Roman Script    Reciting key words            Previous Sūrah    Quraan Index    Home  

47) Sūrat Muĥammad

Printed format

47) سُورَة مُحَمَّد

Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Al-Ladhīna Kafarū Wa Şaddū `An Sabīli Allāhi 'Ađalla 'A`mālahum 47-1 எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான். الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌وَ‍صَ‍‍دُّ‌و‌ا‌ عَ‍‌‍نْ سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌أَ‍ضَ‍‍لَّ ‌أَعْمَالَهُمْ
Wa Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Wa 'Āmanū Bimā Nuzzila `Alá Muĥammadin Wa Huwa Al-Ĥaqqu Min Rabbihim ۙ Kaffara `Anhum Sayyi'ātihim Wa 'Aşlaĥa Bālahum 47-2 ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ ‌وَ‌آمَنُو‌ا‌ بِمَا‌ نُزِّلَ عَلَى‌ مُحَ‍‍مَّ‍‍د‌ٍ‌ ‌وَهُوَ‌ ‌الْحَ‍‍قُّ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ۙ كَفَّ‍رَ‌ عَ‍‌‍نْ‍‍هُمْ سَيِّئ‍‍َ‍‍اتِهِمْ ‌وَ‌أَ‍صْ‍‍لَحَ بَالَهُمْ
Dhālika Bi'anna Al-Ladhīna Kafarū Attaba`ū Al-Bāţila Wa 'Anna Al-Ladhīna 'Āmanū Attaba`ū Al-Ĥaqqa Min Rabbihim ۚ Kadhālika Yađribu Allāhu Lilnnāsi 'Amthālahum 47-3 இது ஏனெனில்; நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான். ذَلِكَ بِأَنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌اتَّبَعُو‌ا‌الْبَاطِ‍‍لَ ‌وَ‌أَنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌اتَّبَعُو‌ا‌الْحَ‍‍قَّ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ۚ كَذَلِكَ يَ‍‍ضْ‍‍رِبُ ‌اللَّ‍‍هُ لِل‍‍نّ‍‍َ‍اسِ ‌أَمْثَالَهُمْ
Fa'idhā Laqītumu Al-Ladhīna Kafarū Fađarba Ar-Riqābi Ĥattá 'Idhā 'Athkhantumūhum Fashuddū Al-Wathāqa Fa'immā Mannāan Ba`du Wa 'Immā Fidā'an Ĥattá Tađa`a Al-Ĥarbu 'Awzāraۚ Dhālika Wa Law Yashā'u Allāhu Lāntaşara Minhum Wa Lakin Liyabluwa Ba`đakum Biba`đin Wa ۗ Al-Ladhīna Qutilū Fī Sabīli Allāhi Falan Yuđilla 'A`mālahum 47-4 (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான். فَإِ‌ذ‌ا‌ لَ‍‍قِ‍‍يتُمُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ فَ‍‍ضَ‍‍رْبَ ‌ال‍‍رِّ‍‍قَ‍‍ابِ حَتَّ‍‍ى‌ ‌إِ‌ذَ‌ا‌ ‌أَثْ‍‍خَ‍‍‌‍ن‍‍تُمُوهُمْ فَشُدُّ‌و‌ا‌الْوَث‍‍َ‍اقَ فَإِمَّ‍‍ا‌ مَ‍‍نّ‍‍ا‌ ً‌ بَعْدُ‌ ‌وَ‌إِمَّ‍‍ا‌ فِد‍َ‍‌ا‌ءً‌ حَتَّى‌ تَ‍‍ضَ‍‍عَ ‌الْحَرْبُ ‌أَ‌وْ‌زَ‌ا‌‍رَهَا‌ ۚ ‌ذَلِكَ ‌وَلَوْ‌ يَش‍‍َ‍ا‌ءُ‌ ‌اللَّ‍‍هُ لاَ‌ن‍‍تَ‍‍صَ‍رَ‌ مِ‍‌‍نْ‍‍هُمْ ‌وَلَكِ‍‌‍نْ لِيَ‍‍بْ‍‍لُوَ‌ بَعْ‍‍ضَ‍‍كُمْ بِبَعْ‍‍ضٍۗ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ قُ‍‍تِلُو‌ا‌ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ فَلَ‍‌‍نْ يُ‍‍ضِ‍‍لَّ ‌أَعْمَالَهُمْ
Sayahdīhim Wa Yuşliĥu Bālahum 47-5 அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான். سَيَهْدِيهِمْ ‌وَيُ‍‍صْ‍‍لِحُ بَالَهُمْ
Wa Yudkhiluhumu Al-Jannata `Arrafahā Lahum 47-6 மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான். وَيُ‍‍دْ‍‍خِ‍‍لُهُمُ ‌الْجَ‍‍نَّ‍‍ةَ عَ‍رَّفَهَا‌ لَهُمْ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'In Tanşurū Allaha Yanşurkum Wa Yuthabbit 'Aqdāmakum 47-7 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌إِ‌نْ تَ‍‌‍ن‍‍صُ‍‍رُ‌و‌ا‌اللَّ‍‍هَ يَ‍‌‍ن‍‍صُ‍‍رْكُمْ ‌وَيُثَبِّتْ ‌أَ‍قْ‍‍دَ‌امَكُمْ
Wa Al-Ladhīna Kafarū Fata`sāan Lahum Wa 'Ađalla 'A`mālahum 47-8 அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ فَتَعْسا‌ ً‌ لَهُمْ ‌وَ‌أَ‍ضَ‍‍لَّ ‌أَعْمَالَهُمْ
Dhālika Bi'annahum Karihū Mā 'Anzala Allāhu Fa'aĥbaţa 'A`mālahum 47-9 ஏனெனில்; அல்லாஹ் இற்ககிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான். ذَلِكَ بِأَنَّ‍‍هُمْ كَ‍‍رِهُو‌ا‌ مَ‍‍ا‌ ‌أَ‌ن‍‍زَلَ ‌اللَّ‍‍هُ فَأَحْبَ‍‍طَ ‌أَعْمَالَهُمْ
'Afalam Yasīrū Fī Al-'Arđi Fayanžurū Kayfa Kāna `Āqibatu Al-Ladhīna Min Qablihim ۚ Dammara Allāhu `Alayhim ۖ Wa Lilkāfirīna 'Amthāluhā 47-10 அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு. أَفَلَمْ يَسِيرُ‌و‌ا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ فَيَ‍‌‍ن‍‍ظُ‍‍رُ‌و‌ا‌ كَ‍‍يْ‍‍فَ ك‍‍َ‍انَ عَاقِ‍‍بَةُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ قَ‍‍بْ‍‍لِهِمْ ۚ ‌دَمَّ‍‍‍رَ‌اللَّ‍‍هُ عَلَيْهِمْ ۖ ‌وَلِلْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌أَمْثَالُهَا
Dhālika Bi'anna Allāha Mawlá Al-Ladhīna 'Āmanū Wa 'Anna Al-Kāfirīna Lā Mawlá Lahum 47-11 இது ஏனெனில்; அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான். ذَلِكَ بِأَنَّ ‌اللَّ‍‍هَ مَوْلَى‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَ‌أَنَّ ‌الْكَافِ‍‍ر‍ِ‍ي‍‍نَ لاَ‌ مَوْلَى‌ لَهُمْ
'Inna Allāha Yudkhilu Al-Ladhīna 'Āmanū Wa `Amilū Aş-Şāliĥāti Jannātin Tajrī Min Taĥtihā Al-'Anhāru Wa ۖ Al-Ladhīna Kafarū Yatamatta`ūna Wa Ya'kulūna Kamā Ta'kulu Al-'An`ām Wa An-Nāru Mathwan Lahum 47-12 நிச்சயமாக அல்லாஹ்; எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும். إِنَّ ‌اللَّ‍‍هَ يُ‍‍دْ‍‍خِ‍‍لُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ ‌وَعَمِلُو‌ا‌ال‍‍صَّ‍‍الِح‍‍َ‍اتِ جَ‍‍نّ‍‍َ‍ات‌‍ٍ‌ تَ‍‍جْ‍‍رِي مِ‍‌‍نْ تَحْتِهَا‌ ‌الأَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌رُ‌ ۖ ‌وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ يَتَمَتَّع‍‍ُ‍ونَ ‌وَيَأْكُل‍‍ُ‍ونَ كَمَا‌ تَأْكُلُ ‌الأَنعَام ‌وَ‌ال‍‍نّ‍‍َ‍ا‌رُ‌ مَثْو‌ى‌ ً‌ لَهُمْ
Wa Ka'ayyin Min Qaryatin Hiya 'Ashaddu Qūwatan Min Qaryatika Allatī 'Akhrajatka 'Ahlaknāhum Falā Nāşira Lahum 47-13 மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விடடு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை. وَكَأَيِّ‍‌‍نْ مِ‍‌‍نْ قَ‍‍رْيَةٍ هِيَ ‌أَشَدُّ‌ قُ‍‍وَّة ً‌ مِ‍‌‍نْ قَ‍‍رْيَتِكَ ‌الَّتِ‍‍ي ‌أَ‍خْ‍رَجَتْكَ ‌أَهْلَكْنَاهُمْ فَلاَ‌ نَاصِ‍‍ر‍َ‍‌ لَهُمْ
'Afaman Kāna `Alá Bayyinatin Min Rabbihi Kaman Zuyyina Lahu Sū'u `Amalihi Wa Attaba`ū 'Ahwā'ahum 47-14 எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா? أَفَمَ‍‌‍نْ ك‍‍َ‍انَ عَلَى‌ بَيِّنَةٍ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّ‍‍هِ كَمَ‍‌‍نْ ‌زُيِّنَ لَ‍‍هُ س‍‍ُ‍و‌ءُ‌ عَمَلِ‍‍هِ ‌وَ‌اتَّبَعُ‍‍و‌ا‌ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ
Mathalu Al-Jannati Allatī Wu`ida Al-Muttaqūna ۖ Fīhā 'Anhārun Min Mā'in Ghayri 'Āsinin Wa 'Anhārun Min Labanin Lam Yataghayyar Ţa`muhu Wa 'Anhārun Min Khamrin Ladhdhatin Lilshshāribīna Wa 'Anhārun Min `Asalin Muşaffan ۖ Wa Lahum Fīhā Min Kulli Ath-Thamarāti Wa Maghfiratun Min Rabbihim ۖ Kaman Huwa Khālidun An-Nāri Wa Suqū Mā'an Ĥamīmāan Faqaţţa`a 'Am`ā'ahum 47-15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? مَثَلُ ‌الْجَ‍‍نَّ‍‍ةِ ‌الَّتِي ‌وُعِدَ‌ ‌الْمُتَّ‍‍قُ‍‍ونَ ۖ فِيهَ‍‍ا‌ ‌أَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌ر‌ٌ‌ مِ‍‌‍نْ م‍‍َ‍ا‌ءٍ‌ غَ‍‍يْ‍‍ر‍ِ‍‌ ‌آسِنٍ‌ ‌وَ‌أَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌ر‌ٌ‌ مِ‍‌‍نْ لَبَن‍ٍ‌ لَمْ يَتَ‍‍غَ‍‍يَّرْ‌ طَ‍‍عْمُ‍‍هُ ‌وَ‌أَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌ر‌ٌ‌ مِ‍‌‍نْ خَ‍‍مْر‌ٍ‌ لَذَّة‍ٍ‌ لِلشَّا‌رِب‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌أَ‌نْ‍‍ه‍‍َ‍ا‌ر‌ٌ‌ مِ‍‌‍نْ عَسَلٍ‌ مُ‍‍صَ‍‍فّى‌ ًۖ ‌وَلَهُمْ فِيهَا‌ مِ‍‌‍نْ كُلِّ ‌ال‍‍ثَّمَ‍رَ‍‌اتِ ‌وَمَ‍‍غْ‍‍فِ‍رَةٌ‌ مِ‍‌‍نْ ‌‍رَبِّهِمْ ۖ كَمَ‍‌‍نْ هُوَ‌ خَ‍‍الِد‌‌ٌ‌ فِي ‌ال‍‍نّ‍‍َ‍ا‌ر‍ِ‍‌ ‌وَسُ‍‍قُ‍‍و‌ا‌ م‍‍َ‍ا‌ءً‌ حَمِيما‌‌ ً‌ فَ‍‍قَ‍‍طَّ‍‍عَ ‌أَمْع‍‍َ‍ا‌ءَهُمْ
Wa Minhum Man Yastami`u 'Ilayka Ĥattá 'Idhā Kharajū Min `Indika Qālū Lilladhīna 'Ūtū Al-`Ilma Mādhā Qāla 'Ānifāan ۚ 'Ūlā'ika Al-Ladhīna Ţaba`a Allāhu `Alá Qulūbihim Wa Attaba`ū 'Ahwā'ahum 47-16 இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து "அவர் சற்று முன் என்ன கூறினார்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர். وَمِ‍‌‍نْ‍‍هُمْ مَ‍‌‍نْ يَسْتَمِعُ ‌إِلَ‍‍يْ‍‍كَ حَتَّ‍‍ى‌ ‌إِ‌ذَ‌ا‌ خَ‍رَجُو‌ا‌ مِ‍‌‍نْ عِ‍‌‍نْ‍‍دِكَ قَ‍‍الُو‌ا‌ لِلَّذ‍ِ‍ي‍‍نَ ‌أ‍ُ‍‌وتُو‌ا‌الْعِلْمَ مَا‌ذَ‌ا‌ قَ‍‍الَ ‌آنِفاً‌ ۚ ‌أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ طَ‍‍بَعَ ‌اللَّ‍‍هُ عَلَى‌ قُ‍‍لُوبِهِمْ ‌وَ‌اتَّبَعُ‍‍و‌ا‌ ‌أَهْو‍َ‍‌ا‌ءَهُمْ
Wa Al-Ladhīna Ahtadaw Zādahum Hudan Wa 'Ātāhum Taqwhum 47-17 மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான். وَ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌اهْتَدَ‌وْ‌ا‌ ‌زَ‌ا‌دَهُمْ هُ‍‍د‌ى‌ ً‌ ‌وَ‌آتَاهُمْ تَ‍‍قْ‍‍و‌اهُمْ
Fahal Yanžurūna 'Illā As-Sā`ata 'An Ta'tiyahum Baghtatan ۖ Faqad Jā'a 'Ashţuhā ۚ Fa'anná Lahum 'Idhā Jā'at/hum Dhikhum 47-18 எனவே இவர்கள் தங்கள் பால் திடுகூறாக (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும். فَهَلْ يَ‍‌‍نْ‍‍‍‍ظُ‍‍ر‍ُ‍‌ونَ ‌إِلاَّ‌ ‌ال‍‍سَّاعَةَ ‌أَ‌نْ تَأْتِيَهُمْ بَ‍‍غْ‍‍تَة‌ ًۖ فَ‍‍قَ‍‍دْ‌ ج‍‍َ‍ا‌ءَ‌ ‌أَشْ‍رَ‌اطُ‍‍هَا‌ ۚ فَأَنَّ‍‍ى‌ لَهُمْ ‌إِ‌ذَ‌ا‌ ج‍‍َ‍ا‌ءَتْهُمْ ‌ذِكْ‍رَ‌اهُمْ
Fā`lam 'Annahu Lā 'Ilāha 'Illā Al-Lahu Wa Astaghfir Lidhanbika Wa Lilmu'uminīna Wa Al-Mu'umināti Wa ۗ Allāhu Ya`lamu Mutaqallabakum Wa Mathwākum 47-19 ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். فَاعْلَمْ ‌أَنَّ‍‍هُ لاَ‌ ‌إِلَهَ ‌إِلاَّ‌ ‌اللَّ‍‍هُ ‌وَ‌اسْتَ‍‍غْ‍‍فِ‍‍رْ‌ لِذَ‌نْ‍‍بِكَ ‌وَلِلْمُؤْمِن‍‍ِ‍ي‍‍نَ ‌وَ‌الْمُؤْمِن‍‍َ‍اتِ ۗ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ مُتَ‍‍قَ‍‍لَّبَكُمْ ‌وَمَثْوَ‌اكُمْ
Wa Yaqūlu Al-Ladhīna 'Āmanū Lawlā Nuzzilat Sūratun ۖ Fa'idhā 'Unzilat Sūratun Muĥkamatun Wa Dhukira Fīhā Al-Qitālu ۙ Ra'ayta Al-Ladhīna Fī Qulūbihim Marađun Yanžurūna 'Ilayka Nažara Al-Maghshīyi `Alayhi Mina Al-Mawti ۖ Fa'awlá Lahum 47-20 இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்; "(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?" என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதேதா அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான். وَيَ‍قُ‍‍ولُ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُو‌ا‌ لَوْلاَ‌ نُزِّلَتْ سُو‌‍رَة‌‍ٌۖ فَإِ‌ذَ‌ا‌ ‌أُ‌ن‍‍زِلَتْ سُو‌‍رَةٌ‌ مُحْكَمَةٌ‌ ‌وَ‌ذُكِ‍‍ر‍َ‍‌ فِيهَا‌ ‌الْ‍‍قِ‍‍ت‍‍َ‍الُ ۙ ‌‍رَ‌أَيْ‍‍تَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ فِي قُ‍‍لُوبِهِمْ مَ‍رَضٌ‌ يَ‍‌‍ن‍‍ظُ‍‍ر‍ُ‍‌ونَ ‌إِلَ‍‍يْ‍‍كَ نَ‍‍ظَ‍رَ‌الْمَ‍‍غْ‍‍شِيِّ عَلَ‍‍يْ‍‍هِ مِنَ ‌الْمَ‍‍وْتِ ۖ فَأَ‌وْلَى‌ لَهُمْ
Ţā`atun Wa Qawlun Ma`rūfun ۚ Fa'idhā `Azama Al-'Amru Falaw Şadaqū Allaha Lakāna Khayan Lahum 47-21 (ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும். طَ‍‍اعَةٌ‌ ‌وَ‍قَ‍‍وْلٌ‌ مَعْر‍ُ‍‌وف‌‍ٌۚ فَإِ‌ذَ‌ا‌ عَزَمَ ‌الأَمْرُ‌ فَلَوْ‌ صَ‍‍دَ‍قُ‍‍و‌ا‌اللَّ‍‍هَ لَك‍‍َ‍انَ خَ‍‍يْر‌ا‌ ً‌ لَهُمْ
Fahal `Asaytum 'In Tawallaytum 'An Tufsidū Fī Al-'Arđi Wa Tuqaţţi`ū 'Arĥāmakum 47-22 (போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடுவும் முனைவீர்களோ? فَهَلْ عَسَيْتُمْ ‌إِ‌نْ تَوَلَّيْتُمْ ‌أَ‌نْ تُفْسِدُ‌و‌ا‌ فِي ‌الأَ‌رْ‍ضِ ‌وَتُ‍‍قَ‍‍طِّ‍‍عُ‍‍و‌ا‌ ‌أَ‌رْحَامَكُمْ
'Ūlā'ika Al-Ladhīna La`anahumu Allāhu Fa'aşammahum Wa 'A`má 'Abşārahum 47-23 இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான். أ‍ُ‍‌وْل‍‍َ‍ائِكَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ لَعَنَهُمُ ‌اللَّ‍‍هُ فَأَ‍صَ‍‍مَّ‍‍هُمْ ‌وَ‌أَعْمَ‍‍ى‌ ‌أَبْ‍‍‍‍صَ‍‍ا‌‍رَهُمْ
'Afalā Yatadabbarūna Al-Qur'āna 'Am `Alá Qulūbin 'Aqfāluhā 47-24 மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? أَفَلاَ‌ يَتَدَبَّر‍ُ‍‌ونَ ‌الْ‍‍قُ‍‍رْ‌آنَ ‌أَمْ عَلَى‌ قُ‍‍ل‍‍ُ‍وبٍ ‌أَ‍قْ‍‍فَالُهَا
'Inna Al-Ladhīna Artaddū `Alá 'Adrihim Min Ba`di Mā Tabayyana Lahumu Al-Hudá ۙ Ash-Shayţānu Sawwala Lahum Wa 'Amlá Lahum 47-25 நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌ا‌رْتَدُّ‌و‌ا‌ عَلَ‍‍ى‌ ‌أَ‌دْبَا‌رِهِمْ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ تَبَيَّنَ لَهُمُ ‌الْهُدَ‌ى‌ ۙ ‌ال‍‍شَّيْ‍‍طَ‍‍انُ سَوَّلَ لَهُمْ ‌وَ‌أَمْلَى‌ لَهُمْ
Dhālika Bi'annahum Qālū Lilladhīna Karihū Mā Nazzala Allāhu Sanuţī`ukum Fī Ba`đi Al-'Amri Wa ۖ Allāhu Ya`lamu 'Israhum 47-26 இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், "நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான். ذَلِكَ بِأَنَّ‍‍هُمْ قَ‍‍الُو‌ا‌ لِلَّذ‍ِ‍ي‍‍نَ كَ‍‍رِهُو‌ا‌ مَا‌ نَزَّلَ ‌اللَّ‍‍هُ سَنُ‍‍طِ‍‍يعُكُمْ فِي بَعْ‍‍ضِ ‌الأَمْ‍‍ر‍ِ‍‌ ۖ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ ‌إِسْ‍رَ‌ا‌‍رَهُمْ
Fakayfa 'Idhā Tawaffat/humu Al-Malā'ikatu Yađribūna Wujūhahum Wa 'Adrahum 47-27 ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும், فَكَ‍‍يْ‍‍فَ ‌إِ‌ذَ‌ا‌ تَوَفَّتْهُمُ ‌الْمَلاَئِكَةُ يَ‍‍ضْ‍‍رِب‍‍ُ‍ونَ ‌وُجُوهَهُمْ ‌وَ‌أَ‌دْبَا‌‍رَهُمْ
Dhālika Bi'annahumu Attaba`ū Mā 'Askhaţa Allāha Wa Karihū Riđwānahu Fa'aĥbaţa 'A`mālahum 47-28 இது ஏனெனில்; நிச்சயமாக இவர்கள் அல்லஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான். ذَلِكَ بِأَنَّ‍‍هُمُ ‌اتَّبَعُو‌ا‌ مَ‍‍ا‌ ‌أَسْ‍‍خَ‍‍طَ ‌اللَّ‍‍هَ ‌وَكَ‍‍رِهُو‌ا‌رِ‍‍ضْ‍‍وَ‌انَ‍‍هُ فَأَحْبَ‍‍طَ ‌أَعْمَالَهُمْ
'Am Ĥasiba Al-Ladhīna Fī Qulūbihim Marađun 'An Lan Yukhrija Allāhu 'Ađghānahum 47-29 அல்லது எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா? أَمْ حَسِبَ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ فِي قُ‍‍لُوبِهِمْ مَ‍رَضٌ ‌أَ‌نْ لَ‍‌‍نْ يُ‍‍خْ‍‍رِجَ ‌اللَّ‍‍هُ ‌أَ‍ضْ‍‍غَ‍‍انَهُمْ
Wa Law Nashā'u La'araynākahum Fala`araftahum Bisīmāhum ۚ Wa Lata`rifannahum Fī Laĥni Al-Qawli Wa ۚ Allāhu Ya`lamu 'A`mālakum 47-30 அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்களை செய்கைகளை நன்கறிகிறான். وَلَوْ‌ نَش‍‍َ‍ا‌ءُ‌ لَأَ‌‍رَيْنَاكَهُمْ فَلَعَ‍رَفْتَهُمْ بِسِيمَاهُمْ ۚ ‌وَلَتَعْ‍‍رِفَ‍‍نَّ‍‍هُمْ فِي لَحْنِ ‌الْ‍‍قَ‍‍وْلِ ۚ ‌وَ‌اللَّهُ يَعْلَمُ ‌أَعْمَالَكُمْ
Wa Lanabluwannakum Ĥattá Na`lama Al-Mujāhidīna Minkum Wa Aş-Şābirīna Wa Nabluwa 'Akhrakum 47-31 அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக). وَلَنَ‍‍بْ‍‍لُوَنَّ‍‍كُمْ حَتَّى‌ نَعْلَمَ ‌الْمُجَاهِد‍ِ‍ي‍‍نَ مِ‍‌‍نْ‍‍كُمْ ‌وَ‌ال‍‍صَّ‍‍ابِ‍‍ر‍ِ‍ي‍‍نَ ‌وَنَ‍‍بْ‍‍لُوَ‌ ‌أَ‍خْ‍‍بَا‌‍رَكُمْ
'Inna Al-Ladhīna Kafarū Wa Şaddū `An Sabīli Allāhi Wa Shāqqū Ar-Rasūla Min Ba`di Mā Tabayyana Lahumu Al-Hudá Lan Yađurrū Allaha Shay'āan Wa Sayuĥbiţu 'A`mālahum 47-32 நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கன்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌وَ‍صَ‍‍دُّ‌و‌ا‌ عَ‍‌‍نْ سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ‌وَش‍‍َ‍اقُّ‍‍و‌ا‌ال‍رَّس‍‍ُ‍ولَ مِ‍‌‍نْ بَعْدِ‌ مَا‌ تَبَيَّنَ لَهُمُ ‌الهُدَ‌ى‌ لَ‍‌‍نْ يَ‍‍ضُ‍‍رُّ‌و‌ا‌اللَّ‍‍هَ شَ‍‍يْ‍‍ئا‌ ً‌ ‌وَسَيُحْبِ‍‍طُ ‌أَعْمَالَهُمْ
Yā 'Ayyuhā Al-Ladhīna 'Āmanū 'Aţī`ū Allaha Wa 'Aţī`ū Ar-Rasūla Wa Lā Tubţilū 'A`mālakum 47-33 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். ي‍‍َ‍ا‌أَيُّهَا‌ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ ‌آمَنُ‍‍و‌ا‌ ‌أَ‍طِ‍‍يعُو‌ا‌اللَّ‍‍هَ ‌وَ‌أَ‍طِ‍‍يعُو‌ا‌ال‍رَّس‍‍ُ‍ولَ ‌وَلاَ‌ تُ‍‍بْ‍‍‍‍طِ‍‍لُ‍‍و‌ا‌ ‌أَعْمَالَكُمْ
'Inna Al-Ladhīna Kafarū Wa Şaddū `An Sabīli Allāhi Thumma Mātū Wa Hum Kuffārun Falan Yaghfira Allāhu Lahum 47-34 நிச்சியமாக, எவர்களை நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். إِنَّ ‌الَّذ‍ِ‍ي‍‍نَ كَفَرُ‌و‌ا‌ ‌وَ‍صَ‍‍دُّ‌و‌ا‌ عَ‍‌‍نْ سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ ثُ‍‍مَّ مَاتُو‌ا‌ ‌وَهُمْ كُفّ‍‍َ‍ا‌ر‌‌ٌ‌ فَلَ‍‌‍نْ يَ‍‍غْ‍‍فِ‍‍ر‍َ‍‌ ‌اللَّ‍‍هُ لَهُمْ
Falā Tahinū Wa Tad`ū 'Ilá As-Salmi Wa 'Antumu Al-'A`lawna Wa Allāhu Ma`akum Wa Lan Yatirakum 'A`mālakum 47-35 (முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான். فَلاَ‌ تَهِنُو‌ا‌ ‌وَتَ‍‍دْعُ‍‍و‌ا‌ ‌إِلَى‌ ‌ال‍‍سَّلْمِ ‌وَ‌أَ‌نْ‍‍تُمُ ‌الأَعْلَ‍‍وْنَ ‌وَ‌اللَّهُ مَعَكُمْ ‌وَلَ‍‌‍نْ يَتِ‍رَكُمْ ‌أَعْمَالَكُمْ
'Innamā Al-Ĥayāatu Ad-Dunyā La`ibun Wa Lahwun ۚ Wa 'In Tu'uminū Wa Tattaqū Yu'utikum 'Ujūrakum Wa Lā Yas'alkum 'Amwālakum 47-36 திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அறிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை. إِنَّ‍‍مَا‌ ‌الحَي‍‍َ‍اةُ ‌ال‍‍دُّ‌نْ‍‍يَا‌ لَعِبٌ‌ ‌وَلَهْو‌ٌۚ ‌وَ‌إِ‌نْ تُؤْمِنُو‌ا‌ ‌وَتَتَّ‍‍قُ‍‍و‌ا‌ يُؤْتِكُمْ ‌أُجُو‌‍رَكُمْ ‌وَلاَ‌ يَسْأَلْكُمْ ‌أَمْوَ‌الَكُمْ
'In Yas'alkumūhā Fayuĥfikum Tabkhalū Wa Yukhrij 'Ađghānakum 47-37 அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி வடுவான். إِ‌نْ يَسْأَلْكُمُوهَا‌ فَيُحْفِكُمْ تَ‍‍بْ‍‍‍‍خَ‍‍لُو‌ا‌ ‌وَيُ‍‍خْ‍‍رِج‍ْ ‌أَ‍ضْ‍‍غَ‍‍انَكُمْ
Hā'antum Hā'uulā' Tud`awna Litunfiqū Fī Sabīli Allāhi Faminkum Man Yabkhalu Wa Man ۖ Yabkhal Fa'innamā Yabkhalu `An Nafsihi Wa Allāhu ۚ Al-Ghanīyu Wa 'Antumu Al-Fuqarā'u Wa 'In ۚ Tatawallaw Yastabdil Qawmāan Ghayrakum Thumma Lā Yakūnū 'Amthālakum 47-38 அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். ه‍‍َ‍ا‌أَ‌نْ‍‍تُمْ ه‍‍َ‍ا‌ؤُلاَ‌ء‌ تُ‍‍دْعَ‍‍وْنَ لِتُ‍‌‍ن‍‍فِ‍‍قُ‍‍و‌ا‌ فِي سَب‍‍ِ‍ي‍‍لِ ‌اللَّ‍‍هِ فَمِ‍‌‍نْ‍‍كُمْ مَ‍‌‍نْ يَ‍‍بْ‍‍‍‍خَ‍‍لُ ‌وَمَ‍‌‍نْ ۖ يَ‍‍بْ‍‍‍‍خَ‍‍لْ فَإِنَّ‍‍مَا‌ يَ‍‍بْ‍‍‍‍خَ‍‍لُ عَ‍‌‍نْ نَفْسِ‍‍هِ ‌وَ‌اللَّهُ ۚ ‌الْ‍‍غَ‍‍نِيُّ ‌وَ‌أَ‌نْ‍‍تُمُ ‌الْفُ‍‍قَ‍‍ر‍َ‍‌ا‌ءُ‌ ‌وَ‌إِ‌نْ ۚ تَتَوَلَّوْ‌ا‌ يَسْتَ‍‍بْ‍‍دِلْ قَ‍‍وْماً‌ غَ‍‍يْ‍رَكُمْ ثُ‍‍مَّ لاَ‌ يَكُونُ‍‍و‌ا‌ ‌أَمْثَالَكُمْ
Toggle thick letters. Most people make the mistake of thickening thin letters in the words that have other (highlighted) thick letter Toggle to highlight thick letters خصضغطقظ رَ
Next Sūrah