Wa Aş-Şāffāti Şaffāan  | 37-1 அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக, | وَالصَّافَّاتِ صَفّا ً |
Fālzzājirāti Zajrāan  | 37-2 பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக, | فَالزَّاجِرَاتِ زَجْرا ً |
Fālttāliyāti Dhikrāan  | 37-3 (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக, | فَالتَّالِيَاتِ ذِكْرا ً |
'Inna 'Ilahakum Lawāĥidun  | 37-4 நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே. | إِنَّ إِلَهَكُمْ لَوَاحِد ٌ |
Rabbu As-Samāwāti Wa Al-'Arđi Wa Mā Baynahumā Wa Rabbu Al-Mashāriqi  | 37-5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன். | رَبُّ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ |
'Innā Zayyannā As-Samā'a Ad-Dunyā Bizīnatin Al-Kawākib  | 37-6 நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். | إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَة ٍ الْكَوَاكِب |
Wa Ĥifžāan Min Kulli Shayţānin Māridin  | 37-7 (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). | وَحِفْظا ً مِنْ كُلِّ شَيْطَان ٍ مَارِد ٍ |
Lā Yassamma`ūna 'Ilá Al-Mala'i Al-'A`lá Wa Yuqdhafūna Min Kulli Jānibin  | 37-8 (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். | لاَ يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِب ٍ |
Duĥūrāan Wa Lahum `Adhābun Wa Aşibun  | 37-9 (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு. | دُحُورا ً وَلَهُمْ عَذَاب ٌ وَاصِب ٌ |
'Illā Man Khaţifa Al-Khaţfata Fa'atba`ahu Shihābun Thāqibāun  | 37-10 (ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும். | إِلاَّ مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَه ُُ شِهَاب ٌ ثَاقِبا ٌ |
Fāstaftihim 'Ahum 'Ashaddu Khalqāan 'Am Man Khalaqnā 'Innā Khalaqnāhum Min Ţīnin Lāzibin  | 37-11 ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம். | فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقاً أَمْ مَنْ خَلَقْنَا إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِين ٍ لاَزِب ٍ |
Bal `Ajibta Wa Yaskharūna  | 37-12 (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர். | بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ |
Wa 'Idhā Dhukkirū Lā Yadhkurūna  | 37-13 அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை. | وَإِذَا ذُكِّرُوا لاَ يَذْكُرُونَ |
Wa 'Idhā Ra'aw 'Āyatan Yastaskhirūna  | 37-14 அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர். | وَإِذَا رَأَوْا آيَة ً يَسْتَسْخِرُونَ |
Wa Qālū 'In Hādhā 'Illā Siĥrun Mubīnun  | 37-15 "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர். | وَقَالُوا إِنْ هَذَا إِلاَّ سِحْر ٌ مُبِين ٌ |
'A'idhā Mitnā Wa Kunnā Turābāan Wa `Ižāmāan 'A'innā Lamab`ūthūna  | 37-16 "நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.) | أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابا ً وَعِظَاماً أَئِنَّا لَمَبْعُوثُونَ |
'Awa'ābā'uunā Al-'Awwalūna  | 37-17 "அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.) | أَوَآبَاؤُنَا الأَوَّلُونَ |
Qul Na`am Wa 'Antum Dākhirūna  | 37-18 "ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும். | قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَاخِرُونَ |
Fa'innamā Hiya Zajratun Wāĥidatun Fa'idhā Hum Yanžurūna  | 37-19 ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள். | فَإِنَّمَا هِيَ زَجْرَة ٌ وَاحِدَة ٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ |
Wa Qālū Yā Waylanā Hādhā Yawmu Ad-Dīni  | 37-20 (அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர். | وَقَالُوا يَاوَيْلَنَا هَذَا يَوْمُ الدِّينِ |
Hādhā Yawmu Al-Faşli Al-Ladhī Kuntum Bihi Tukadhdhibūna  | 37-21 "நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!" (என்று அவர்களுக்குக் கூறப்படும்.) | هَذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنتُمْ بِه ِِ تُكَذِّبُونَ |
Aĥshurū Al-Ladhīna Žalamū Wa 'Azwājahum Wa Mā Kānū Ya`budūna  | 37-22 "அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள். | احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ |
Min Dūni Allāhi Fāhdūhum 'Ilá Şirāţi Al-Jaĥīmi  | 37-23 "அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். | مِنْ دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَى صِرَاطِ الْجَحِيمِ |
Wa Qifūhum 'Innahum Mas'ūlūna  | 37-24 "இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்" (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்) | وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ |
Mā Lakum Lā Tanāşarūna  | 37-25 "உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?" (என்று கேட்கப்படும்). | مَا لَكُمْ لاَ تَنَاصَرُونَ |
Bal Humu Al-Yawma Mustaslimūna  | 37-26 ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள். | بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ |
Wa 'Aqbala Ba`đuhum `Alá Ba`đin Yatasā'alūna  | 37-27 அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள். | وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْض ٍ يَتَسَاءَلُونَ |
Qālū 'Innakum Kuntum Ta'tūnanā `Ani Al-Yamīni  | 37-28 (தம் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள். | قَالُوا إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ |
Qālū Bal Lam Takūnū Mu'uminīna  | 37-29 ("அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!" என்று அ(த்தலை)வர்கள் கூறுவர். | قَالُوا بَلْ لَمْ تَكُونُوا مُؤْمِنِينَ |
Wa Mā Kāna Lanā `Alaykum Min Sulţānin Bal Kuntum Qawmāan Ţāghīna  | 37-30 "அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்." | وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِنْ سُلْطَان ٍ بَلْ كُنتُمْ قَوْما ً طَاغِينَ |
Faĥaqqa `Alaynā Qawlu Rabbinā 'Innā Ladhā'iqūna  | 37-31 "ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்! | فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا إِنَّا لَذَائِقُونَ |
Fa'aghwaynākum 'Innā Kunnā Ghāwīna  | 37-32 "(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்." | فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ |
Fa'innahum Yawma'idhin Fī Al-`Adhābi Mushtarikūna  | 37-33 ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள். | فَإِنَّهُمْ يَوْمَئِذ ٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ |
'Innā Kadhālika Naf`alu Bil-Mujrimīna  | 37-34 குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம். | إِنَّا كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ |
'Innahum Kānū 'Idhā Qīla Lahum Lā 'Ilāha 'Illā Allāhu Yastakbirūna  | 37-35 "அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர். | إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لاَ إِلَهَ~َ إِلاَّ اللَّهُ يَسْتَكْبِرُونَ |
Wa Yaqūlūna 'A'innā Latārikū 'Ālihatinā Lishā`irin Majnūnin  | 37-36 "ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். | وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوا آلِهَتِنَا لِشَاعِر ٍ مَجْنُون ٍ |
Bal Jā'a Bil-Ĥaqqi Wa Şaddaqa Al-Mursalīna  | 37-37 அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார். | بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِينَ |
'Innakum Ladhā'iqū Al-`Adhābi Al-'Alīmi  | 37-38 (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம். | إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ الأَلِيمِ |
Wa Mā Tujzawna 'Illā Mā Kuntum Ta`malūna  | 37-39 ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள். | وَمَا تُجْزَوْنَ إِلاَّ مَا كُنتُمْ تَعْمَلُونَ |
'Illā `Ibāda Allāhi Al-Mukhlaşīna  | 37-40 அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)- | إِلاَّ عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ |
'Ūlā'ika Lahum Rizqun Ma`lūmun  | 37-41 அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. | أُوْلَائِكَ لَهُمْ رِزْق ٌ مَعْلُوم ٌ |
Fawākihu Wa Hum Mukramūna  | 37-42 கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்; | فَوَاكِه ُُ وَهُمْ مُكْرَمُونَ |
Fī Jannāti An-Na`īmi  | 37-43 இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் - | فِي جَنَّاتِ النَّعِيمِ |
`Alá Sururin Mutaqābilīna  | 37-44 ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). | عَلَى سُرُر ٍ مُتَقَابِلِينَ |
Yuţāfu `Alayhim Bika'sin Min Ma`īnin  | 37-45 தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும். | يُطَافُ عَلَيْهِمْ بِكَأْس ٍ مِنْ مَعِين ٍ |
Bayđā'a Ladhdhatin Lilshshāribīna  | 37-46 (அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது. | بَيْضَاءَ لَذَّة ٍ لِلشَّارِبِينَ |
Lā Fīhā Ghawlun Wa Lā Hum `Anhā Yunzafūna  | 37-47 அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். | لاَ فِيهَا غَوْل ٌ وَلاَ هُمْ عَنْهَا يُنزَفُونَ |
Wa `Indahum Qāşirātu Aţ-Ţarfi `Īnun  | 37-48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். | وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِين ٌ |
Ka'annahunna Bayđun Maknūnun  | 37-49 (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். | كَأَنَّهُنَّ بَيْض ٌ مَكْنُون ٌ |
Fa'aqbala Ba`đuhum `Alá Ba`đin Yatasā'alūna  | 37-50 (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். | فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْض ٍ يَتَسَاءَلُونَ |
Qāla Qā'ilun Minhum 'Innī Kāna Lī Qarīnun  | 37-51 அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார். | قَالَ قَائِل ٌ مِنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِين ٌ |
Yaqūlu 'A'innaka Lamina Al-Muşaddiqīna  | 37-52 (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான். | يَقُولُ أَئِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ |
'A'idhā Mitnā Wa Kunnā Turābāan Wa `Ižāmāan 'A'innā Lamadīnūna  | 37-53 "நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?" என்றும் கேட்டான். | أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابا ً وَعِظَاماً أَئِنَّا لَمَدِينُونَ |
Qāla Hal 'Antum Muţţali`ūna  | 37-54 (அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார். | قَالَ هَلْ أَنْتُمْ مُطَّلِعُونَ |
Fāţţala`a Fara'āhu Fī Sawā'i Al-Jaĥīmi  | 37-55 அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார். | فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ |
Qāla Ta-Allāhi 'In Kidta Laturdīni  | 37-56 (அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே! | قَالَ تَاللَّهِ إِنْ كِدْتَ لَتُرْدِينِ |
Wa Lawlā Ni`matu Rabbī Lakuntu Mina Al-Muĥđarīna  | 37-57 "என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன். | وَلَوْلاَ نِعْمَةُ رَبِّي لَكُنتُ مِنَ الْمُحْضَرِينَ |
'Afamā Naĥnu Bimayyitīna  | 37-58 "(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா? | أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ |
'Illā Mawtatanā Al-'Ūlá Wa Mā Naĥnu Bimu`adhdhabīna  | 37-59 "(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று கூறுவார். | إِلاَّ مَوْتَتَنَا الأُولَى وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ |
'Inna Hādhā Lahuwa Al-Fawzu Al-`Ažīmu  | 37-60 நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும். | إِنَّ هَذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ |
Limithli Hādhā Falya`mali Al-`Āmilūna  | 37-61 எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும். | لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ |
'Adhalika Khayrun Nuzulāan 'Am Shajaratu Az-Zaqqūmi  | 37-62 அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா? | أَذَلِكَ خَيْر ٌ نُزُلاً أَمْ شَجَرَةُ الزَّقُّومِ |
'Innā Ja`alnāhā Fitnatan Lilžžālimīna  | 37-63 நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம். | إِنَّا جَعَلْنَاهَا فِتْنَة ً لِلظَّالِمِينَ |
'Innahā Shajaratun Takhruju Fī 'Aşli Al-Jaĥīmi  | 37-64 மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும். | إِنَّهَا شَجَرَة ٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ |
Ţal`uhā Ka'annahu Ru'ūsu Ash-Shayāţīni  | 37-65 அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும். | طَلْعُهَا كَأَنَّه ُُ رُءُوسُ الشَّيَاطِينِ |
Fa'innahum La'ākilūna Minhā Famāli'ūna Minhā Al-Buţūna  | 37-66 நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள். | فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ |
Thumma 'Inna Lahum `Alayhā Lashawbāan Min Ĥamīmin  | 37-67 பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும். | ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبا ً مِنْ حَمِيم ٍ |
Thumma 'Inna Marji`ahum La'ilá Al-Jaĥīmi  | 37-68 அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான். | ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ |
'Innahum 'Alfaw 'Ābā'ahum Đāllīna  | 37-69 நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள். | إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ |
Fahum `Alá 'Āthārihim Yuhra`ūna  | 37-70 ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள். | فَهُمْ عَلَى آثَارِهِمْ يُهْرَعُونَ |
Wa Laqad Đalla Qablahum 'Aktharu Al-'Awwalīna  | 37-71 இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர். | وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الأَوَّلِينَ |
Wa Laqad 'Arsalnā Fīhim Mundhirīna  | 37-72 மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம். | وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِمْ مُنذِرِينَ |
Fānžur Kayfa Kāna `Āqibatu Al-Mundharīna  | 37-73 பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும். | فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنذَرِينَ |
'Illā `Ibāda Allāhi Al-Mukhlaşīna  | 37-74 அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர. | إِلاَّ عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ |
Wa Laqad Nādānā Nūĥun Falani`ma Al-Mujībūna  | 37-75 அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். | وَلَقَدْ نَادَانَا نُوح ٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ |
Wa Najjaynāhu Wa 'Ahlahu Mina Al-Karbi Al-`Ažīmi  | 37-76 ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். | وَنَجَّيْنَاه ُُ وَأَهْلَه ُُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ |
Wa Ja`alnā Dhurrīyatahu Humu Al-Bāqīna  | 37-77 மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். | وَجَعَلْنَا ذُرِّيَّتَه ُُ هُمُ الْبَاقِينَ |
Wa Taraknā `Alayhi Fī Al-'Ākhirīna  | 37-78 மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். | وَتَرَكْنَا عَلَيْهِ فِي الآخِرِينَ |
Salāmun `Alá Nūĥin Fī Al-`Ālamīna  | 37-79 "ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக. | سَلاَمٌ عَلَى نُوح ٍ فِي الْعَالَمِينَ |
'Innā Kadhālika Najzī Al-Muĥsinīna  | 37-80 இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம். | إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ |
'Innahu Min `Ibādinā Al-Mu'uminīna  | 37-81 நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர். | إِنَّه ُُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ |
Thumma 'Aghraqnā Al-'Ākharīna  | 37-82 பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம். | ثُمَّ أَغْرَقْنَا الآخَرِينَ |
Wa 'Inna Min Shī`atihi La'ibrāhīma  | 37-83 நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம். | وَإِنَّ مِنْ شِيعَتِه ِِ لَإِبْرَاهِيمَ |
'Idh Jā'a Rabbahu Biqalbin Salīmin  | 37-84 அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக). | إِذْ جَاءَ رَبَّه ُُ بِقَلْب ٍ سَلِيم ٍ |
'Idh Qāla Li'abīhi Wa Qawmihi Mādhā Ta`budūna  | 37-85 அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது, | إِذْ قَالَ لِأَبِيه ِِ وَقَوْمِه ِِ مَاذَا تَعْبُدُونَ |
'A'ifkāan 'Ālihatan Dūna Allāhi Turīdūna  | 37-86 "அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?" | أَئِفْكا ً آلِهَة ً دُونَ اللَّهِ تُرِيدُونَ |
Famā Žannukum Birabbi Al-`Ālamīna  | 37-87 "அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.) | فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ |
Fanažara Nažratan Fī An-Nujūmi  | 37-88 பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார். | فَنَظَرَ نَظْرَة ً فِي النُّجُومِ |
Faqāla 'Innī Saqīmun  | 37-89 "நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார். | فَقَالَ إِنِّي سَقِيم ٌ |
Fatawallaw `Anhu Mudbirīna  | 37-90 எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர். | فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ |
Farāgha 'Ilá 'Ālihatihim Faqāla 'Alā Ta'kulūna  | 37-91 அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார். | فَرَاغَ إِلَى آلِهَتِهِمْ فَقَالَ أَلاَ تَأْكُلُونَ |
Mā Lakum Lā Tanţiqūna  | 37-92 "உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுĨ |