍‍َ‍اسِ ‌وَلاَ‌ يُؤْمِنُ بِ‍اللَّ‍‍هِ ‌وَ‌الْيَ‍‍وْمِ ‌الآ‍‍خِ‍‍رِ‌ ۖ فَمَثَلُ‍‍هُ كَمَثَلِ صَ‍‍فْو‍َ‍‌انٍ عَلَ‍‍يْ‍‍هِ تُ‍رَ‍‌اب‌‍ٌ‌ فَأَ‍صَ‍‍ابَ‍‍هُ ‌وَ‌ابِل‌‍ٌ‌ فَتَ‍رَكَ‍‍هُ صَ‍‍لْد‌ا‌ ًۖ لاَ‌ يَ‍‍قْ‍‍دِ‌ر‍ُ‍‌ونَ عَلَى‌ شَ‍‍يْء‌ٍ‌ مِ‍‍مَّ‍‍ا‌ كَسَبُو‌اۗ ‌وَ‌اللَّهُ لاَ‌ يَهْدِي ‌الْ‍‍قَ‍‍وْمَ ‌الْكَافِ‍‍رِينَ
Wa Mathalu Al-Ladhīna Yunfiqūna 'Amwālahumu Abtighā'a Marđāati Allāhi Wa Tathbītāan Min 'Anfusihim Kamathali Jannatin Birabwatin 'Aşābahā Wa Abilun Fa'ātat 'Ukulahā Đi`fayni Fa'in Lam Yuşibhā Wa Abilun Faţallun Wa ۗ Allāhu Bimā Ta`malūna Başīrun 2-265 அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். وَمَثَلُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ ‌أَمْوَ‌الَهُمُ ‌ابْ‍‍تِ‍‍غَ‍‍ا‌ءَ‌ مَرْ‍ضَ‍‍اةِ ‌اللَّ‍‍هِ ‌وَتَثْبِيتا‌ ً‌ مِ‍‌‍نْ ‌أَ‌نْ‍‍فُسِهِمْ كَمَثَلِ جَ‍‍نَّ‍‍ة ٍ‌ بِ‍رَبْ‍‍وَةٍ ‌أَ‍صَ‍‍ابَهَا‌ ‌وَ‌ابِل‌‍ٌ‌ فَآتَتْ ‌أُكُلَهَا‌ ضِ‍‍عْفَ‍‍يْ‍‍نِ فَإِ‌نْ لَمْ يُ‍‍صِ‍‍بْ‍‍هَا‌ ‌وَ‌ابِل‌‍ٌ‌ فَ‍‍طَ‍‍لٌّۗ ‌وَ‌اللَّهُ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ بَ‍‍صِ‍‍يرٌ
'Ayawaddu 'Aĥadukum 'An Takūna Lahu Jannatun Min Nakhīlin Wa 'A`nābin Tajrī Min Taĥtihā Al-'Anhāru Lahu Fīhā Min Kulli Ath-Thamarāti Wa 'Aşābahu Al-Kibaru Wa Lahu Dhurrīyatun Đu`afā'u Fa'aşābahā 'I`şārun Fīhi Nārun Fāĥtaraqat ۗ Kadhālika Yubayyinu Allāhu Lakumu Al-'Āyāti La`allakum Tatafakkarūna 2-266 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். أَيَوَ‌دُّ‌ ‌أَحَدُكُمْ ‌أَ‌نْ تَك‍‍ُ‍ونَ لَ‍‍هُ جَ‍‍نَّ‍‍ةٌ‌ مِ‍‌‍نْ نَ‍‍خِ‍‍ي‍‍لٍ‌ ‌وَ‌أَعْن‍‍َ‍اب‌‍ٍ‌ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ لَ‍‍هُ فِيهَا‌ مِ‍‌‍نْ كُلِّ ‌ال‍‍ثَّمَ‍رَ‍‌اتِ ‌وَ‌أَ‍صَ‍‍ابَهُ ‌الْكِبَرُ‌ ‌وَلَ‍‍هُ ‌ذُ‌رِّيَّة‌‍ٌضُ‍‍عَف‍‍َ‍ا‌ءُ‌ فَأَ‍صَ‍‍ابَهَ‍‍ا‌ ‌إِعْ‍‍صَ‍‍ا‌ر‌‌ٌ‌ ف‍‍ِ‍ي‍‍هِ ن‍‍َ‍ا‌ر‌‌ٌ‌ فَاحْتَ‍رَقَ‍‍تْ ۗ كَذَلِكَ يُبَيِّنُ ‌اللَّ‍‍هُ لَكُمُ ‌الآي‍‍َ‍اتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُ‌ونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Anfiqū Min Ţayyibāti Mā Kasabtum Wa Mimmā 'Akhrajnā Lakum Mina Al-'Arđi ۖ Wa Lā Tayammamū Al-Khabītha Minhu Tunfiqūna Wa Lastum Bi'ākhidhīhi 'Illā 'An Tughmiđū Fīhi ۚ Wa A`lamū 'Anna Allāha Ghanīyun Ĥamīdun 2-267 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌أَ‌ن‍‍فِ‍‍قُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ طَ‍‍يِّب‍‍َ‍اتِ مَا‌ كَسَ‍‍بْ‍‍تُمْ ‌وَمِ‍‍مَّ‍‍ا‌ ‌أَ‍خْ‍رَجْ‍‍نَا‌ لَكُمْ مِنَ ‌الأَ‌رْ‍ضِ ۖ ‌وَلاَ‌ تَيَ‍‍مَّ‍‍مُو‌ا‌الْ‍‍خَ‍‍ب‍‍ِ‍ي‍‍ثَ مِ‍‌‍نْ‍‍هُ تُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ ‌وَلَسْتُمْ بِآ‍‍خِ‍‍ذ‍ِ‍ي‍‍هِ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ تُ‍‍غْ‍‍مِ‍‍ضُ‍‍و‌ا‌ ف‍‍ِ‍ي‍‍هِ ۚ ‌وَ‌اعْلَمُ‍‍و‌ا‌ ‌أَنَّ ‌اللَّ‍‍هَ غَ‍‍نِيٌّ حَمِيدٌ
Ash-Shayţānu Ya`idukumu Al-Faqra Wa Ya'murukum Bil-Faĥshā'i Wa ۖ Allāhu Ya`idukum Maghfiratan Minhu Wa Fađlāan Wa ۗ Allāhu Wāsi`un `Alīmun 2-268 (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;. ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். ال‍‍شَّيْ‍‍طَ‍‍انُ يَعِدُكُمُ ‌الْفَ‍‍قْ‍‍‍رَ‌ ‌وَيَأْمُرُكُمْ بِ‍الْفَحْش‍‍َ‍ا‌ءِ‌ ۖ ‌وَ‌اللَّهُ يَعِدُكُمْ مَ‍‍غْ‍‍فِ‍رَة ً‌ مِ‍‌‍نْ‍‍هُ ‌وَفَ‍‍ضْ‍‍لا‌ ًۗ ‌وَ‌اللَّهُ ‌وَ‌اسِعٌ عَلِيمٌ
Yu'utī Al-Ĥikmata Man Yashā'u ۚ Wa Man Yu'uta Al-Ĥikmata Faqad 'Ūtiya Khayan Kathīrāan ۗ Wa Mā Yadhdhakkaru 'Illā 'Ūlū Al-'Albābi 2-269 தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. يُؤْتِي ‌الْحِكْمَةَ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۚ ‌وَمَ‍‌‍نْ يُؤْتَ ‌الْحِكْمَةَ فَ‍‍قَ‍‍دْ‌ ‌أ‍ُ‍‌وتِيَ خَ‍‍يْر‌ا‌‌ ً‌ كَثِي‍‍ر‌ا‌ ًۗ ‌وَمَا‌ يَذَّكَّرُ‌ ‌إِلاَّ‌ ‌أ‍ُ‍‌وْلُو‌ا‌الأَلْبَابِ
Wa Mā 'Anfaqtum Min Nafaqatin 'Aw Nadhartum Min Nadhrin Fa'inna Allāha Ya`lamuhu ۗ Wa Mā Lilžžālimīna Min 'Anşārin 2-270 இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். وَمَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍فَ‍‍قْ‍‍تُمْ مِ‍‌‍نْ نَفَ‍‍قَ‍‍ةٍ ‌أَ‌وْ‌ نَذَ‌رْتُمْ مِ‍‌‍نْ نَذْ‌ر‌‌ٍ‌ فَإِنَّ ‌اللَّ‍‍هَ يَعْلَمُ‍‍هُ ۗ ‌وَمَا‌ لِل‍‍ظَّ‍‍الِم‍‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ ‌أَ‌ن‍‍صَ‍‍ا‌رٍ
'In Tub Aş-Şadaqāti Fani`immā Hiya ۖ Wa 'In Tukhfūhā Wa Tu'utūhā Al-Fuqarā'a Fahuwa Khayrun Lakum ۚ Wa Yukaffiru `Ankum Min Sayyi'ātikum Wa ۗ Allāhu Bimā Ta`malūna Khabīrun 2-271 தான தர்மங்களை நீங்கள் வெளிப்டையாகச் செய்தால் அதுவும் நல்;லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்க இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். إِ‌نْ تُ‍‍بْ‍‍دُ‌و‌ا‌ال‍‍صَّ‍‍دَ‍قَ‍‍اتِ فَنِعِ‍‍مَّ‍‍ا‌ هِيَ ۖ ‌وَ‌إِ‌نْ تُ‍‍خْ‍‍فُوهَا‌ ‌وَتُؤْتُوهَا‌ ‌الْفُ‍‍قَ‍‍ر‍َ‍‌ا‌ءَ‌ فَهُوَ‌ خَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَكُمْ ۚ ‌وَيُكَفِّ‍‍ر‍ُ‍‌ عَ‍‌‍نْ‍‍كُمْ مِ‍‌‍نْ سَيِّئ‍‍َ‍‍اتِكُمْ ۗ ‌وَ‌اللَّهُ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ خَ‍‍بِيرٌ
Laysa `Alayka Hudāhum Wa Lakinna Allāha Yahdī Man Yashā'u ۗ Wa Mā Tunfiqū Min Khayrin Fali'anfusikum ۚ Wa Mā Tunfiqūna 'Illā Abtighā'a Wajhi Allāhi Wa Mā ۚ Tunfiqū Min Khayrin Yuwaffa 'Ilaykum Wa 'Antum Lā Tužlamūna 2-272 (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். لَ‍‍يْ‍‍سَ عَلَ‍‍يْ‍‍كَ هُدَ‌اهُمْ ‌وَلَكِ‍‍نَّ ‌اللَّ‍‍هَ يَهْدِي مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۗ ‌وَمَا‌ تُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌‌ٍ‌ فَلِأَ‌ن‍‍فُسِكُمْ ۚ ‌وَمَا‌ تُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ ‌إِلاَّ‌ ‌ابْ‍‍تِ‍‍غَ‍‍ا‌ءَ‌ ‌وَجْ‍‍هِ ‌اللَّ‍‍هِ ۚ ‌وَمَا‌ تُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌ٍ‌ يُوَفَّ ‌إِلَيْكُمْ ‌وَ‌أَ‌نْ‍‍تُمْ لاَ‌ تُ‍‍ظْ‍‍لَمُونَ
Lilfuqarā'i Al-Ladhīna 'Uĥşirū Fī Sabīli Allāhi Lā Yastaţī`ūna Đarbāan Al-'Arđi Yaĥsabuhumu Al-Jāhilu 'Aghniyā'a Mina At-Ta`affufi Ta`rifuhum Bisīmāhum Lā Yas'alūna An-Nāsa 'Ilĥāfāan ۗ Wa Mā Tunfiqū Min Khayrin Fa'inna Allāha Bihi `Alīmun 2-273 பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். لِلفُ‍‍قَ‍‍ر‍َ‍‌ا‌ءِ‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌أُحْ‍‍صِ‍‍رُ‌و‌ا‌ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ لاَ‌ يَسْتَ‍‍طِ‍‍يع‍‍ُ‍ونَ ضَ‍‍رْبا‌‌ ً‌ فِي ‌الأَ‌رْ‍ضِ يَحْسَبُهُمُ ‌الْجَاهِلُ ‌أَ‍‍غْ‍‍نِي‍‍َ‍ا‌ءَ‌ مِنَ ‌ال‍‍تَّعَفُّفِ تَعْ‍‍رِفُهُمْ بِسِيمَاهُمْ لاَ‌ يَسْأَل‍‍ُ‍ونَ ‌ال‍‍نّ‍‍َ‍اسَ ‌إِلْحَافا‌ ًۗ ‌وَمَا‌ تُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍و‌ا‌ مِ‍‌‍نْ خَ‍‍يْ‍‍ر‌‌ٍ‌ فَإِنَّ ‌اللَّ‍‍هَ بِ‍‍هِ عَلِيمٌ
Al-Ladhīna Yunfiqūna 'Amwālahum Bil-Layli Wa An-Nahāri Siran Wa `Alāniyatan Falahum 'Ajruhum `Inda Rabbihim Wa Lā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 2-274 யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். الَّذ‍ِ‍ي‍‍نَ يُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍ونَ ‌أَمْوَ‌الَهُمْ بِ‍ال‍‍لَّ‍‍يْ‍‍لِ ‌وَ‌ال‍‍نَّ‍‍ه‍‍َ‍ا‌ر‍ِ‍‌ سِ‍‍ر‍ّ‍‌ا‌ ً‌ ‌وَعَلاَنِيَة‌ ً‌ فَلَهُمْ ‌أَجْ‍‍رُهُمْ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌‍رَبِّهِمْ ‌وَلاَ‌ خَ‍‍وْفٌ عَلَيْهِمْ ‌وَلاَ‌ هُمْ يَحْزَنُونَ
Al-Ladhīna Ya'kulūna Ar-Ribā Lā Yaqūmūna 'Illā Kamā Yaqūmu Al-Ladhī Yatakhabbaţuhu Ash-Shayţānu Mina Al-Massi ۚ Dhālika Bi'annahum Qālū 'Innamā Al-Bay`u Mithlu Ar-Ribā ۗ Wa 'Aĥalla Allāhu Al-Bay`a Wa Ĥarrama Ar-Ribā ۚ Faman Jā'ahu Maw`ižatun Min Rabbihintahá Falahu Mā Salafa Wa 'Amruhu~ 'Ilá Allāhi ۖ Wa Man `Āda Fa'ūlā'ika 'Aşĥābu An-Nāri ۖ Hum Fīhā Khālidūna 2-275 யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். الَّذ‍ِ‍ي‍‍نَ يَأْكُل‍‍ُ‍ونَ ‌ال‍‍رِّبَا‌ لاَ‌ يَ‍‍قُ‍‍وم‍‍ُ‍ونَ ‌إِلاَّ‌ كَمَا‌ يَ‍‍قُ‍‍ومُ ‌الَّذِي يَتَ‍‍خَ‍‍بَّ‍‍طُ‍‍هُ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انُ مِنَ ‌الْمَسِّ ۚ ‌ذَلِكَ بِأَنَّ‍‍هُمْ قَ‍‍الُ‍‍و‌ا‌ ‌إِنَّ‍‍مَا‌ ‌الْبَ‍‍يْ‍‍عُ مِثْلُ ‌ال‍‍رِّبَا‌ ۗ ‌وَ‌أَحَلَّ ‌اللَّ‍‍هُ ‌الْبَ‍‍يْ‍‍عَ ‌وَحَ‍رَّمَ ‌ال‍‍رِّبَا‌ ۚ فَمَ‍‌‍نْ ج‍‍َ‍ا‌ءَهُ مَوْعِ‍‍ظَ‍‍ةٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّ‍‍هِ فَا‌ن‍‍تَهَى‌ فَلَ‍‍هُ مَا‌ سَلَفَ ‌وَ‌أَمْرُهُ~ُ ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ ۖ ‌وَمَ‍‌‍نْ ع‍‍َ‍ا‌دَ‌ فَأ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌أَ‍صْ‍‍ح‍‍َ‍ابُ ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ۖ هُمْ فِيهَا‌ خَ‍‍الِدُ‌ونَ
Yamĥaqu Allāhu Ar-Ribā Wa Yurbī Aş-Şadaqāti Wa ۗ Allāhu Lā Yuĥibbu Kulla Kaffārin 'Athīmin 2-276 அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. يَمْحَ‍‍قُ ‌اللَّ‍‍هُ ‌ال‍‍رِّبَا‌ ‌وَيُرْبِي ‌ال‍‍صَّ‍‍دَ‍قَ‍‍اتِ ۗ ‌وَ‌اللَّهُ لاَ‌ يُحِبُّ كُلَّ كَفّ‍‍َ‍ا‌رٍ‌ ‌أَثِيمٍ
'Inna Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Wa 'Aqāmū Aş-Şalāata Wa 'Ātaw Az-Zakāata Lahum 'Ajruhum `Inda Rabbihim Wa Lā Khawfun `Alayhim Wa Lā Hum Yaĥzanūna 2-277 யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ ‌وَ‌أَ‍قَ‍‍امُو‌ا‌ال‍‍صَّ‍‍لاَةَ ‌وَ‌آتَوْ‌ا‌ ‌ال‍‍زَّك‍‍َ‍اةَ لَهُمْ ‌أَجْ‍‍رُهُمْ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌‍رَبِّهِمْ ‌وَلاَ‌ خَ‍‍وْفٌ عَلَيْهِمْ ‌وَلاَ‌ هُمْ يَحْزَنُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū Attaqū Allaha Wa Dharū Mā Baqiya Mina Ar-Ribā 'In Kuntum Mu'uminīna 2-278 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌ذَ‌رُ‌و‌ا‌ مَا‌ بَ‍‍قِ‍‍يَ مِنَ ‌ال‍‍رِّبَ‍‍ا‌ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ مُؤْمِنِينَ
Fa'in Lam Taf`alū Fa'dhanū Biĥarbin Mina Allāhi Wa Rasūlihi ۖ Wa 'In Tubtum Falakum Ru'ūsu 'Amwālikum Lā Tažlimūna Wa Lā Tužlamūna 2-279 இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். فَإِ‌نْ لَمْ تَفْعَلُو‌ا‌ فَأْ‌ذَنُو‌ا‌ بِحَرْبٍ‌ مِنَ ‌اللَّ‍‍هِ ‌وَ‌‍رَسُولِ‍‍هِ ۖ ‌وَ‌إِ‌نْ تُ‍‍بْ‍‍تُمْ فَلَكُمْ ‌رُ‌ء‍ُ‍‌وسُ ‌أَمْوَ‌الِكُمْ لاَ‌ تَ‍‍ظْ‍‍لِم‍‍ُ‍ونَ ‌وَلاَ‌ تُ‍‍ظْ‍‍لَمُونَ
Wa 'In Kāna Dhū `Usratin Fanažiratun 'Ilá Maysaratin ۚ Wa 'An Taşaddaqū Khayrun Lakum ۖ 'In Kuntum Ta`lamūna 2-280 அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும். وَ‌إِ‌نْ ك‍‍َ‍انَ ‌ذُ‌و‌ عُسْ‍رَة‌‍ٍ‌ فَنَ‍‍ظِ‍رَة‌‍ٌ‌ ‌إِلَى‌ مَيْسَ‍رَةٍۚ ‌وَ‌أَ‌نْ تَ‍‍صَ‍‍دَّ‍‍قُ‍‍و‌اخَ‍‍يْ‍‍ر‌ٌ‌ لَكُمْ ۖ ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ تَعْلَمُونَ
Wa Attaqū Yawmāan Turja`ūna Fīhi 'Ilá Allāhi ۖ Thumma Tuwaffá Kullu Nafsin Mā Kasabat Wa Hum Lā Yužlamūna 2-281 தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌ يَوْما‌‌ ً‌ تُرْجَع‍‍ُ‍ونَ ف‍‍ِ‍ي‍‍هِ ‌إِلَى‌ ‌اللَّ‍‍هِ ۖ ثُ‍‍مَّ تُوَفَّى‌ كُلُّ نَفْسٍ‌ مَا‌ كَسَبَتْ ‌وَهُمْ لاَ‌ يُ‍‍ظْ‍‍لَمُونَ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Idhā Tadāyantum Bidaynin 'Ilá 'Ajalin Musamman Fāktubūhu ۚ Wa Līaktub Baynakum Kātibun Bil-`Adli ۚ Wa Lā Ya'ba Kātibun 'An Yaktuba Kamā `Allamahu Allāhu ۚ Falyaktub Wa Līumlili Al-Ladhī `Alayhi Al-Ĥaqqu Wa Līattaqi Allāha Rabbahu Wa Lā Yabkhas Minhu Shay'āan ۚ Fa'in Kāna Al-Ladhī `Alayhi Al-Ĥaqqu Safīhāan 'Aw Đa`īfāan 'Aw Lā Yastaţī`u 'An Yumilla Huwa Falyumlil Walīyuhu Bil-`Adli ۚ Wa Astash/hidū Shahīdayni Min Rijālikum ۖ Fa'in Lam Yakūnā Rajulayni Farajulun Wa Amra'atāni Mimman Tarđawna Mina Ash-Shuhadā'i 'An Tađilla 'Iĥdāhumā Fatudhakkira 'Iĥdāhumā Al-'Ukhۚ Wa Lā Ya'ba Ash-Shuhadā'u 'Idhā Mā Du`ū ۚ Wa Lā Tas'amū 'An Taktubūhu Şaghīrāan 'Aw Kabīrāan 'Ilá 'Ajalihi ۚ Dhālikum 'Aqsaţu `Inda Allāhi Wa 'Aqwamu Lilshshahādati Wa 'Adná 'Allā Tartābū ۖ 'Illā 'An Takūna Tijāratan Ĥāđiratan Tudīrūnahā Baynakum Falaysa `Alaykum Junāĥun 'Allā Taktubūhā ۗ Wa 'Ash/hidū 'Idhā Tabāya`tum ۚ Wa Lā Yuđārra Kātibun Wa Lā Shahīdun ۚ Wa 'In Taf`alū Fa'innahu Fusūqun Bikum ۗ Wa Attaqū Allaha ۖ Wa Yu`allimukumu Allāhu Wa ۗ Allāhu Bikulli Shay'in `Alīmun 2-282 ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். يَ‍‍ا‌ ‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ تَدَ‌ايَ‍‌‍ن‍‍تُمْ بِدَيْ‍‍ن‌‍ٍ‌ ‌إِلَ‍‍ى‌ ‌أَجَلٍ‌ مُسَ‍‍مّ‍‍ى‌‌ ً‌ فَاكْتُب‍‍ُ‍وهُ ۚ ‌وَلْيَكْتُ‍‍بْ بَيْنَكُمْ كَاتِب‌‍ٌ‌ بِ‍الْعَ‍‍دْلِ ۚ ‌وَلاَ‌ يَأْبَ كَاتِبٌ ‌أَ‌نْ يَكْتُبَ كَمَا‌ عَلَّمَهُ ‌اللَّ‍‍هُ ۚ فَلْيَكْتُ‍‍بْ ‌وَلْيُمْلِلِ ‌الَّذِي عَلَ‍‍يْ‍‍هِ ‌الْحَ‍‍قُّ ‌وَلْيَتَّ‍‍قِ ‌اللَّ‍‍هَ ‌‍رَبَّ‍‍هُ ‌وَلاَ‌ يَ‍‍بْ‍‍‍‍خَ‍‍سْ مِ‍‌‍نْ‍‍هُ شَ‍‍يْ‍‍ئا‌‌ ًۚ فَإِ‌نْ ك‍‍َ‍انَ ‌الَّذِي عَلَ‍‍يْ‍‍هِ ‌الْحَ‍‍قُّ سَفِيهاً‌ ‌أَ‌وْ‌ ضَ‍‍عِيفاً‌ ‌أَ‌وْ‌ لاَ‌ يَسْتَ‍‍طِ‍‍ي‍‍عُ ‌أَ‌نْ يُمِلَّ هُوَ‌ فَلْيُمْلِلْ ‌وَلِيُّ‍‍هُ بِ‍الْعَ‍‍دْلِ ۚ ‌وَ‌اسْتَشْهِدُ‌و‌ا‌ شَهِيدَيْ‍‍نِ مِ‍‌‍نْ ‌رِجَالِكُمْ ۖ فَإِ‌نْ لَمْ يَكُونَا‌ ‌‍رَجُلَ‍‍يْ‍‍نِ فَ‍رَجُلٌ‌ ‌وَ‌امْ‍رَ‌أَت‍‍َ‍انِ مِ‍‍مَّ‍‍‌‍نْ تَرْ‍ضَ‍‍وْنَ مِنَ ‌ال‍‍شُّهَد‍َ‍‌ا‌ءِ‌ ‌أَ‌نْ تَ‍‍ضِ‍‍لَّ ‌إِحْدَ‌اهُمَا‌ فَتُذَكِّ‍‍ر‍َ‍‌ ‌إِحْدَ‌اهُمَا‌ ‌الأُ‍خْ‍رَ‌ى‌ ۚ ‌وَلاَ‌ يَأْبَ ‌ال‍‍شُّهَد‍َ‍‌ا‌ءُ‌ ‌إِ‌ذَ‌ا‌ مَا‌ ‌دُعُو‌اۚ ‌وَلاَ‌ تَسْأَمُ‍‍و‌ا‌ ‌أَ‌نْ تَكْتُب‍‍ُ‍وهُ صَ‍‍غِ‍‍ي‍‍ر‌اً‌ ‌أَ‌وْ‌ كَبِي‍‍ر‌ا‌‌ ً‌ ‌إِلَ‍‍ى‌ ‌أَجَلِ‍‍هِ ۚ ‌ذَلِكُمْ ‌أَ‍قْ‍‍سَ‍‍طُ عِ‍‌‍نْ‍‍دَ‌ ‌اللَّ‍‍هِ ‌وَ‌أَ‍قْ‍‍وَمُ لِلشَّهَا‌دَةِ ‌وَ‌أَ‌دْنَ‍‍ى‌ ‌أَلاَّ‌ تَرْتَابُ‍‍و‌اۖ ‌إِلاَّ‌ ‌أَ‌نْ تَك‍‍ُ‍ونَ تِجَا‌‍رَةً حَاضِ‍رَة‌ ً‌ تُدِيرُ‌ونَهَا‌ بَيْنَكُمْ فَلَ‍‍يْ‍‍سَ عَلَيْكُمْ جُن‍‍َ‍احٌ ‌أَلاَّ‌ تَكْتُبُوهَا‌ ۗ ‌وَ‌أَشْهِدُ‌و‌ا‌ ‌إِ‌ذَ‌ا‌ تَبَايَعْتُمْ ۚ ‌وَلاَ‌ يُ‍‍ضَ‍‍ا‌‍رَّ‌ كَاتِبٌ‌ ‌وَلاَ‌ شَه‍‍ِ‍ي‍‍د‌ٌۚ ‌وَ‌إِ‌نْ تَفْعَلُو‌ا‌ فَإِنَّ‍‍هُ فُس‍‍ُ‍و‍ق‍‍‌‍ٌ‌ بِكُمْ ۗ ‌وَ‌اتَّ‍‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ ۖ ‌وَيُعَلِّمُكُمُ ‌اللَّ‍‍هُ ۗ ‌وَ‌اللَّهُ بِكُلِّ شَ‍‍يْءٍ‌ عَلِيمٌ
Wa 'In Kuntum `Alá Safarin Wa Lam Tjidū Kātibāan Farihānun Maqbūđatun ۖ Fa'in 'Amina Ba`đukum Ba`đāan Falyu'uaddi Al-Ladhī A'utumina 'Amānatahu Wa Līattaqi Allāha Rabbahu ۗ Wa Lā Taktumū Ash-Shahādata ۚ Wa Man Yaktumhā Fa'innahu~thimun Qalbuhu Wa ۗ Allāhu Bimā Ta`malūna `Alīmun 2-283 இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான். وَ‌إِ‌نْ كُ‍‌‍ن‍‍تُمْ عَلَى‌ سَفَر‌ٍ‌ ‌وَلَمْ تجِدُ‌و‌ا‌ كَاتِبا‌‌ ً‌ فَ‍‍رِه‍‍َ‍انٌ‌ مَ‍‍قْ‍‍بُوضَ‍‍ة‌‍ٌۖ فَإِ‌نْ ‌أَمِنَ بَعْ‍‍ضُ‍‍كُمْ بَعْ‍‍ض‍‍ا‌‌ ً‌ فَلْيُؤَ‌دِّ‌ ‌الَّذِي ‌ا‌ؤْتُمِنَ ‌أَمَانَتَ‍‍هُ ‌وَلْيَتَّ‍‍قِ ‌اللَّ‍‍هَ ‌‍رَبَّ‍‍هُ ۗ ‌وَلاَ‌ تَكْتُمُو‌ا‌ال‍‍شَّهَا‌دَةَ ۚ ‌وَمَ‍‌‍نْ يَكْتُمْهَا‌ فَإِنَّ‍‍هُ~ُ ‌آثِم‌‍ٌقَ‍‍لْبُ‍‍هُ ۗ ‌وَ‌اللَّهُ بِمَا‌ تَعْمَل‍‍ُ‍ونَ عَلِيمٌ
Lillāh Mā Fī As-Samāwāti Wa Mā Fī Al-'Arđi ۗ Wa 'In Tubdū Mā Fī 'Anfusikum 'Aw Tukhfūhu Yuĥāsibkum Bihi Allāhu ۖ Fayaghfiru Liman Yashā'u Wa Yu`adhdhibu Man Yashā'u Wa ۗ Allāhu `Alá Kulli Shay'in Qadīrun 2-284 வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன். ‍لِلَّهِ مَا‌ فِي ‌ال‍‍سَّمَا‌و‍َ‍‌اتِ ‌وَمَا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ ۗ ‌وَ‌إِ‌نْ تُ‍‍بْ‍‍دُ‌و‌ا‌ مَا‌ فِ‍‍ي ‌أَ‌ن‍‍فُسِكُمْ ‌أَ‌وْ‌ تُ‍‍خْ‍‍ف‍‍ُ‍وهُ يُحَاسِ‍‍بْ‍‍كُمْ بِهِ ‌اللَّ‍‍هُ ۖ فَيَ‍‍غْ‍‍فِ‍‍ر‍ُ‍‌ لِمَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌وَيُعَذِّبُ مَ‍‌‍نْ يَش‍‍َ‍ا‌ءُ‌ ۗ ‌وَ‌اللَّهُ عَلَى‌ كُلِّ شَ‍‍يْء‌‌ٍقَ‍‍دِيرٌ
'Āmana Ar-Rasūlu Bimā 'Unzila 'Ilayhi Min Rabbihi Wa Al-Mu'uminūna ۚ Kullun 'Āmana Billāhi Wa Malā'ikatihi Wa Kutubihi Wa Rusulihi Lā Nufarriqu Bayna 'Aĥadin Min Rusulihi ۚ Wa Qālū Sami`nā Wa 'Aţa`nā ۖ Ghufnaka Rabbanā Wa 'Ilayka Al-Maşīru 2-285 (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். آمَنَ ‌ال‍رَّس‍‍ُ‍ولُ بِمَ‍‍ا‌ ‌أُ‌ن‍‍زِلَ ‌إِلَ‍‍يْ‍‍هِ مِ‍‌‍نْ ‌‍رَبِّ‍‍هِ ‌وَ‌الْمُؤْمِن‍‍ُ‍ونَ ۚ كُلّ‌‍ٌ‌ ‌آمَنَ بِ‍اللَّ‍‍هِ ‌وَمَلاَئِكَتِ‍‍هِ ‌وَكُتُبِ‍‍هِ ‌وَ‌رُسُلِ‍‍هِ لاَ‌ نُفَرِّ‍‍قُ بَ‍‍يْ‍‍نَ ‌أَحَد‌ٍ‌ مِ‍‌‍نْ ‌رُسُلِ‍‍هِ ۚ ‌وَ‍قَ‍‍الُو‌ا‌ سَمِعْنَا‌ ‌وَ‌أَ‍طَ‍‍عْنَا‌ ۖ غُ‍‍فْ‍رَ‌انَكَ ‌‍رَبَّنَا‌ ‌وَ‌إِلَ‍‍يْ‍‍كَ ‌الْمَ‍‍صِ‍‍يرُ
Lā Yukallifu Allāhu Nafsāan 'Illā Wus`ahā ۚ Lahā Mā Kasabat Wa `Alayhā Mā Aktasabat ۗ Rabbanā Lā Tu'uākhidhnā 'In Nasīnā 'Aw 'Akhţa'nā ۚ Rabbanā Wa Lā Taĥmil `Alaynā 'Işan Kamā Ĥamaltahu `Alá Al-Ladhīna Min Qablinā ۚ Rabbanā Wa Lā Tuĥammilnā Mā Lā Ţāqata Lanā Bihi ۖ Wa A`fu `Annā Wa Aghfir Lanā Wa Arĥamnā ۚ 'Anta Mawlānā Fānşurnā `Alá Al-Qawmi Al-Kāfirīna 2-286 அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" لاَ‌ يُكَلِّفُ ‌اللَّ‍‍هُ نَفْسا‌‌ ً‌ ‌إِلاَّ‌ ‌وُسْعَهَا‌ ۚ لَهَا‌ مَا‌ كَسَبَتْ ‌وَعَلَيْهَا‌ مَا‌ ‌اكْتَسَبَتْ ۗ ‌‍رَبَّنَا‌ لاَ‌ تُؤ‍َ‍‌اخِ‍‍ذْنَ‍‍ا‌ ‌إِ‌نْ نَسِينَ‍‍ا‌ ‌أَ‌وْ‌ ‌أَ‍خْ‍‍طَ‍‍أْنَا‌ ۚ ‌‍رَبَّنَا‌ ‌وَلاَ‌ تَحْمِلْ عَلَيْنَ‍‍ا‌ ‌إِصْ‍‍ر‌ا‌‌ ً‌ كَمَا‌ حَمَلْتَ‍‍هُ عَلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِنَا‌ ۚ ‌‍رَبَّنَا‌ ‌وَلاَ‌ تُحَ‍‍مِّ‍‍لْنَا‌ مَا‌ لاَ‌ طَ‍‍اقَ‍‍ةَ لَنَا‌ بِ‍‍هِ ۖ ‌وَ‌اعْفُ عَ‍‍نَّ‍‍ا‌ ‌وَ‌اغْ‍‍فِ‍‍رْ‌ لَنَا‌ ‌وَ‌ا‌رْحَمْنَ‍‍اۚ ‌أَ‌نْ‍‍تَ مَوْلاَنَا‌ فَا‌ن‍‍صُ‍‍رْنَا‌ عَلَى‌ ‌الْ‍‍قَ‍‍وْمِ ‌الْكَافِ‍‍رِينَ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah