Wa Al-Mursalāti `Urfāan  | 77-1 தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக | وَالْمُرْسَلاَتِ عُرْفا ً |
Fāl`āşifāti `Aşfāan  | 77-2 வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)- | فَالْعَاصِفَاتِ عَصْفا ً |
Wa An-Nāshirāti Nashrāan  | 77-3 (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக- | وَالنَّاشِرَاتِ نَشْرا ً |
Fālfāriqāti Farqāan  | 77-4 (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)- | فَالْفَارِقَاتِ فَرْقا ً |
Fālmulqiyāti Dhikrāan  | 77-5 (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)- | فَالْمُلْقِيَاتِ ذِكْرا ً |
`Udhrāan 'Aw Nudhrāan  | 77-6 (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்) | عُذْراً أَوْ نُذْرا ً |
'Innamā Tū`adūna Lawāqi`un  | 77-7 நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும். | إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِع ٌ |
Fa'idhā An-Nujūmu Ţumisat  | 77-8 இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது- | فَإِذَا النُّجُومُ طُمِسَتْ |
Wa 'Idhā As-Samā'u Furijat  | 77-9 மேலும், வானம் பிளக்கப்படும் போது- | وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ |
Wa 'Idhā Al-Jibālu Nusifat  | 77-10 அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது- | وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ |
Wa 'Idhā Ar-Rusulu 'Uqqitat  | 77-11 மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது- | وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ |
L'ayyi Yawmin 'Ujjilat  | 77-12 எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன? | لأَيِّ يَوْمٍ أُجِّلَتْ |
Liyawmi Al-Faşli  | 77-13 தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான். | لِيَوْمِ الْفَصْلِ |
Wa Mā 'Adrāka Mā Yawmu Al-Faşli  | 77-14 மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது? | وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-15 (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
'Alam Nuhliki Al-'Awwalīna  | 77-16 முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா? | أَلَمْ نُهْلِكِ الأَوَّلِينَ |
Thumma Nutbi`uhumu Al-'Ākhirīna  | 77-17 பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம். | ثُمَّ نُتْبِعُهُمُ الآخِرِينَ |
Kadhālika Naf`alu Bil-Mujrimīna  | 77-18 குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்). | كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-19 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
'Alam Nakhluqkum Min Mā'in Mahīnin  | 77-20 அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? | أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاء ٍ مَهِين ٍ |
Faja`alnāhu Fī Qarārin Makīnin  | 77-21 பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம். | فَجَعَلْنَاه ُُ فِي قَرَار ٍ مَكِين ٍ |
'Ilá Qadarin Ma`lūmin  | 77-22 ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை. | إِلَى قَدَر ٍ مَعْلُوم ٍ |
Faqadarnā Fani`ma Al-Qādirūna  | 77-23 இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர். | فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-24 பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
'Alam Naj`ali Al-'Arđa Kifātāan  | 77-25 பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா? | أَلَمْ نَجْعَلِ الأَرْضَ كِفَاتا ً |
'Aĥyā'an Wa 'Amwātāan  | 77-26 உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). | أَحْيَاء ً وَأَمْوَاتا ً |
Wa Ja`alnā Fīhā Rawāsiya Shāmikhātin Wa 'Asqaynākum Mā'an Furātāan  | 77-27 அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். | وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَات ٍ وَأَسْقَيْنَاكُمْ مَاء ً فُرَاتا ً |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-28 பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
Anţaliqū 'Ilá Mā Kuntum Bihi Tukadhdhibūna  | 77-29 "நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). | انطَلِقُوا إِلَى مَا كُنتُمْ بِه ِِ تُكَذِّبُونَ |
Anţaliqū 'Ilá Žillin Dhī Thalāthi Shu`abin  | 77-30 மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக. | انطَلِقُوا إِلَى ظِلّ ٍ ذِي ثَلاَثِ شُعَب ٍ |
Lā Žalīlin Wa Lā Yughnī Mina Al-Lahabi  | 77-31 (அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல. | لاَ ظَلِيل ٍ وَلاَ يُغْنِي مِنَ اللَّهَبِ |
'Innahā Tarmī Bishararin Kālqaşri  | 77-32 நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும். | إِنَّهَا تَرْمِي بِشَرَر ٍ كَالْقَصْرِ |
Ka'annahu Jimālatun Şufrun  | 77-33 நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும். | كَأَنَّه ُُ جِمَالَة ٌ صُفْر ٌ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-34 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
Hādhā Yawmu Lā Yanţiqūna  | 77-35 இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள். | هَذَا يَوْمُ لاَ يَنطِقُونَ |
Wa Lā Yu'udhanu Lahum Faya`tadhirūna  | 77-36 அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். | وَلاَ يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-37 பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
Hādhā Yawmu Al-Faşli Jama`nākum Wa Al-'Awwalīna  | 77-38 இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்). | هَذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ وَالأَوَّلِينَ |
Fa'in Kāna Lakum Kaydun Fakīdūni  | 77-39 எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள். | فَإِنْ كَانَ لَكُمْ كَيْد ٌ فَكِيدُونِ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-40 பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
'Inna Al-Muttaqīna Fī Žilālin Wa `Uyūnin  | 77-41 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள். | إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلاَل ٍ وَعُيُون ٍ |
Wa Fawākiha Mimmā Yashtahūna  | 77-42 இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு. | وَفَوَاكِه ََ مِمَّا يَشْتَهُونَ |
Kulū Wa Ashrabū Hanī'āan Bimā Kuntum Ta`malūna  | 77-43 "நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்). | كُلُوا وَاشْرَبُوا هَنِيئا ً بِمَا كُنتُمْ تَعْمَلُونَ |
'Innā Kadhālika Najzī Al-Muĥsinyna  | 77-44 நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம். | إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنينَ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-45 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
Kulū Wa Tamatta`ū Qalīlāan 'Innakum Mujrimūna  | 77-46 (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே. | كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلا ً إِنَّكُمْ مُجْرِمُونَ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-47 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
Wa 'Idhā Qīla Lahumu Arka`ū Lā Yarka`ūna  | 77-48 'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள். | وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لاَ يَرْكَعُونَ |
Waylun Yawma'idhin Lilmukadhdhibīna  | 77-49 பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். | وَيْل ٌ يَوْمَئِذ ٍ لِلْمُكَذِّبِينَ |
Fabi'ayyi Ĥadīthin Ba`dahu Yu'uminūna  | 77-50 எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்? | فَبِأَيِّ حَدِيث ٍ بَعْدَه ُُ يُؤْمِنُونَ |